நன்மைகள் அருளும் நரசிம்ம சாஸ்தா
தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். இப்படி ஒரு அபூர்வமான ஆலயம் வேறெங்கும் காணக்கிடைக்காதது என்கிறார்கள். 800 ஆண்டுகள் பழமையானது. நரசிம்மரும் அன்னபூரணியும் இங்கு குடிகொள்ள காரணம் என்ன? மகாவிஷ்ணு பிரகலாதனின் துயர் துடைப்பதற்காக தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்ட புராணக்கதை தெரியும். இரண்யன் பெற்ற வரத்தின்படி, சந்தியா வேளையில் தனது திருக்கரங்களால் அவனைத் தன் மடிமீது இருத்தி அவன் வயிற்றை கிழித்து வதம் செய்தார், நரசிம்மர்.
இரண்யன் அசுரன் அல்லவா? இந்த வதத்தில் அவன் குருதி நரசிம்மர் மீது பட்டதால் அவருக்குக் கோபம் இன்னும் அதிகமானது. மகாஉக்கிரத்துடன் அனல் பறக்கும் கோபத்துடன் இருந்த அவரைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் அஞ்சினர். இதனால் அவரை நெருங்கவே அனைவரும் பயந்தனர். அவரை சாந்தப்படுத்த பாமாலைகள் பாடினர். நரசிம்மரின் கோபம் குறையவில்லை. எனவே அவரைத் தம் பக்தியினால் வரவழைத்த பக்தப் பிரகலாதனிடமே சரணடைந்து அவரின் கோபத்தை தணிக்குமாறு வேண்டி நின்றனர். பிரகலாதனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மரை பலவாறு துதித்தார். பிரகலாதனையும் தன் அருகில் வரவழைத்து அதே மடியில் அமர்த்திக் கொண்டார் அந்தக் கருணாமூர்த்தி! அப்போதும் அவர் கோபம் தணியவில்லை. இந்த உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என எல்லோருமே அஞ்சினர்.
மேலும் படிக்க:
நன்றி: தினகரன்
தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். இப்படி ஒரு அபூர்வமான ஆலயம் வேறெங்கும் காணக்கிடைக்காதது என்கிறார்கள். 800 ஆண்டுகள் பழமையானது. நரசிம்மரும் அன்னபூரணியும் இங்கு குடிகொள்ள காரணம் என்ன? மகாவிஷ்ணு பிரகலாதனின் துயர் துடைப்பதற்காக தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்ட புராணக்கதை தெரியும். இரண்யன் பெற்ற வரத்தின்படி, சந்தியா வேளையில் தனது திருக்கரங்களால் அவனைத் தன் மடிமீது இருத்தி அவன் வயிற்றை கிழித்து வதம் செய்தார், நரசிம்மர்.
இரண்யன் அசுரன் அல்லவா? இந்த வதத்தில் அவன் குருதி நரசிம்மர் மீது பட்டதால் அவருக்குக் கோபம் இன்னும் அதிகமானது. மகாஉக்கிரத்துடன் அனல் பறக்கும் கோபத்துடன் இருந்த அவரைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் அஞ்சினர். இதனால் அவரை நெருங்கவே அனைவரும் பயந்தனர். அவரை சாந்தப்படுத்த பாமாலைகள் பாடினர். நரசிம்மரின் கோபம் குறையவில்லை. எனவே அவரைத் தம் பக்தியினால் வரவழைத்த பக்தப் பிரகலாதனிடமே சரணடைந்து அவரின் கோபத்தை தணிக்குமாறு வேண்டி நின்றனர். பிரகலாதனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மரை பலவாறு துதித்தார். பிரகலாதனையும் தன் அருகில் வரவழைத்து அதே மடியில் அமர்த்திக் கொண்டார் அந்தக் கருணாமூர்த்தி! அப்போதும் அவர் கோபம் தணியவில்லை. இந்த உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என எல்லோருமே அஞ்சினர்.
மேலும் படிக்க:
நன்றி: தினகரன்