• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தேவி நீயே துணை!

Status
Not open for further replies.
தேவி நீயே துணை!

அவளும் அணுவும்!

அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அவளன்றி அவனாலும் அசையமுடியாது.

சாட்டை இல்லா பம்பரம் போல நம்மை
ஆட்டுவிப்பவள் அன்னை பராசக்தியே!

அவளே நமக்கு உறுதுணையாவாள்.
அவளே நமக்குப் பரகதியாவாள்.

அவளே நமக்குத் தாயும், தந்தையும்.
அவளே நமக்கு குருவும், இறையும்.

அவள் மலர்ப் பதம் பணிவோம்;
அவள் அருள் வேண்டி இத்தொடரில்.

ஐங்கரனும், ஆறுமுகனும் ஆகிய இரு
கண்மணிகளை வணங்கிய பின்னர்.

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
# 1. விநாயகாய நம :

க3ஜானனம் பூ4த க3ணாதி ஸேவிதம்
கபித்த2 ஜம்பூ3 பலஸார ப4க்ஷிதம் |
உமாஸுதம் சோ'க2 விநாச' காரணம்
நமாமி விக்4னேச்'வர பாத3 பங்கஜம் ||(1)

யானை முகத்தை உடையவன்; பூத கணங்களால் சேவிக்கப்படுபவன்; விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை உண்பவன்; துன்பங்கள் வராமல் பாதுகாப்பவன்; பார்வதி புத்திரன் ஆகிய விக்னேஸ்வரனுடைய பாதத் தாமரைகளை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
# 2. விநாயகாய நம:

மூஷிக வாஹன மோத3க ஹஸ்த
சாமர கர்ண விளம்பி3த சூத்ர |
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்4ன விநாயக பாத3 நமஸ்தே|| (2 )


மூஷிக வாஹனனே! கையில் மோதகத்தைக் கொண்டுள்ளவனே! சாமரங்களை ஒத்த செவிகளை உடையவனே! அசைந்து ஆடும் பூணூலைத் தரித்தவனே! வாமன ரூபனே! மகேஸ்வரனின் மகனே! விக்னங்களைத் தகர்த்து எறிபவனே! உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள்
 
# 3. விநாயகாய நம:

ஏகத3ந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிப4ம் |
லம்போ3த3ரம் விசா'லாக்ஷம் வந்தே3ஹம் க3ணநாயகம்|| ( 3 ).

ஒரு தந்தம் உடையன்; பெருத்த சரீரம் உடையவன்; உருக்கின பொன்னின் காந்தியை உடையவன்; தொங்கும் வயிற்றினன்; விசாலநேத்திரன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்!
 
அம்பி3கா ஹ்ருத3யானந்த3ம் மாத்ருபி4: பரிவேஷ்டி2தம் |
ப4க்தப் ப்ரியம் மதோ3ன்மத்தம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (4)

அம்பிகையின் மனதுக்கு இன்பம் அளிப்பவன்; மாதாக்களால் சூழப்பட்டவன் ; பக்தப்பிரியன்; மதோன்மத்தன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
# 5. விநாயகாய நம:

ஸர்வவிக்4ன ஹரம் தே3வம் ஸர்வவிக்4ன விவர்ஜிதம் |
ஸர்வஸித்3தி4 ப்ரதா3தாரம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (5)

எல்லா விக்கினங்களையும் போக்கவல்லன்; தன்னுடைய காரியங்களில் இடையூறு என்பதே இல்லாதவன்; எல்லா சித்திகளையும் வழங்க வல்லவன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
க3ணேச்'வரம் உபாஸ்மஹே க3ஜமுகம் க்ருபாஸாக3ரம்
ஸுராஸுர நமஸ்க்ருதம் ஸுரவரம் குமாராக்3ராஜம் |
ஸுபாச'ஸ்ருணி மோத3கஸ்புடித த3ந்த ஹஸ்தோஜ்ஜ்வலம்
சி'வோத்ப4வமபீஷ்ட2தம் ச்'ரிதததேஸ்ஸு ஸித்3தி4ப்ரத3ம் || (6 )

