சம்ஸ்கிருதத்துக்கு உயிர் இருக்கிறதா?
Is Sanskrit dead or alive ? by S Swaminathan
சம்ஸ்கிருதம் இறந்த மொழியா? இந்தக் கேள்விக்கு காஞ்சி மஹா சுவாமிகள் இரண்டு பதில்கள் தந்தார். ஒன்று சொற்பொழிவில் தந்தார். இன்னொன்று செயலில் தந்தார்.
சொற்பொழிவு (12-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு)
நம்முடைய மதம் எப்படிப் பொது மதமோ அது போல ஸம்ஸ்க்ருதம் பொதுப்பாஷை. அதற்கும் ஊர் இல்லை.தெலுங்கு, தமிழ், இந்துஸ்தானி முதலியவற்றிற்குத் தேசம் உண்டு. ஸம்ஸ்க்ருதத்துக்குத் தேசமே இல்லை. இந்த ஸம்ஸ்க்ருதத்தைச் செத்துப்போன பாஷை என்று சிலர் சொல்லுகிறார்கள்.
எங்கள் அம்மாவுக்கு எனக்கு முன் ஒரு குழந்தை இருந்தது. அவள் ஒரு ஞானி. அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டது. அதற்காக அவள் அழவில்லை. அம்மாவுக்கு என்னிடம் நிரம்பப் பிரியம். ஒரு நாள் நான் அவளைப் பார்த்து, “ அம்மா பெரியவன் செத்துப் போனதற்கு நீ அழவில்லை; நான் செத்துப் போனால் அழுவாயோ மாட்டாயோ?” என்று கேட்டேன் “நீயும் அவனைப் போல பிள்ளைதானே; அவன் உடம்பில் செத்துப் போனான், நீ மனசில் செத்துப் போ” என்றாள். செத்துப்போன மனசை உடையவனாக வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த மாதிரிதான் ஸம்ஸ்க்ருதம் செத்துப் போயிற்று.
தனக்கு என்று ஒரு இடம் இருந்தால் பயம் இருக்கும். எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸம்ஸ்க்ருதம் . இப்பொழுது லோகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது. அவற்றில் பெரும்பலானவை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து உண்டானவை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. தமிழ் செய்யுளாக இருந்தால் அதற்கு உரை ஸம்ஸ்க்ருதம் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு, தோஷம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம். தேச பாஷையிலுள்ள கடினமான சொற்களுக்கு ஸம்ஸ்க்ருத வார்த்தைகளால் அர்த்தம் சொல்லி விளங்க வைக்கிறோம்.
சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்புதானே சாகிறது. அது உயிரோடு இருக்கிறது. பின்பு சாகிறது. உயிர் இல்லாதபோது அது செத்துப் போகிறது. உயிருக்கு மற்றோர் உயிர் ஏது? அது எப்பொழுதும் செத்ததுதான். ஸம்ஸ்க்ருதம் எல்லா பாஷைக்கும் உயிராக இருக்கிறது.
இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவியிருந்தன. நமது மதத்துக்கு வேதம் பிரமாணம். எல்லா மதமும் நம்முடைய மதங்களே. எல்லாம் சேர்ந்து மறுபடியும் ஒன்றாகிவிடலாம். அஹம்பாவம் இல்லாமல் அன்பொடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமாகக் கேட்பார்கள். மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமான மதமாக ஆகும்”--- சுவாமிகள் உரை
செயல் வீரர்
அன்போடெ சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியாமாகக் கேட்பார்கள்- என்று சொன்ன சுவாமிகள் அன்போடு சொல்லி உலகம் முழுவதையும் சம்ஸ்கிருதத்தைக் கேட்கச் செய்தார்.1966 ஆம் ஆண்டில் ஐ.நா.சபையில் அவருடைய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ் சுப்புலெட்சுமி பாடியபோது உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதம் ஒலித்தது. இன்று மீண்டும் மீண்டும் அந்தப் பாடல் உலகம் முழுதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்துக்கு அழிவே கிடையாது என்று சுவாமிகள் சொன்னது சத்தியமான வாக்கு. அரசியல்வாதிகள், வரலாற்று அறிஞர்கள் போல வாய்ப் பந்தல் போடாமல் தூய உள்ளத்தால் உலகத்தையே வெற்றிகொண்டார். போரை ஒழித்து உலகம் முழுதும் அன்பு வெள்ளத்தைப் பெருக வைப்போம் என்ற கருத்துடைய அவரது மைத்ரீம் பஜத பாடல் பாரதப் பண்பாட்டின் சாரம் ஆகும்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடல் இதோ:
மைத்ரீம் பஜத !
