drsundaram
Active member
இந்தியப் பிரதமர் நாட்டு மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறார்.அமெரிக்க ஜனாதிபதி சீன நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்.
இங்கிலாந்து இளவரசர் கொரோனாஎன்ற கொடிய தொற்றுநோயால்பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண எங்களிடத்தில் இடமில்லை ஆட்களுமில்லை என்று பொது இடத்தில் கதறுகிறார்.
உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?
அண்ட சராசரங்களையும் ஆளுவோம் என்று மார்தட்டிய வல்லரசு நாடுகள் இன்று கண்ணுக்கு புலப்படாத வைரஸை கண்டு அஞ்சி நிற்கின்றன.
சூரியனையும் சந்திரனையும் செவ்வாயையும் புதனையும் அணு அணுவாய் ஆராய்ச்சி செய்த மனித குலம் செய்வதறியாது கலங்கி நிற்கிறது.
செவ்வாய் கிரகத்தில் குடியேறப்போகிறோம் என்ற மனித இனம் பூமியில் வாழ வழியின்றி திகைத்து நிற்கின்றது.
நாட்டையும் நாட்டின் தலைவர்களையும் பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த மனித ஆற்றல் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் செத்து மடிகிறது.பணம் இருந்தால் போதும் அனைத்தையும் வென்று விடலாம் என்று எத்தனை ஆணவப் போக்குடன் திரிந்த மனிதர்கள் சுயநல போக்குடன். கலிகாலம் முற்றிவிட்டதா கடவுள் இப்போது நம்மளை காப்பாற்ற வருமா எத்தனை குழப்பங்கள் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறோம்
உலகம் இவ்வளவு தான்.
இங்கே எவனும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை.தன் மதம் தான் உயர்ந்தது , தன் சாதிதான் உயர்ந்ததுபணமே பிரதானம் நீதி நியாயத்துக்கு தலைவணங்காத மனிதர்கள் அகம்பாவம் கொண்ட மனிதர்கள் போன்ற அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்
கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்.
இங்கிலாந்து இளவரசர் கொரோனாஎன்ற கொடிய தொற்றுநோயால்பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண எங்களிடத்தில் இடமில்லை ஆட்களுமில்லை என்று பொது இடத்தில் கதறுகிறார்.
உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?
அண்ட சராசரங்களையும் ஆளுவோம் என்று மார்தட்டிய வல்லரசு நாடுகள் இன்று கண்ணுக்கு புலப்படாத வைரஸை கண்டு அஞ்சி நிற்கின்றன.
சூரியனையும் சந்திரனையும் செவ்வாயையும் புதனையும் அணு அணுவாய் ஆராய்ச்சி செய்த மனித குலம் செய்வதறியாது கலங்கி நிற்கிறது.
செவ்வாய் கிரகத்தில் குடியேறப்போகிறோம் என்ற மனித இனம் பூமியில் வாழ வழியின்றி திகைத்து நிற்கின்றது.
நாட்டையும் நாட்டின் தலைவர்களையும் பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த மனித ஆற்றல் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் செத்து மடிகிறது.பணம் இருந்தால் போதும் அனைத்தையும் வென்று விடலாம் என்று எத்தனை ஆணவப் போக்குடன் திரிந்த மனிதர்கள் சுயநல போக்குடன். கலிகாலம் முற்றிவிட்டதா கடவுள் இப்போது நம்மளை காப்பாற்ற வருமா எத்தனை குழப்பங்கள் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறோம்
உலகம் இவ்வளவு தான்.
இங்கே எவனும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை.தன் மதம் தான் உயர்ந்தது , தன் சாதிதான் உயர்ந்ததுபணமே பிரதானம் நீதி நியாயத்துக்கு தலைவணங்காத மனிதர்கள் அகம்பாவம் கொண்ட மனிதர்கள் போன்ற அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்