ஜீவசமாதியின் விளக்கம்

Status
Not open for further replies.
ஜீவசமாதியின் விளக்கம்

மகான்களுக்கு இந்த நில உலகில் வருவதும் போவதும் ஒரு மாய விளையாட்டு . சில மகான்கள் இந்த நில உலகிற்கு வந்து பல்வேறு ஆன்மீக சாதனைகளையும் ஆன்மீக தொண்டுகளையும் ஆற்றியபிறகு நம் பனி இத்துடன் நின்று போய்விட கூடாது, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று முடிவு செய்த பின்பு இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆலோசனையுடன் ஒரு திருநாள் தேர்வு செய்து மஹா பிரபஞ்சம் இசைவுடன் திரு நேரத்தையும் முடிவு செய்து அந்த தெய்வீக நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவருக்கும் சூசகமாகவும் நேரிலும் உணர்த்தி அழகான அணைத்து ஆயுதங்களையும் செய்து முடிப்பார். அந்த திருநாளில் பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு தன் ஆசனத்தில் அமர்ந்து தன இறை நிலையில் மூழ்குவார்கள் அல்லது இறை நிலையில் மூழ்கும் போது தான் வாழ்ந்த காலத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள், அவர்களின் மனக்கண் முன் தோன்றும். அதனை பார்த்துவிட்டு தன உடலை கடப்பார்கள். பின்பு மனம் என்னும் கருவியையும் கடப்பார்கள், பின்பு தான் என்னும் அக உணர்வில் நிலை பெறுவார்கள்.அவர்கள் உடல், மனம் இவற்றை கடக்கும் போது இதுவே இறுதி சந்திப்பு என முடிவு செய்து தன கடப்பார்கள். ஆகவே திரும்பவும் எக் காரணத்தை கொண்டும் அவர்களின் தடம் என்னும் மகா பிரகாசம் உடல், மனம் இவற்றின் மீது திரும்பாது . அவர்கள் தான் எனும் அக சுய உணர்வில் நிலைத்து கொள்ளுமாறு நிற்பார்கள் இந்த தெய்வீக நிலை பல ஆயிரம் ஆண்டுகள் தொடரும் . அந்த சுய பிரகாச ஜோதி ஆன்மீக அருளாசியை வாரி வழங்கி கொண்டிருக்கும்.வாழ்க மகானின் கருணைஇவை அனைத்தும் மகானின் திருவுளம் திறந்து கூறியவை

Courtesy: Aathman Awareness Centre - Door to Moksha - dedicated to Meditation,bhakthi and enlightenment
 
Status
Not open for further replies.
Back
Top