• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமாலிருஞ்சோலை யெந்தாய்

திருமாலிருஞ்சோலை யெந்தாய்

எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திர னும்* மற்றும்
ஒருத்தரும் இப்பிற வி என்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை*
மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி* உன்கோயிற் கடைப்புகப்பெய்
திரு மாலிருஞ்சோலையெந்தாய்.


ஸ்ரீபெரியாழ்வார் பெ. திருமொழி 5.3.6 நா.தி.பி(458)


திருமாலிருஞ்சோலை எந்தாய்!
வ்ருஷபத்வஜனான ருத்திரனும் (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும் தேவேந்திரனும் மற்றுள்ள எந்தத் தேவரும் இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்து அறிய வல்லவரல்லர்;
(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
நீலமணிபோன்ற வடிவையுடையவனே!
(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி (அடியேனை) சிக்ஷித்து உன் கோயில் வாசலில் வாழும்படி அருள்புரிய வேணும்.



எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.


எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்; “மருந்தும் பொருளு மமுதமுமந்தானே” “அறிந்தனர்நோய்களறுக்கும் மருந்தே” “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்” “அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக. உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்; வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு; இம்மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது; பலப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.
 

Latest ads

Back
Top