மைத்ரீம் பஜத ,அகில ஹ்ருஜ் -ஜேத்ரீம்!
அனைத்துளம் வெல்லும் நேயம் வளர்ப்பீர்!
ஆத்மவதேவ பராநபி பச்யத !
தமைப்போல் மாற்றார் தமையும் காண்பீர்!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
விடுவீர் போரை,ஆதிக்க வெறியை!
த்யஜத பரேஷ்வக்ரமம்--ஆக்ரமணம்!
துறப்பீர் பிறரதைப் பறிக்குந்தீநெறியை!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே ,
விரும்புவதெல்லாம் தருபவள் புவித்தாய்;
ஜனகோதேவ : ஸகல தயாளு :!
கருணையில் கங்கையாம் எந்தை ஈசன் !
தாம்யத!தத்த !தயத்வம் ஜனதா:!
மாந்தரே! பொறை,கொடை,பரிவு பயில்வீர்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம் !
பாரினில் யாவரும் மேநிலையுறுவீர்!
(பாடல் லலிதா மித்தல் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது, நன்றி)
இந்தப் பாடல் வெளியானபோது ஒலிப் பதிவோடு, எம்.எஸ். அவர்கள் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெறச் சென்றார். உனது கியாதி (புகழ்) சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும் என்று எம்.எஸ்.ஸை ஆசிர்வதித்தார். அர்த்தம் புரிகிறதா?
சம்ஸ்கிருதமும் காஞ்சி சுவாமிகளின் பெருமையும் எக்காலத்தும் அழியாது.
சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும்!
Please read my other articles on Sanskrit: Contact [email protected] or [email protected]
![20120305_periyava.jpg](https://4.bp.blogspot.com/-Pi1jMdnKxhQ/UAJxpd7lGvI/AAAAAAAAA_I/ew6xFLyeuYo/s500/20120305_periyava.jpg)
Is Sanskrit dead or alive ? by S Swaminathan
சம்ஸ்கிருதம் இறந்த மொழியா? இந்தக் கேள்விக்கு காஞ்சி மஹா சுவாமிகள் இரண்டு பதில்கள் தந்தார். ஒன்று சொற்பொழிவில் தந்தார். இன்னொன்று செயலில் தந்தார்.
சொற்பொழிவு (12-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு)
நம்முடைய மதம் எப்படிப் பொது மதமோ அது போல ஸம்ஸ்க்ருதம் பொதுப்பாஷை. அதற்கும் ஊர் இல்லை.தெலுங்கு, தமிழ், இந்துஸ்தானி முதலியவற்றிற்குத் தேசம் உண்டு. ஸம்ஸ்க்ருதத்துக்குத் தேசமே இல்லை. இந்த ஸம்ஸ்க்ருதத்தைச் செத்துப்போன பாஷை என்று சிலர் சொல்லுகிறார்கள்.
எங்கள் அம்மாவுக்கு எனக்கு முன் ஒரு குழந்தை இருந்தது. அவள் ஒரு ஞானி. அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டது. அதற்காக அவள் அழவில்லை. அம்மாவுக்கு என்னிடம் நிரம்பப் பிரியம். ஒரு நாள் நான் அவளைப் பார்த்து, “ அம்மா பெரியவன் செத்துப் போனதற்கு நீ அழவில்லை; நான் செத்துப் போனால் அழுவாயோ மாட்டாயோ?” என்று கேட்டேன் “நீயும் அவனைப் போல பிள்ளைதானே; அவன் உடம்பில் செத்துப் போனான், நீ மனசில் செத்துப் போ” என்றாள். செத்துப்போன மனசை உடையவனாக வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த மாதிரிதான் ஸம்ஸ்க்ருதம் செத்துப் போயிற்று.
