• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவனைப் பற்றி விசித்திரக் க(வி)தை!

Status
Not open for further replies.
சிவனைப் பற்றி விசித்திரக் க(வி)தை!

umaparinayam.jpg


போஜ ராஜன் என்ற மன்னன் மாபெரும் அறிவாளி. கற்றோரைக் காமுறும் பெரும் புலவன். புலவர்களுக்குப் புரவலன். காளிதாசன் போன்ற பெரும் புலவர்களின் இனிய நண்பன். இத்தகைய மன்னன் காலத்தில் ஒரு ஏழைப் புலவனும் வாழ்ந்தான். ஏதேனும் பாட்டு எழுதிச் சென்றால் போஜ மான்னன் தனது போஜனத்துக்கு வழி செய்வானே என்று பரிதவித்தான். அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது என்பதல்ல. கவி மழை பொழிய வல்லவனே. ஆனால் எல்லாப் புலவர்களும் எல்லாவற்றையும் பற்றி எழுதிப் பரிசு வாங்கிவிட்டார்களே, நான் எதைப் பற்றி எழுதுவேன் என்று அங்கலாய்த்தான். தருமி என்னும் ஏழை அந்தணனுக்கு கவிதை எழுதித்தந்த சிவ பெருமான் இவனுக்கு கவிதை எழுதித் தரவில்லை!


ஏழைப் புலவனுக்கு திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. அதுவும் சிவன் அருள்தான், ஏனெனில் அது சிவனைப் பற்றிய கவிதை! ஆனால் அரைத்த மாவையே அரைக்காத புதுக் கவிதை, அதாவது புது விதமான கவிதை. சிவன் இறந்த கவிதை. இதைக் கேட்டால் போஜன் கட்டாயம் பரிசு தருவான் என்ற நம்பிக்கை ஊட்டிய கவிதை.


இதோ அந்தக் கவிதை:
ஒரு பாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்
டிருபாதியாலும் இறந்தான் புராரி இரு நதியோ
பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்திற் கற்ப
தருவான போச கொடையுடன் கையோடென்கை தந்தனனே (தனிப்பாடல்)


பொருள்:
சிவ பெருமானுடைய ஒரு பாதியை உமா கவர்ந்துவிட்டாள் (அர்த்தநாரீஸ்வரர்), மற்றொரு பாதியை திருமால் (சங்கர நாராயணன்) கவர்ந்துவிட்டார். இவ்வாறு இருவரும் உடலைப் பங்கிட்டதால் சிவ பெருமான் என்பவரே இல்லை என்றார்.


இதைக் கெட்ட அரசனுக்கு திருப்தி வரவில்லை. கேள்விகள்தான் வந்தன. போஜராஜன் கேட்டான்: புலவரே, சிவன் இறக்கவே முடியாது. அப்படியானால் சிவனின் தலை மீதிருந்த கங்கை எங்கே? தலையில் அணிந்த இளம் பிறை எங்கே? அவர் கழுத்தில் நிலவும் பாம்பு எங்கே? அவருடைய கையில் இருந்த திருவோடுதான் எங்கே? என்றான்.


முதலில் மன்னனின் கேள்விகளைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டுப்போன புலவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு கதை, இல்லை, கவிதை, விட்டார். அடடா! சொல்ல மறந்துவிட்டேனே, அவர் மீதிருந்த பிறைச் சந்திரன் வானத்திற்கு ஓடிப் போய்விட்டான். பாம்போ பூமிக்குள் இருந்த துளையில் புகுந்துவிட்டது. கங்கை கடலில் கலந்துவிட்டாள். சிவன் கை திருவோடு என் கைக்கு வந்து விட்டது. சிவ பெருமானின் மாபெரும் கொடைத் தன்மை போஜராஜன் என்ற மன்னனிடம் போய்விட்டது என்று போட்டார் ஒரு போடு! போஜ மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி. ஏழைப் புலவன் திருவோட்டில் தங்கக் காசு மழை பெய்தான்.

இந்தியப் புலவர்கள் மேதாவிகள். சமயத்துக் கேற்றவாறு கவி மழை பெய்து, தங்க மழையில் நனைவார்கள். மற்றொரு புலவர் ராமநாத சேதுபதியிடம் பொன்முடிப்பு வாங்கச் சென்றார். அவர் தங்கத் தட்டில் பணமுடிப்பு வைத்துத் தந்தார். பண முடிப்பை எடுத்துக் கொண்டு தட்டைத் திருப்பித் தருவது வழக்கம். அவர் புத்திசாலித் தனமாக பணத் தட்டு மன்னனுக்கோ? ஏழைப் புலவருக்கோ? என்றார். மன்னன் சிரித்துக் கொண்டெ ‘உமக்கே’ என்றான். புலவருக்கு அன்று இரட்டை போனஸ்!

(பணத்தட்டு என்றால் பண முடை, பணம் போதாத நிலை என்ற அர்த்தமும் உண்டு).

2bc6z-ardhanari-statue.jpg
sankaranarayana.gif


Picture: Forms of Ardhanari and Sankaranarayana.


Please read earlier Bhoja Raja stories in this blog:
1.Strange Link between Shiva, Socrates and Thiruvalluvar
2. Who is Dhananjayan?
3. World’s Largest Story Collection
4.போஜராஜன் செய்த தந்திரம் ( in Tamil)
 

எனக்கு ஓர் ஐயம்!

அர்த்தனாரீஸ்வரருக்கும் இடப்பாகத்தில் உமையம்மை!

