குலசேகராழ்வார்

குலசேகர ஆழ்வார் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பராபவ ஆண்டு மாசித் திங்கள், புனர்பூச நட்சத்திரத்தில் சேரநாட்டு அரசராகிய திருவிரதனுக்கும், அரசி நாதநாயகிக்கும் திருமாலின் திருமார்பில் இருக்கும் கௌஸ்துபம் என்னும் மணியின் அம்சமாக கேரளத்தில் உள்ள திருவஞ்சிக்களம் என்னும் தலத்தில் அவதரித்தார்.
¹
திருவரங்கப் பெருமான் மீது பக்திக் கொண்டு அரங்கனுக்கு அரணாக மூன்றாம் சுற்று மதில் சுவரை கட்டினார். தற்போதும் இது குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது. தம் மகனுக்கு பட்டம் சூட்டி துறவறம் பூண்டு திருவேங்கடம் சென்று பெருமாளுக்குத் தொண்டு செய்தார். தமது பெருமாள் திருமொழியில் "வேங்கடவா! உன் கோயிற்படியாக இருக்க விரும்புகிறேன்" என்று பாடியதால் பெருமாள் கருவறையிலுள்ள நுழைவாயிற்படி இன்றும் "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுகிறது.

திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு "பெருமாள் திருமொழி" என்ற 105 பாசுரங்களைக் கொண்ட தமிழ்ப்பாடல்களையும், "முகுந்த மாலை" என்ற 40 பாடல்களைக் கொண்ட வடமொழிப்பாடல்களையும் அருளினார்.

ஆழ்வார் தனியன்:

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே |

தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

ஆழ்வார் வாழி திருநாமம்:

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம் .

1614134017658.png
 
Back
Top