காப்பிட வாராய்.
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள்* தீமைகள் செய்வார்*
எல்லாம்உன் மேலன்றிப் போகாது* எம்பிரான்! நீஇங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச்* சொப்படக் காப்பிட வாராய்.
ஸ்ரீபெரியாழ்வார் ♦ பெ. திருமொழி 2.8.5 நா.தி.பி (196)
(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீம்புகளைச்செய்பவர்களாகிய
சிறுவர்கள் அனேக ஆயிரக்கணக்கானவர்கள்;
அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேலல்லாமல் (வேறொருவர் மேலும்) ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்!
நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்!
ஞானஓளியை உடையவனே!
உன் திருமேனியை சொல்நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி மங்களாசாஸநம் செய்து
நன்றாக காப்பு இட வாராய்!
பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம்தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம்.
எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார்.
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள்* தீமைகள் செய்வார்*
எல்லாம்உன் மேலன்றிப் போகாது* எம்பிரான்! நீஇங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச்* சொப்படக் காப்பிட வாராய்.
ஸ்ரீபெரியாழ்வார் ♦ பெ. திருமொழி 2.8.5 நா.தி.பி (196)
(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீம்புகளைச்செய்பவர்களாகிய
சிறுவர்கள் அனேக ஆயிரக்கணக்கானவர்கள்;
அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேலல்லாமல் (வேறொருவர் மேலும்) ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்!
நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்!
ஞானஓளியை உடையவனே!
உன் திருமேனியை சொல்நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி மங்களாசாஸநம் செய்து
நன்றாக காப்பு இட வாராய்!
பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம்தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம்.
எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார்.