பகுதி 2 - கடலில் மர்மத் தீ
Picture shows Horse Head Nebula in Orion Constellation; it is 1500 light years away from earth.
( கடலில் தோன்றும் மர்மத் தீ--இரண்டாம் பகுதி--Please read the first part before you read this Second Part)
ஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதில் இந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பதால் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பார்க்கத் தேவை இல்லை. இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.
இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்
1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்) கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.
2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.
பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:
“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”
பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.
கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.
வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.
ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள்? இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.
Picture shows Fire Tornado in Hawaii, USA.
ஆந்திரத்தைப் புயல் தாக்கியபோது ஏற்பட்ட கடல் அலைத் தீ (இதன் விவரம் கட்டுரையின் முதல் பகுதியில் உள்ளது) போல, இனி எதிர்காலத்தில் ஏற்படலாம். உலகம் அழியும் போது குதிரை வடிவில் தோன்றக் கூடும். கலியுக முடிவில் தோன்றப் போகும் கல்கி அவாதாரத்தையும் நாம் குதிரையுடன் சம்பந்தப்படுத்தியே பேசுகிறோம். வெண் புரவியில் வரும் கல்கி பகவான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன.
கட்டுரையை முடிக்கும் முன், சில இலக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்:
1.நதியில் தண்ணீர் குடித்த முனிவரை காட்டு மிருகம் என்று எண்ணி அம்பு எய்திக் கொன்ற தசரதனுக்கு அம்முனிவர் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது தசரதனும் புத்திர சோகத்தால் சாகவேண்டும் என்று. அதைக் கேட்ட தசரதன் மனம் வடவைத் தீயை உள்ளே வைத்திருந்த கடல் போல இருந்தது என்று அழகாக உவமிக்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 9-82). மேலும் பல இடங்களிலும் (11-85) காளிதாசன் வடவைத் தீயை உவமையாகத் தருகிறான்.
2.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்
உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்
3.“Siva’s fiery wrath must still burn in you
Like Fire smouldering deep in the ocean’s depths
Were it not so, how can you burn lovers like me,
When mere ashes is all that is left of you?” --Sakuntala of Kalidasa III-3
4.பதிற்றுபத்து 62 (கபிலர் பாடிய எழாம்பத்து)
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துற போகிய கொற்ற வேந்தே
5.பதிற்றுபத்து 72 (அரிசில் கிழார் பாடிய எட்டாம்பத்து)
பொங்குபிசிர் நுடக்கிய சஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினங்கெழு குரிசில்.
6.கடல் கோள் பற்றி: கலித்தொகை 105 (நல்லுருத்திரன்)
மலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை.
*****************************************
Picture shows Horse Head Nebula in Orion Constellation; it is 1500 light years away from earth.
( கடலில் தோன்றும் மர்மத் தீ--இரண்டாம் பகுதி--Please read the first part before you read this Second Part)
ஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதில் இந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பதால் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பார்க்கத் தேவை இல்லை. இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.
இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்
1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்) கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.
2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.
பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:
“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”
பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.
கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.
வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.
ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள்? இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.
Picture shows Fire Tornado in Hawaii, USA.
ஆந்திரத்தைப் புயல் தாக்கியபோது ஏற்பட்ட கடல் அலைத் தீ (இதன் விவரம் கட்டுரையின் முதல் பகுதியில் உள்ளது) போல, இனி எதிர்காலத்தில் ஏற்படலாம். உலகம் அழியும் போது குதிரை வடிவில் தோன்றக் கூடும். கலியுக முடிவில் தோன்றப் போகும் கல்கி அவாதாரத்தையும் நாம் குதிரையுடன் சம்பந்தப்படுத்தியே பேசுகிறோம். வெண் புரவியில் வரும் கல்கி பகவான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன.
கட்டுரையை முடிக்கும் முன், சில இலக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்:
1.நதியில் தண்ணீர் குடித்த முனிவரை காட்டு மிருகம் என்று எண்ணி அம்பு எய்திக் கொன்ற தசரதனுக்கு அம்முனிவர் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது தசரதனும் புத்திர சோகத்தால் சாகவேண்டும் என்று. அதைக் கேட்ட தசரதன் மனம் வடவைத் தீயை உள்ளே வைத்திருந்த கடல் போல இருந்தது என்று அழகாக உவமிக்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 9-82). மேலும் பல இடங்களிலும் (11-85) காளிதாசன் வடவைத் தீயை உவமையாகத் தருகிறான்.
2.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்
உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்
3.“Siva’s fiery wrath must still burn in you
Like Fire smouldering deep in the ocean’s depths
Were it not so, how can you burn lovers like me,
When mere ashes is all that is left of you?” --Sakuntala of Kalidasa III-3
4.பதிற்றுபத்து 62 (கபிலர் பாடிய எழாம்பத்து)
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துற போகிய கொற்ற வேந்தே
5.பதிற்றுபத்து 72 (அரிசில் கிழார் பாடிய எட்டாம்பத்து)
பொங்குபிசிர் நுடக்கிய சஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினங்கெழு குரிசில்.
6.கடல் கோள் பற்றி: கலித்தொகை 105 (நல்லுருத்திரன்)
மலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை.
*****************************************