தென் காளஹஸ்தி ஸ்ரீ ராகு , ஸ்ரீ கேது கோவில்

Status
Not open for further replies.
தென் காளஹஸ்தி ஸ்ரீ ராகு , ஸ்ரீ கேது கோவில்

தென் காளஹஸ்தி ஸ்ரீ ராகு , ஸ்ரீ கேது கோவில்
திருபாம்புரம்

தல சிறப்புகள்


திருபாம்புரம் சோழநாட்டுச் சிவதலங்களுள் ஒன்றாகும், சிவாலயங்களுள் தேவார திருபதிகங்கள் பாடப்பெற்றதலங்களே சிறப்புடையவனவாக போற்றப்படுகின்றன. தேவாரம் பாடபெற்ற தலங்கள் 274. அவைகளுள் 59வது திருத்தலமாக திருபாம்புரம் போற்றப்படுகிறது.

இத்தலம் குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்ப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்திஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். எனவே இத்தலம்சர்வதோஷ பரிகாரா தலம் என புராணங்கள் கூறுகின்றன.ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம்.

திருபாம்புரம் கோயில் கம்பீரமான மூன்று நிலைகளை உடைய இராசகோபுரத்தை கொண்டுள்ளது.இராசகோபுரத்திற்கு எதிரே ஆதிஷ தீர்த்தம் உள்ளது. உள்ளே கொடி மரத்து விநாயகர் கொடிமரத்தின்கீழ் இரு:ந்தபடி கிழக்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தோடு பலிபீடமும் நந்தியெம்பெருமானும் காட்சி தருகின்றனர்.(கொடிமரம் காலப்போக்கில் அழிந்து விட்டது). இரண்டு பிரகாரங்களை தன்னகத்தே அமையப்பெற்றுள்ளது. கோயிலின் தென்புற வளாகத்தில் திருமலை ஈசுவரர் எனப்படும் மாடக்கோயில் காட்சி தருகிறது.மலை ஈசுவரர் கோயிலில் படிகக்கட்டுகள் உள்ளன. இதில் ஏறி பாம்புரநாதர் கருவறைவிமானத்தில் உள்ள சட்டைநதர் சன்னதிக்கு வரலாம்

.
மேற்கு பிரகாரத்தின்கன்னிமூலையில் இராசராச விநாயகரும் இதையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகரும் காட்சியளிக்கின்றனர். அம்மன் வண்டுசேர் குழலி கிழக்கு வாயிலை கொண்டுள்ளார். அம்மன் மாமலையாட்டி சதுர்புஜத்துடன் தாமரை, உருத்திராக்கா மாலை, அபய, வரத ஹ்ஸ்தங்களுடன் அருள்பாலிக்கிறார். அம்மை மாமலையாட்டியின் (வண்டுசேர் குழலி) சன்னதி இறைவனின் சன்னதிக்கு இடப்புறமாகவடக்கு பிரகாரத்தில் அமை:ந்துள்ளது.



கிழக்கில் பைரவர் , சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், இராகுகேது, நாயன்மார் நால்வர்,ஆகியோர் காட்சி தருகின்றனர். பாம்புசேரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் முகமண்டபம் என அமை:ந்துள்ளது. மகாமண்டபத்தில் உற்சவதிருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வயானையுடன் முருகர் போன்றோர் வீற்றிக்கிரார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சிதருகிறார். இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் இலிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழு:ந்தருளியுள்ளார். இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. சேடபுரீஸ்வரர் கோயில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கபட்டுள்ளாள். இராகுவும் கேதுவும் திருக்கோயிலின் ஈசானிய மூலையில் ஏகசரிரமாகி ஈசனை நெஞ்சில்இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளர்கள்.







சென்னையில் இருந்து திருபாம்புரம் செல்ல மயிலாடுதுறை சென்று அங்கு இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கொல்லுமாங்குடி சென்று வலதுபுறம் திரும்பி கற்கத்தி சென்று இடதுபுறம் திரும்பி செல்ல திருபாம்புரம் அடையலாம்.

கோவில் தொலைபேசி என் -04352- 469555
கோவில் குருக்கள் மொபைல் நம்பர் -​
கௌரிசங்கர - 097860 76969,
விஸ்வநாதன் - 097515 17745
பிரேம்குமார் - 094430 47302, 09655651712
வேத பிரகாஷ் - 09443943665

கோவில் திறந்து இருக்கும் நேரம் 6.30 am to -12.30 pm , 4 pm to 8 pm
ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 pm to 8 pm
புதன்கிழமை ராகு ,கேது பூஜை பகல் 6.30 am to 1.30 pm
வியாழகிழமை ராகு ,கேது பூஜை பகல் 1.30 pm to 3pm



கொல்லுமங்குடி
Kollumangudi Road
Kollumangudi Road Junction, Take Right Road to Karkathi
Kollumangudi Road Junction, Take Right Road to Karkathi

Railway line crossing between kolumangudi to karkathi Road


கற்கத்தியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை
பாம்பு வலைவு கற்கத்தியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை









Please read more from here


Thirupampuram Raghu Kethu Temple
 
Status
Not open for further replies.
Back
Top