யானை முகத்தோன்; கருணைக்கடல்; தேவர்களும், அசுரர்களும் வணங்குபவன்; தேவர்களுள் ச்ரேஷ்டன்; குமரக்கடவுளுக்கு ஜேஷ்டன்; பாசம், அங்குசம், மோதகம், முறிந்த தந்தம் ஆகியவற்றால் பிரகாசிக்கும் கரங்களை உடையவன்; பரமசிவனின் மைந்தன்; கோரினவற்றைத் தருபவன்; பக்தர்களின் அபீஷ்டங்களை நிறைவேற்றுபவன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 1.

நீலகண்ட2வாஹனம் த்3விஷட்3பு4ஜம் கிரீடினம்
லோல ரத்ன குண்ட3ல ப்ரபா4பி4ராம ஷண்முக2ம் |
சூ'ல ச'க்தி த3ண்ட3குக்குடாக்ஷ மாலிகாத4ரம்
பா3லமீச்'வரம் குமார சை'ல வாஸினம் பஜே || (1)

மயில் வாஹனன்; பன்னிரு புஜங்களை உடையவன்; கிரீடம் தரித்தவன்; அசைந்து ஆடி ஜொலிக்கும் இரத்தின குண்டலங்களின் காந்தியில் அழகாக விளங்கும் ஆறு முகங்களை உடையவன்; சூலாயுதம், வேலாயுதம், கதாயுதம், சேவற்கொடி, அக்ஷ மாலை இவைகளைத் தாங்கியவன் ; பால ரூபம் கொண்டவன்; குமர மலையில் எழுந்தருளி இருப்பவன் ஆகிய சுப்ரமண்யனை நான் பூஜிக்கின்றேன்.

 
Last edited:
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 2.


வல்லிதே3வயானிகாஸமுல்லஸந்தமீச்'வரம்
மல்லிகாதி3தி3வ்ய புஷ்ப மாலிகா விராஜிதம் |
ஜல்லரீநிநாத3ச'ங்க வாத3னப்ரியம் ஸதா3
பல்லவாருணம் குமார சைல வாஸினம் பஜே || (2)

வல்லி, தேவயானையோடு கூடி விளங்குகின்றவன்; மல்லிகை முதலான சிறந்த புஷ்ப மாலைகளை அணிந்தவன்; ஜல்லரி, சங்கம் போன்ற வாத்தியங்களின் இசையில் பிரியம் உடையவன்; தளிர் போன்ற சிவந்த நிறம் கொண்டவன்; குமரமலையில் எழுந்தருளி இருக்கும் சுப்ரமணியனை நான்
பூ
ஜிக்கின்றேன்.
 
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 3

மயூராதி4ரூட4ம் மஹாவாக்யகூ3ட4ம்
மனோஹாரி தே3ஹம் மஹாசித்த கே3ஹம் |
மஹீதே3வதே3வம் மஹாதே3வபா3லம்
மஹாதே3வபா3லம் ப4ஜே லோகபாலம் || (3)

மயில் வாஹனத்தில் ஏறி அமர்ந்தவன்; 'தத்வமஸி' போன்ற மஹா வாக்கியங்களின் சூக்ஷ்மார்த்தமாக விளங்குபவன் ; மனத்தைக் கவரும் அழகிய வடிவினை உடையவன் ; மகான்களின் உள்ளங்களைத் தான் வாழும் ஆலயமாகக் கொண்டவன் ; தேவாதி தேவன் ஆனவன்; வேதங்களின் உட்பொருளானவன்; மகாதேவனின் புத்திரன் ; உலகைக் காப்பவன் ஆகிய குமரக் கடவுளை நான் பூஜிக்கின்றேன்.
 
