திருமாலிருஞ்சோலை யெந்தாய்
எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திர னும்* மற்றும்
ஒருத்தரும் இப்பிற வி என்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை*
மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி* உன்கோயிற் கடைப்புகப்பெய்
திரு மாலிருஞ்சோலையெந்தாய்.
ஸ்ரீபெரியாழ்வார் பெ. திருமொழி 5.3.6 நா.தி.பி(458)
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
வ்ருஷபத்வஜனான ருத்திரனும் (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும் தேவேந்திரனும் மற்றுள்ள எந்தத் தேவரும் இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்து அறிய வல்லவரல்லர்;
(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
நீலமணிபோன்ற வடிவையுடையவனே!
(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி (அடியேனை) சிக்ஷித்து உன் கோயில் வாசலில் வாழும்படி அருள்புரிய வேணும்.
எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.
எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்; “மருந்தும் பொருளு மமுதமுமந்தானே” “அறிந்தனர்நோய்களறுக்கும் மருந்தே” “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்” “அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக. உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்; வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு; இம்மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது; பலப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.
எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திர னும்* மற்றும்
ஒருத்தரும் இப்பிற வி என்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை*
மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி* உன்கோயிற் கடைப்புகப்பெய்
திரு மாலிருஞ்சோலையெந்தாய்.
ஸ்ரீபெரியாழ்வார் பெ. திருமொழி 5.3.6 நா.தி.பி(458)
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
வ்ருஷபத்வஜனான ருத்திரனும் (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும் தேவேந்திரனும் மற்றுள்ள எந்தத் தேவரும் இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்து அறிய வல்லவரல்லர்;
(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
நீலமணிபோன்ற வடிவையுடையவனே!
(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி (அடியேனை) சிக்ஷித்து உன் கோயில் வாசலில் வாழும்படி அருள்புரிய வேணும்.
எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.
எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்; “மருந்தும் பொருளு மமுதமுமந்தானே” “அறிந்தனர்நோய்களறுக்கும் மருந்தே” “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்” “அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக. உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்; வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு; இம்மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது; பலப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.