சங்கரநாராயணனுக்கும் இடப்பாகத்தில் நாராயணன்.

சிவபெருமான் வலப்பாகத்தை யாருக்கும் தரவில்லையே!

 
கதை க(வி)தை, நகைச் சுவை! அதிகம் அர்த்தம் பார்த்திருந்தால் ஏழைப் புலவனுக்கு பரிசு கிடைத்திருக்குமா? நல்ல வேளை, போஜன் சபையில் நீங்கள் இருக்கவில்லை. நக்கீரன் போல ஏதாவது கேள்வி கேட்டு, புலவரை தருமி போல தரும சங்கடத்துக்கு ஆளாக்கி இருப்பீர்!!!
 
......... நல்ல வேளை, போஜன் சபையில் நீங்கள் இருக்கவில்லை........
நான் நினைத்தேன்! நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! :)
 

எனக்கு இன்னொரு ஐயம்!

ஐயோ என்று அலற வேண்டாம்... :)

ஆண்களைவிடப் பெண்களுக்கு :spy: திறன் அதிகமோ?

 
Dear Raji,

How nice you too spotted the slip in the poem. :spy:

I just read the thread in the section Religion and commented on it, :typing:

and lo and behold you had told the same thing three hour ago! :cool:

Great men think alike. Women too!!! :thumb:
 
புலவரிடம் ஒரு கேள்வி :

"மானும், மழுவும், சூலமும்

மறைந்த மாயம் என்னவோ???" :noidea:
 
ஆண்களை விடப் பெண்களுக்கு திறன் அதிகமோ இல்லையோ, யாமறியோம் பராபரமே/ கட்டாயம் கருணை அதிகம்; சூதும் வாதும் கிடையாது, உங்களைப் போன்றோர் சபையில் மந்திரிகளாக அமர்ந்திருந்தால் தருமிக்கும் பரிசு கிடைத்திராது, போஜராஜன் சபைக்கு வந்த புலவனுக்கும் பரிசு கிடைத்திராது!!! சிவனின் கருணை பார்வதிக்கு இல்லையே!!!!!!
 
அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அவளன்றி அவனாலும் அசையமுடியாது.

சாட்டை இல்லா பம்பரம் போல நம்மை
ஆட்டுவிப்பவள் அன்னை பராசக்தியே!

அவளே நமக்கு உறுதுணையாவாள்.
அவளே நமக்குப் பரகதியாவாள்.

அவளே நமக்குத் தாயும், தந்தையும்.
அவளே நமக்கு குருவும், இறையும்.

அவள் மலர்ப் பதம் பணிவோம்;
அவளே பாலம் ஆவாள் அவனுக்கு!

அன்னை = > கனிவு , கருணை
அண்ணல் = > சிறப்பு, பொறுப்பு.

 
பொய் சொன்ன வாய்க்கு போஜனமே கிடையாது! :hungry:

பொய் சொன்ன வாய்க்குப் பரிசு கிடைக்குமா? :popcorn:
 

அளவுக்கு மிஞ்சிய கவிதை ஆராய்ச்சி, பரிசுகளின்

அளவைக் குறைத்து, புலவரை அல்லாட வைக்கும்! :peep:
 
Thanks to the prompt actions by Sri. Praveen! :yo:

I got the title of this thread also changed! :thumb:
 

Dear Swami Sir,

We should actually thank Sri. Praveen for his very prompt action (within 2 minutes!)

for the changes I requested, as per your suggestion. :)
 
Poets have the freedom to say 'lies'

This excerpt from ponniyin selvan of kalki may be of interest.

புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்:

"இந்திரன் ஏறக் கரி அளித்தார்,
பரிஏ ழளித்தார்
செந்திரு மேனித் தினகரற்கு,
சிவனார் மணத்துப்
பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
பழையாறை நகர்ச்
சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
தொன்னிலத்தே!"
****

சுந்தர சோழர் சட்டைசெய்யாமல் புலவர்களைப் பார்த்து "இந்த அருமையான பாடலைப் பாடிய புலவர் யார்என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? [FONT=Latha, sans-serif]தெரிந்தால் சொல்ல வேணும்!" என்றார்.[/FONT]
[FONT=Latha, sans-serif]****[/FONT]
நாலுவரி கொண்ட பாடலில்இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகா கவிஞர் தமது பெயரை வௌிப்படுத்திக் கொண்டுமுன்வர விரும்ப மாட்டார்தானே?" என்று மகாராஜா கூறியதும், [FONT=Latha, sans-serif]புலவர்களின் திருமுகங்களைப்பார்க்க வேண்டுமே! ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை[/FONT][FONT=Tahoma, sans-serif].
****
[/FONT]நமது வந்தியத்தேவன்துணிச்சலாக எழுந்து, "பிரபு! அப்படி ஒரேஅடியாகப் பொய் என்று தள்ளி விடக்கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள்சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில்ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அதுகற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை.."என்றான்.
 
tamilbrahmins.com is very efficient.
They changed it in a second or minute of my request.
But I dont know anyone there.
Thanks for all those involved in the process.

Kavi Kalamega's Poems:

I have a book of Kalamegam poems.
But when you mock at everything and anything with Sleshma/Siledai or Double entendre, it becomes boring.
 

Dear Swami Sir,

The title 'A novel poem about Shiva' was your choice. But it is a strange coincidence that I too requested for the Tamil title,

சிவனைப் பற்றி விசித்திரக் க(வி)தை! :)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top