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 4

மயில் வாஹனத்தில் ஏறி அமர்ந்தவன்; 'தத்வமஸி' போன்ற மஹா வாக்கியங்களின் சூக்ஷ்மார்த்தமாக விளங்குபவன் ; மனத்தைக் கவரும் அழகிய வடிவினை உடையவன் ; மகான்களின் உள்ளங்களைத் தான் வாழும் ஆலயமாகக் கொண்டவன் ; தேவாதி தேவன் ஆனவன்; வேதங்களின் உட்பொருளானவன்; மகாதேவனின் புத்திரன் ; உலகைக் காப்பவன் ஆகிய குமரக் கடவுளை நான் பூஜிக்கின்றேன்.

ப்ரசா
'ந்தேந்த்3ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |
பிரயாநோன்முகே மய்யணாதே ததாநீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹா தவம் ||
 
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 4

தேந்த்3ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோ2த்3கா3ரி வக்த்ரே ப4யோத்கம்பிகா3த்ரே |
ப்ரயாநோண்முகே2 மய்யநாதே ததா3நீம்
த்3ருதம் மே த3யாளோ ப4வாக்3ரே குஹத்வம் || (4 )

கருணைக் கடல் ஆகிய குஹப் பெருமானே! ஐம்புலன்கள் ஒடுங்கி, அறிவு இழந்து, அச்சத்தால் அங்கம் நடுங்கி, காப்பவன் இல்லாமல், நான் மரணம் நெருங்குகையில் பரிதவிக்கும்போது, தேவரீர் விரைந்து என் முன் எழுந்தருள வேண்டுகின்றேன்.
 
Last edited:
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 5

க்ருதாந்தஸ்ய தூ3தேஷு சண்டே3ஷு

கோபாத்3த3ஹச்சி2ந்தி4 பி4ந்தீ4தி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மா பீ4ரிதி த்வம்
புரச்'ச'க்திபாணிர் மமாயாஹி சீ'க்3ரம் ||
(5)

ஹே கருணாமூர்த்தியே! மரண காலத்தில் கொடிய யமதூதர்கள் வெட்டு, குத்து, கொளுத்து என்று என்னைப் பலவாறாக பயமுறுத்தும்போது; தாங்கள் விரைவில் மயில் வாகனமேறி, வேலாயுதம் தாங்கி, என் முன் காட்சி தந்து, எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.
 
ஸுப்ரமண்ய ஸ்துதி. # 6

ப்ரணம்யாஸக்ருத் பாத3யோஸ்தே பதித்வா
ப்ரசாத்3ய ப்ரபோ4 ப்ரார்த்தயேsநேகவாரம் |
ந வக்தும் க்ஷமோஹம் ததா3நீம் க்ருபாப்3தே4
ந கார்யந்தகாலே மனாக3ப்யுபேக்ஷா || (6)

கருணாகரனே! நான் மரணம் அடையும் தருவாயில் உம்மைப் பிரார்த்திக்கச் சக்தி அற்றவனாக இருப்பேன். ஆகையால் "அப்போது என்னைக் கைவிடாதீர்" என இப்போதே உமது பாதங்களில் பலமுறை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

முருகன் சந்நிதியில் மனமுருகி இங்ஙனம் வேண்டுபவருக்கு அந்திமக் காலத்தில் அவன் உறுதியாக அபயம் அளிப்பான்.
 
Please ignore the post # 11.

The other posts are correct with their correct numbers.

Sorry for the inconvenience caused!

The actual Sthuthi on Devi starts from tomorrow. :pray2:
 
லக்ஷ்மி ஸ்துதி # 1 .

லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்3ர ராஜதனயாம் ஸ்ரீ ரங்க3 தா4மேச்'வரீம்
தா3ஸீ பூ4த ஸமஸ்த தே3வ வநிதாம் லோகைக தீ3பங்குராம் |
ஸ்ரீமன் மந்த3 கடாக்ஷ லப்3த விப4வ ப்3ரம்மேந்த்3ர க3ங்கா3த4ராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பி3நீம் ஸரஸிஜாம் வந்தே3 முகுந்த3ப்ரியாம் || (1)

நீ க்ஷீர சமுத்திரராஜனின் அருமைப் புதல்வி; நீ ஸ்ரீ ரங்க க்ஷேத்திரத்தின் தலைவி; தேவ மாதர்கள் உன் அடிமைகள்; நீ உலகின் ஒளி விளக்கு; பிரமன், இந்திரன், ருத்திரன் போன்றவர்கள் உன் மந்த கடாக்ஷத்தால் ஐஸ்வர்யங்களை அடைகின்றனர் ; மூவுலகின் தலைவி நீ; தாமரை மலரில் அமர்பவள் நீ; முகுந்தனுக்கு பிரியமானவள் நீ. உன்னை நான் வணங்குகின்றேன்.
 
