நம்பெருமாள் கண்டருளும் திருஅத்யய உற்சவ&#
நம்பெருமாள் கண்டருளும் திருஅத்யய உற்சவம்:
ஸ்ரீமந் நாராயணன் - பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்து ரூபமாய் விளங்கினாலும், நம்மைப் போன்ற சாமான்யர்களால் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால் தீண்டலும் அரிது!
எனவேதான், இந்த கலியுகத்தில் நம்மையெல்லாம் உய்விக்கும்பொருட்டு, எம்பெருமான் தானே உகந்து "அர்ச்சாவதார" மூர்த்திகளாய் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ளான்!
அப்படி அருள்பாலிக்கின்ற 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மையானது "ஸ்ரீரங்கம்" ஆகும்! எம்பெருமான் பரமபதத்தில் அதாவது வைகுந்தத்தில் வீற்றிருக்கும் அதே திருக்கோலத்தில் இங்கே நமக்கு சேவை சாதிக்கின்றான். ஆகையால் ஸ்ரீரங்கத்தை "பூலோக வைகுந்தம்" என்றழைப்பர்!
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் கண்டருளும் எல்லா உற்சவங்களும் விசேஷமாக இருந்தாலும், இந்த திருஅத்யயன உற்சவம் முதன்மையானதாகும். எம்பெருமான் தசாவதாரம் புரிந்தும் மனுஷ்யர்களை திருத்த முடியவில்லை. ஆதலால் ஆழ்வார்கள், ஆசார்யர்களை அவதரிக்கச்செய்து அவர்களுக்கு மயர்வற மதிநலமருளினான்! அப்படிப்பட்ட ஆழ்வார்கள்-ஆசார்யர்களுக்காகவே நம்பெருமாள் இந்த இருபது நாள் உற்சவத்தை கண்டருள்கிறான்!
இதில் முதல் பத்து திருநாட்கள் - பகல்பத்து என்றும் திருமொழித் திருநாள் என்றும் அழைப்பர்! இதில் நம்பெருமாள் திருப்பல்லாண்டு தொடக்கமாக முதலாயிரத்தையும், கலியனின் ஒலிமிக்க பாடல் ஆயிரமும், ஆக 2000 பாசுரங்கள் திருச்செவி சாய்த்து அருளுவன்!
(8/12/2018-17/12/2018)
ஸ்ரீவைகுந்த ஏகாதசி தொடக்கமாக, இரண்டாம் பத்து திருநாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் அழைப்பர்! இதில் நம்பெருமாள், 'நல்லார் நவில்கின்ற, நன்குருகை வந்துத்த நம்மாழ்வாரின்' மறைத்தமிழ் ஆயிரம் பாசுரங்களை அன்வயித்து மகிழ்வன்!
(18/12/2018-27/12/2018)
21ம் திருநாள், இயற்பா சாற்றுமுறை எனப்போற்றப்படும். இதில் நாலாயிரத்தின் மற்ற பாசுரங்கள் முழுவதும் மற்றும் இராமாநுச நூற்றந்தாதி சேவிக்கப்படும்!
(28/12/2018)
நம்பெருமாள் கண்டருளும் திருஅத்யய உற்சவம்:
ஸ்ரீமந் நாராயணன் - பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்து ரூபமாய் விளங்கினாலும், நம்மைப் போன்ற சாமான்யர்களால் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால் தீண்டலும் அரிது!
எனவேதான், இந்த கலியுகத்தில் நம்மையெல்லாம் உய்விக்கும்பொருட்டு, எம்பெருமான் தானே உகந்து "அர்ச்சாவதார" மூர்த்திகளாய் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ளான்!
அப்படி அருள்பாலிக்கின்ற 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மையானது "ஸ்ரீரங்கம்" ஆகும்! எம்பெருமான் பரமபதத்தில் அதாவது வைகுந்தத்தில் வீற்றிருக்கும் அதே திருக்கோலத்தில் இங்கே நமக்கு சேவை சாதிக்கின்றான். ஆகையால் ஸ்ரீரங்கத்தை "பூலோக வைகுந்தம்" என்றழைப்பர்!
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் கண்டருளும் எல்லா உற்சவங்களும் விசேஷமாக இருந்தாலும், இந்த திருஅத்யயன உற்சவம் முதன்மையானதாகும். எம்பெருமான் தசாவதாரம் புரிந்தும் மனுஷ்யர்களை திருத்த முடியவில்லை. ஆதலால் ஆழ்வார்கள், ஆசார்யர்களை அவதரிக்கச்செய்து அவர்களுக்கு மயர்வற மதிநலமருளினான்! அப்படிப்பட்ட ஆழ்வார்கள்-ஆசார்யர்களுக்காகவே நம்பெருமாள் இந்த இருபது நாள் உற்சவத்தை கண்டருள்கிறான்!
இதில் முதல் பத்து திருநாட்கள் - பகல்பத்து என்றும் திருமொழித் திருநாள் என்றும் அழைப்பர்! இதில் நம்பெருமாள் திருப்பல்லாண்டு தொடக்கமாக முதலாயிரத்தையும், கலியனின் ஒலிமிக்க பாடல் ஆயிரமும், ஆக 2000 பாசுரங்கள் திருச்செவி சாய்த்து அருளுவன்!
(8/12/2018-17/12/2018)
ஸ்ரீவைகுந்த ஏகாதசி தொடக்கமாக, இரண்டாம் பத்து திருநாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் அழைப்பர்! இதில் நம்பெருமாள், 'நல்லார் நவில்கின்ற, நன்குருகை வந்துத்த நம்மாழ்வாரின்' மறைத்தமிழ் ஆயிரம் பாசுரங்களை அன்வயித்து மகிழ்வன்!
(18/12/2018-27/12/2018)
21ம் திருநாள், இயற்பா சாற்றுமுறை எனப்போற்றப்படும். இதில் நாலாயிரத்தின் மற்ற பாசுரங்கள் முழுவதும் மற்றும் இராமாநுச நூற்றந்தாதி சேவிக்கப்படும்!
(28/12/2018)