நாச்சியார் திருமொழி பாசுரம் 10
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து, அங்கு ஓர் கரி கலற,
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்து இடு என்று - 4
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை,
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - 8.
விளக்கம் :-
கரும்பாகிய வில்லையும் மலர்க்கணைகளையும் உடையவனாய், யாவரையும் காமத்திலே மூட்டுகிற மன்மதனை, ஒன்றுக்கொன்று ஒப்பான கழல்கள் அணிந்த அடிகளை வணங்கி, கம்சன் சபை வாசலிலே நிறுத்தப்பட்ட ஒப்பற்ற குவலயாபீடம் என்ற யானையானது வீறிடும்படியாக, அதன் கொம்பை முரித்து, பகாசூரனுடைய வாயைக் கிழித்துப் போட்ட நீலரத்தினம் போன்ற வடிவழகை உடையவனோடு என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று (வரி 1-4),
மலை போன்ற மாளிகைகள் நிறைந்து தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவரான பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாளுடைய விருப்பமடியாகப் பிறந்த இனிய தமிழ் மாலைகளைப் பாடவல்லவர்கள் அயர்வறும் அமரர்களின் அதிபதியினுடைய (அதிபதி - ஸ்ரீமந்நாராயணன்) திருவடிகளை அடையப் பெறுவர் (வரி 5-8).
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து, அங்கு ஓர் கரி கலற,
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்து இடு என்று - 4
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை,
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - 8.
விளக்கம் :-
கரும்பாகிய வில்லையும் மலர்க்கணைகளையும் உடையவனாய், யாவரையும் காமத்திலே மூட்டுகிற மன்மதனை, ஒன்றுக்கொன்று ஒப்பான கழல்கள் அணிந்த அடிகளை வணங்கி, கம்சன் சபை வாசலிலே நிறுத்தப்பட்ட ஒப்பற்ற குவலயாபீடம் என்ற யானையானது வீறிடும்படியாக, அதன் கொம்பை முரித்து, பகாசூரனுடைய வாயைக் கிழித்துப் போட்ட நீலரத்தினம் போன்ற வடிவழகை உடையவனோடு என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று (வரி 1-4),
மலை போன்ற மாளிகைகள் நிறைந்து தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவரான பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாளுடைய விருப்பமடியாகப் பிறந்த இனிய தமிழ் மாலைகளைப் பாடவல்லவர்கள் அயர்வறும் அமரர்களின் அதிபதியினுடைய (அதிபதி - ஸ்ரீமந்நாராயணன்) திருவடிகளை அடையப் பெறுவர் (வரி 5-8).