தனக்கு என்று ஒரு இடம் இருந்தால் பயம் இருக்கும். எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸம்ஸ்க்ருதம் . இப்பொழுது லோகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது. அவற்றில் பெரும்பலானவை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து உண்டானவை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. தமிழ் செய்யுளாக இருந்தால் அதற்கு உரை ஸம்ஸ்க்ருதம் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு, தோஷம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம். தேச பாஷையிலுள்ள கடினமான சொற்களுக்கு ஸம்ஸ்க்ருத வார்த்தைகளால் அர்த்தம் சொல்லி விளங்க வைக்கிறோம்.
சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்புதானே சாகிறது. அது உயிரோடு இருக்கிறது. பின்பு சாகிறது. உயிர் இல்லாதபோது அது செத்துப் போகிறது. உயிருக்கு மற்றோர் உயிர் ஏது? அது எப்பொழுதும் செத்ததுதான். ஸம்ஸ்க்ருதம் எல்லா பாஷைக்கும் உயிராக இருக்கிறது.
இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவியிருந்தன. நமது மதத்துக்கு வேதம் பிரமாணம். எல்லா மதமும் நம்முடைய மதங்களே. எல்லாம் சேர்ந்து மறுபடியும் ஒன்றாகிவிடலாம். அஹம்பாவம் இல்லாமல் அன்பொடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமாகக் கேட்பார்கள். மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமான மதமாக ஆகும்”--- சுவாமிகள் உரை
செயல் வீரர்
அன்போடெ சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியாமாகக் கேட்பார்கள்- என்று சொன்ன சுவாமிகள் அன்போடு சொல்லி உலகம் முழுவதையும் சம்ஸ்கிருதத்தைக் கேட்கச் செய்தார்.1966 ஆம் ஆண்டில் ஐ.நா.சபையில் அவருடைய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ் சுப்புலெட்சுமி பாடியபோது உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதம் ஒலித்தது. இன்று மீண்டும் மீண்டும் அந்தப் பாடல் உலகம் முழுதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்துக்கு அழிவே கிடையாது என்று சுவாமிகள் சொன்னது சத்தியமான வாக்கு. அரசியல்வாதிகள், வரலாற்று அறிஞர்கள் போல வாய்ப் பந்தல் போடாமல் தூய உள்ளத்தால் உலகத்தையே வெற்றிகொண்டார். போரை ஒழித்து உலகம் முழுதும் அன்பு வெள்ளத்தைப் பெருக வைப்போம் என்ற கருத்துடைய அவரது மைத்ரீம் பஜத பாடல் பாரதப் பண்பாட்டின் சாரம் ஆகும்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடல் இதோ:
மைத்ரீம் பஜத !
மைத்ரீம் பஜத ,அகில ஹ்ருஜ் -ஜேத்ரீம்!
அனைத்துளம் வெல்லும் நேயம் வளர்ப்பீர்!
ஆத்மவதேவ பராநபி பச்யத !
தமைப்போல் மாற்றார் தமையும் காண்பீர்!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
விடுவீர் போரை,ஆதிக்க வெறியை!
த்யஜத பரேஷ்வக்ரமம்--ஆக்ரமணம்!
துறப்பீர் பிறரதைப் பறிக்குந்தீநெறியை!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே ,
விரும்புவதெல்லாம் தருபவள் புவித்தாய்;
ஜனகோதேவ : ஸகல தயாளு :!
கருணையில் கங்கையாம் எந்தை ஈசன் !
தாம்யத!தத்த !தயத்வம் ஜனதா:!
மாந்தரே! பொறை,கொடை,பரிவு பயில்வீர்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம் !
பாரினில் யாவரும் மேநிலையுறுவீர்!
(பாடல் லலிதா மித்தல் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டது, நன்றி)
இந்தப் பாடல் வெளியானபோது ஒலிப் பதிவோடு, எம்.எஸ். அவர்கள் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெறச் சென்றார். உனது கியாதி (புகழ்) சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும் என்று எம்.எஸ்.ஸை ஆசிர்வதித்தார். அர்த்தம் புரிகிறதா?
சம்ஸ்கிருதமும் காஞ்சி சுவாமிகளின் பெருமையும் எக்காலத்தும் அழியாது.
சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும்!
Please read my other articles on Sanskrit: Contact [email protected] or [email protected]