• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சந்திர க்ரஹணம்

உத்திராட நக்ஷத்திரத்தில் கேது க்ரஸ்த சந்திர க்ரஹணம் ஸம்பவிக்கிறது

ஆரம்பம் - நடு இரவு - (17/07/19) 1.32 am
மத்யமம் - பின்னரவு - (17/07/19) 3.01 am
மோக்ஷம் - பின்னரவு -(17/07/19) 4.29 am

16.07.19 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்குள் போஜனம் பண்ணலாம்.

க்ரஹணத்திற்கு முன் பக்வம் செய்த அன்னம் மீண்டும் பயன்படுத்த கூடாது.

க்ரஹணம் விட்டவுடன் எல்லோரும் ஸ்நானம் செய்யவும்.

ரஜஸ்வலையான (தூரமானாள்) ஸ்த்ரீகளும் கூட க்ரஹண காலத்தில் தீர்த்தாமாடவேண்டும்.

பூராடம், உத்திராடம், ச்ரவணம் க்ருத்திகை, உத்திரம் நக்ஷத்திரக் காரர்கள் பரிஹாரம் செய்து கொள்ளவும்.

க்ரஹணத்தில் ஜபம்/ தானம் அபரிமிதமான பலனை தரும்.

சந்த்ர க்ரஹண புண்யகால தர்ப்பணம்

தகப்பனார் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யவேண்டும்.

க்ரஹண புண்யகால தர்ப்பணம் அதிகாலை 03.00 மணிக்கு மேல் 4.29 மணிக்குள் ஸ்நானம் செய்து பிறகு செய்ய வேண்டும்.

பிறப்பு இறப்பு தீட்டு உள்ளவர்கள் கூட இந்த க்ரஹண காலத்தில் தீர்த்தாமாடி க்ரஹண தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். தன் சக்திக்கேற்ப்ப தானம் செய்யவேண்டும்.

க்ரஹணம் விட்டவுடன் மீண்டும் ஒரு முறை சுத்த ஸ்நானம் செய்யவும்.
_____________
சந்த்ர க்ரஹண புண்யகால ஸங்கல்பம்

விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே
கிரீஷ்ம ருதௌ மிதுன மாசே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ, பௌம வாஸர, உத்ராஷாடா நக்ஷத்திர யுக்தாயாம் கேது க்ரஸ்த ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக ச்ராத்த ப்ரதிநிதி திலதர்ப்பணம் கரிஷ்யே.

**************

17/07/2019 புதன்
அன்று முற்பகல் 11.38 மணிக்கு தான் கடக ரவி சங்க்ரமணம்.

க்ரஹண தர்ப்பணம் முடித்து ஸ்நானம் செய்த பின் தக்ஷிணாயண புண்யகால தர்ப்பணம் செய்யும் முன்பு அதற்கென ஒருமுறை மீண்டும் ஸ்நானம் செய்த பின்பே தர்ப்பணம் பண்ண வேண்டும்.

பகல் 11.30 மணிக்குள் உத்தராயணம் இருக்கும் போதே தக்ஷிணாயண புண்யகால தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் இரு தர்ப்பணமா என்று பலருக்கு சந்தேகம். ஸங்க்ரமண தர்ப்பணமும், க்ரஹணமும் நேர்ந்தால் இரண்டுமே நைமித்திகங்களாகையால் அதனதன் நிமித்தங்களின் காலங்களில் அதை அதை அநுஷ்ட்டிக்கவேண்டும். அதாவது இரண்டும் அவச்யம் செய்யவேணும்.
_____________
தக்ஷிணாயண புண்யகால தர்ப்பண ஸங்கல்பம்

விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே
கிரீஷ்ம ருதௌ மிதுன மாசே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர, உத்ராஷாடா நக்ஷத்திர யுக்தாயாம் தக்ஷிணாயன புண்யகாலே கடக சங்க்ரமண ச்ராத்த ப்ரதிநிதி திலதர்ப்பணம் கரிஷ்யே.

************
 

Latest ads

Back
Top