லக்ஷ்மி ஸ்துதி # 2.

மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸிநீ விச்வமாத: |
க்ஷீரோத3யே கமலகோமள கர்ப்ப4கௌ3ரி
லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் ச'ரண்யே || (2)

தாமரைப்பூவினில் வசிப்பவளே! தாமரைக் கண்களை உடையவளே! விஷ்ணுவின் இதயத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவளே! உலகின் தாயே! பாற்கடலில் உதித்தவளே! தாமரைப் பூவினை ஒத்த மென்மையான சரீரம் உடையவளே! உன்னை வணங்குபவர்களை ரட்சிப்பவளே! மகாலட்சுமி தாயே! நீ என்றும் எம்மை அனுக்ரஹிப்பாயாகுக! உன்னை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 
லக்ஷ்மி ஸ்துதி # 3.
யா ஸா பத்3மாஸனஸ்தா விபுல
கடி தடீ பத்3ம பத்ராயதாக்ஷி
க3ம்பீ4ரா வர்தனாபி4: ஸ்தனப4ர
நமிதா சு'ப்ர வஸ்த்ரோத்தரீயா |
லக்ஷ்மீர் தி3வ்யைர் க3ஜேந்த்3ர
மணிக3ண க2சிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை3:
நித்யம் ஸா பத்3மஹஸ்தா மம
வஸ்து க்3ருஹே ஸர்வ மாங்க3ல்யயுக்தா || (3)

எந்த லக்ஷ்மிதேவி புதிதாக மலர்ந்த தாமரையில் அமர்ந்தவளோ,
அழகிய விஸ்தாரமான இடுப்புப் பிரதேசத்தை உடையவளோ, தாமரை இதழை போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவளோ, கம்பீரமானதும் வட்டவடிவினதும் ஆன அழகிய நாபியை உடையவளோ, ஸ்தனபாரத்தில் கொஞ்சம் உடல் வளைந்தவளோ, வெண் பட்டு உடுத்தவளோ, தேவர் உலகின் யானைகளால் ரத்தினம் பதித்த குடங்களின் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டவளோ, தாமரை மலரைக் கைகளில் எந்தியவளோ, அந்த மகாலட்சுமி என்னுடைய இல்லத்தில் சர்வ மங்கலையாக வாசம் செய்யட்டும்.
 
Last edited:
லக்ஷ்மி ஸ்துதி # 4.

மஹாலக்ஷ்மி நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் ஸுரேச்'வரி |
ஹரிப்ரியே நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் த3யாநிதே4 || (4)

மஹா லக்ஷ்மி தேவியே! உனக்கு நமஸ்காரம், தேவர்களின் ஈஸ்வரியே! உனக்கு நமஸ்காரம். ஹரியின் ப்ரிய சகியே! உனக்கு நமஸ்காரம். கருணையின் இருப்பிடமானவளே! உனக்கு நமஸ்காரம்.
 
ஸரஸ்வதி ஸ்துதி # 1.

யாகுந்தே3ந்து3 துஷாரஹார த4வளா யா ஸுப்3ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர த3ண்ட3மண்டி3தகரா யா ஸ்வேதபத்மாஸனா |
யா ப்3ரஹ்மாச்யூத ச'ங்கர ப்ரப்4ருதிபி4: தே3வைஸ்ஸதா3பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதி ப4க3வதி நிச்'சேஷ ஜாட்3யாபஹா || (1)

எந்த பகவதி மல்லிகை, சந்திரன், பனி இவற்றைபோன்ற முத்து மாலையை அணிந்தவளோ ; வெண் பட்டு உடுத்தியவளோ; வீணையை மீட்டும் அழகிய கரங்களை உடையவளோ; வெள்ளைத் தாமைரயில் வீற்று இருப்பவளோ; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியோரால் பூஜிக்கப் படுபவளோ; அந்த சரஸ்வதி தேவி என் அறியாமையின் இருளை அகற்றி என்னை காத்தருளவேண்டும்.
 
