• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கோவில்கள் அதிசயங்களும்! விளக்கங்களும்!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயில்

2.கும்பகோணமருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டைஇடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலைகடம்பவன நாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5.கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்த லம்கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டு ம் இது போல் காட்சிதருகிறார்.

6.நாச்சியார் கோவில்கல்கருடன் சன்னதியில் 4பேர் தூக்குவார்கள்பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7.ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமா னுஜர் உருவம் விக்ரஹமோ, வேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8.திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வ நாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்கவடிவில் காய்காய்க்கிறது .

9.கும்பகோணம் அருகே திருநல் லூரில் உள்ள சிவலிங்க த் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ் வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன் புத்தூரில் உள்ள தவ நந்திகேஸ்வரர் ஆல யத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிர தான சாலைகளில் சந்திப்பி ல் உள்ள 72 அடி ஆஞ்ச நேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ளபத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12.வேலூர் அருகேஉள்ளவிருஞ்சிபுரம் என்றதலத்தில் உள்ள கோயில் தூணின் தென் புறம் அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12 வ ரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம்உள்ள பள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண் ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இரு க்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவி லில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள் ளது.

15.மதுரை மீனாக்ஷி அம்மன்கோயி லில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள்கிடையாது.

16.கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கோமளவல்லி தாயாருக் கு படிதாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு- பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தினால் .
 

Latest ads

Back
Top