சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
பாரதி (1882- 1921)வாழ்க! வாழ்க!!
இன்று- செப்டம்பர் 11—பாரதி நினைவு தினம். அவரது பாடல் மனிதர்களை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்டவை. ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்றவர்களை தேக்கு மரம் ஆக்கும் “பாசிடிவ்” கருத்துக்கள் உடையவை. சோர்வு, துயரம், சோம்பேறித்தனம் ஆகியவை அவனது வரிகளைப் படித்த மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும். சதா சர்வ காலமும் தமிழ் பற்றியும், இந்தியத் திரு நாடு பற்றியும், உலக மக்களின் உயர்வு பற்றியும், வேத வாழ்வு பற்றியும் சிந்தித்த தமிழ் சித்தன் பாரதி. தமிழுக்கு புது வடிவம் தந்த சிற்பி பாரதி. இதோ சில பொன் மொழிகள்:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்—இதைத்
தெய்வம் என்று கும்பிடடி பாப்பா.
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்.
2.தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
3.இல்லை என்ற கொடுமை உலகில்
இல்லையாக வைப்பேன்
4.எல்லோரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா
உலகிற்களிக்கும்—ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்
5.உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
6.தனி ஒருவனுக்கு உணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
7.மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
8.பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இன் நினைவு அகற்றாதீர்
9.நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோரதிருத்தல்
10.தோகை மேல் உலவும் கந்தன்
சுடர்க் கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவதே எமக்கு வேலை
11.வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
12.மண்ணிலார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்
13. நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
14.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனிலே யாங்கனுமே பிறந்த்தது இல்லை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
15.காக்கை குருவி எங்கள் ஜாதி-- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
16. மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்;
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்.
17.ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்—பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வமுண்
டாம் எனல் கேளீரோ
18.பூட்டைத் திறப்பது கையாலே—நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே—இன்ப
வீட்டைத் பெண்ணாலே
19.அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால்.
20.கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
*************
பாரதி (1882- 1921)வாழ்க! வாழ்க!!
இன்று- செப்டம்பர் 11—பாரதி நினைவு தினம். அவரது பாடல் மனிதர்களை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்டவை. ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்றவர்களை தேக்கு மரம் ஆக்கும் “பாசிடிவ்” கருத்துக்கள் உடையவை. சோர்வு, துயரம், சோம்பேறித்தனம் ஆகியவை அவனது வரிகளைப் படித்த மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும். சதா சர்வ காலமும் தமிழ் பற்றியும், இந்தியத் திரு நாடு பற்றியும், உலக மக்களின் உயர்வு பற்றியும், வேத வாழ்வு பற்றியும் சிந்தித்த தமிழ் சித்தன் பாரதி. தமிழுக்கு புது வடிவம் தந்த சிற்பி பாரதி. இதோ சில பொன் மொழிகள்:
1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்—இதைத்
தெய்வம் என்று கும்பிடடி பாப்பா.
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்.
2.தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
3.இல்லை என்ற கொடுமை உலகில்
இல்லையாக வைப்பேன்
4.எல்லோரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா
உலகிற்களிக்கும்—ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்
5.உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
6.தனி ஒருவனுக்கு உணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
7.மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
8.பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இன் நினைவு அகற்றாதீர்
9.நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோரதிருத்தல்
10.தோகை மேல் உலவும் கந்தன்
சுடர்க் கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவதே எமக்கு வேலை
11.வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
12.மண்ணிலார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்
13. நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
14.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனிலே யாங்கனுமே பிறந்த்தது இல்லை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
15.காக்கை குருவி எங்கள் ஜாதி-- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
16. மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்;
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்.
17.ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்—பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வமுண்
டாம் எனல் கேளீரோ
18.பூட்டைத் திறப்பது கையாலே—நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே—இன்ப
வீட்டைத் பெண்ணாலே
19.அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால்.
20.கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
*************