• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாகதோஷம் போக்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?

ஒருவரின் வாழ்வில் திருமணம், குழந்தைப் பேறு, தொழிலில் வளர்ச்சி இல்லாமல் இருப்பது, தலைமுறை தலைமுறையாக தொடரும் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பது சர்ப்ப தோஷம் அல்லது நாகதோஷம் ஆகும்.


நம்முடைய முன்னோர்களின் யாராவது பாம்புகளுக்கு தீங்கு செய்திருந்தாலும் அந்த பாவங்கள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நாகதோஷம் போக்கும் நாக சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.

நாகதோஷம் போக்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ?


நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய நாட்கள் வாழ்வில் அடிப்படை ஆதாரமாக இருக்கும் விஷயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கி பலவிதமான நன்மைகளை தரக்கூடியவை ஆகும்.

இந்த நாட்களில் உபவாசமாகவோ இருந்தோ அல்லது எளிமையான உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டோ விரதம் மேற்கொள்ளலாம்.



நாக சதுர்த்தி 2023 :

இயற்கையை, விலங்குகளை வழிபடும் முறை காலம் காலமாக இந்துக்களின் வழிபாட்டு முறையில் உள்ளது. முழு முதற் கடவுளான விநாயகர் துவங்கி, அனைத்து கடவுள்களும் நாகத்துடன் தொடர்புடையாதாகவே உள்ளன. நாக தேவதைகளை வழிபடுவதற்கு உரிய மிகச் சிறந்த நாளான நாக சதுர்த்தி நாள் உள்ளது. நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் வரும். இந்த இரண்டு நாட்களுமே வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும்.*


ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவம் முக்கியமானது திருமணமும், குழந்தை பேரும். இவை இரண்டு எவ்வளவு முயற்சி செய்தும் நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டே போவதற்கு ராகு - கேதுவால் ஏற்படும் தோஷம் காரணமாக இருக்கும். நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், பல தலைமுறைகளாக இருக்கும் சாபங்கள், தோஷங்கள், நாகங்களுக்கு தெரியாமல் தொந்தரவு செய்திருந்தாலும், நாகங்களை கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களாலோ பாதிக்கப்பட்டர்கள் காளஹஸ்தி போன்ற பரிகார தலங்களுக்கு சென்று பூஜைகள், வழிபாடுகள் செய்வது வழக்கம். இப்படி சென்று வழிபட முடியாதவர்கள் நாகத்தால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விலகுவதற்கு வழிபட ஏற்ற நாள், நாக சதுர்த்தி நாளாகும்.


நாக சதுர்த்தி விரத முறை :

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாக சதுர்த்தி நாளன்று அருகில் உள்ள அரச மரத்தடியில் உள்ள நாகர் உருவத்திற்கு மஞ்சள், பால் கொண்டு அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்படி செல்வதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் நாகர் உருவம் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அதுவும் இல்லாதவர்கள் வீட்டிலுள்ள ஏதாவது ஒரு தெய்வத்தின் படத்தை வைத்து வழிபடலாம். நைவேத்தியமாக பாயசம், சுண்டல் வைக்கலாம். முடியாதவர்கள் வெறும் பால் மட்டும் வைத்து அவசியம் வழிபட வேண்டும். நாக பூஜை செய்யும் போது சிறிதளவாவது பால் மண்ணில் பட வேண்டும் என்பது ஐதீகம். அதனால் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட முடியாதவர்கள், சிறிதளவாவது பாலினை மண்ணிலோ அல்லது வீட்டில் வைத்துள்ள பூந்தொட்டியிலோ ஊற்றலாம்.


நாக சதுர்த்தி வழிபாட்டு நேரம் :

இந்த ஆண்டு நாக சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 20 ம் தேதி இரவு 10.27 வரை சதர்த்தி திதி உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 04.30 முதல் 6 ராகு காலம். இது நாக தோஷ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலமாகும். காலையில் பூஜை செய்ய நினைப்பவர்கள் 07.45 முதல் 08.45 மணி வரையிலான நேரத்தில் வழிபாட்டினை செய்யலாம்.

கருட பஞ்சமி வழிபாட்டு முறை :

நாக சதுர்த்தி விரதத்தை நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் கருட பஞ்சமி வழிபாட்டினை யார், யாருக்காக வேண்டுமானாலும் செய்யலாம். கருட பஞ்சமி, நாக பஞ்சமி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பல காலமாக தீராத பிரச்சனைகள், வழக்குகள் ஆகியவை நீங்கும். கருட பஞ்சமி நாளில் வீட்டில் கருடர் படமோ, கருடருடன் இருக்கும் பெருமாள் படமோ இருந்தால் துளசி சாத்தி வழிபட வேண்டும். கருடர் படம் இல்லாதவர்கள் கெளரியின் படத்தையோ அல்லது வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தையோ எடுத்து வாசனை மலர்களை சாற்றி வழிபட வேண்டும்.

நைவேத்தியமாக பாயசம் படைத்து வழிபடலாம். பெருமாளுடைய மந்திரங்கள், கருடர் மந்திரங்கள், கெளரியின் மந்திரங்கள் என எது தெரியுமோ அதை சொல்லி வழிபடவேண்டும். கருட பஞ்சமி இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது.

அன்று இரவு 11.11 வரை பஞ்சமி திதி உள்ளது.

காலை 09.15 முதல் 10.15 வரை பூஜை செய்வதற்கான நல்ல நேரமாகும்.

முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் கருட பஞ்சமி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.



நாக சதுர்த்தி, கருட பஞ்சமியன்று சொல்ல வேண்டிய மந்திரம் :

கெளரி காயத்ரி மந்திரம் :


ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கெளரி ப்ரசோதயாத்.

ஆதிசேஷன் காயத்ரி :

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.

கருட காயத்ரி :

தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

கருட போற்றி :

விண்ணில் நீந்தும் வேந்தனாய் வட்டமிடும்
மண்ணின் மாந்தர்க்கு ஏவும் சக்தியைக் களைந்திடும்
பரந்தாமன் வாகனராய் உயர்ந்வரே! பட்சிராஜனே
மருந்தாய் வருவாய் மருதனை போக்குவாய்ப் போற்றி!
 

Latest ads

Back
Top