ஸரஸ்வதி ஸ்துதி # 2.

ஸ்ரீமச் சந்த3ன சர்ச்சிதோஜ்வலவபு: சு'க்லாம்ப3ர மல்லிகா
மாலாலாலித குந்த3ளா ப்ரவிலஸன் முக்தாவளி சோ'ப4னா |
ஸர்வஜ்ஞான நிதா3ன புஸ்தகத4ரா ருத்ராக்ஷ மாலாங்கிதா
வாக்3தே3வி வத3நாம்பு4ஜே வஸதுமே த்ரைலோக்யமாதா சு'பா4 ||(2)

சந்தனக் கலைவையினால் ஜொலிக்கும் சரீரத்தை உடையவள்; மல்லிகை மாலை சூடிய கூந்தலை உடையவள்; பிரகாசிக்கும் முத்து மாலைகளால் அழகு பெற்றவள்; எல்லா அறிவையும் அளிக்கும் புத்தகங்களை ஏந்தியவள்; ருத்திராக்ஷ மாலையை அணிந்தவள்; அழகிய வடிவினை உடையவள்; மூன்று
உலகங்களுக்கும் தாய் ;வாக்குக்கு ஈஸ்வரி ஆகிய சரஸ்வதி அன்னை என் முககமலத்தில் வசிக்க வேண்டும்.
 
தேவி ஸ்துதி.

தேவி மாஹாத்மியத்தில் அமைந்துள்ள
தேவி ஸ்துதிகளை மட்டும் காண்போம் !

உலகில் நிரம்பி வழியும் கலகங்களே போதும்!
கொலைக்களக் காட்சிகள் இங்கே வேண்டாமே!


அடுத்து வருவது மார்கண்டேய மகரிஷியின்
அர்க்கலா ஸ்தோத்திரம் எனப் புகழ் பெற்றது.

 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

ஜயந்தி மங்க3லா காளீ பத்3ரகாளி கபாலினீ |
துர்கா3 க்ஷமா சி'வா தா4த்ரீ ஸ்வாஹா ஸ்வதா4 நமோஸ்து தே || (1)

ஜயந்தீ, மங்கலா, காளீ, பத்ரகாளீ, கபாலினீ, துர்கா, க்ஷமா, சிவா, தாத்ரீ, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பல பெயர்களைப் பெற்றுள்ள அன்னையே உனக்கு நமஸ்காரம்.


மது4கைடப4 வித்3ராவி விதா4த்ரு வரதே3நம: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (2)

மது கைடபர்களை அழித்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே !
உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

மஹிஷாஸுர நிர்நாச' விதா4த்ரி வரதே3 நம : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (3)

மகிஷாசுரனைக் கொன்று உலகினைக்காத்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!


வந்தி3தாங்க்4ரி யுகே3 தே3வி சௌபா4க்3யதா3யினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (4)


உலகம் அனைத்தும் வணங்கும் திருவடிகளை உடையவளே!
தேவர்களுக்கு வெற்றி என்னும் சௌபக்கியத்தைத் தருபவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

ரக்த பீ3ஜ வதே4 தே3வி சண்ட3 முண்ட3 விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (5)

ரக்த பீஜன் என்னும் கொடியவனை வதைத்தவளே!
சண்ட முண்டாசுரர்களைக் கண்டனம் செய்தவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!


அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ ச'த்ரு விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (6)


நினைப்பதற்கே அரிய வடிவினையும் அற்புதமான வரலாற்றையும் உடையவளே!எல்லாப் பகைவர்களையும் நாசம் செய்பவளே!

எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top