காஞ்சி சங்கரமடத்தின் ேசைவ Vs தமிழக அரசு
சின்மயா வித்யாலயா பள்ளிகள், சங்கரா வித்யாலயா பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் தருவது மக்கள் சேவையே அல்ல வெறும் வியாபாரம்தான் என்கிறார் ஜெய்சங்கர்.
முதலில் பொது மக்களுக்குச் சேவை செய்வது என்றால் அது கட்டாயம் இலவசமாகத்தான் இருந்தாகவேண்டும் எனும் எண்ணத்தால் விளைகின்ற பார்வைக்குறை காரணமாக எழும் எண்ணம் என்றே கருதுகிறேன்.
தரம்மிக்க பள்ளிக் கல்வி என்பது தமிழகத்தின் தலைநகரமான சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை,என அனைத்துப் பகுத்திகளிலும் கிடைக்கவேண்டும் எனும் எண்ணம் சேவை மனப்பான்மையால் விளைவது.
சங்கரா பள்ளிகள், சின்மயா பள்ளிகளின் கல்விச்சேவையின் தரம் உயர்ந்தது. படிக்கும் மாணாக்கர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைக்க நல்ல கல்வி புகட்டுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து கெட்டு அழிவதைத் தடுக்க அதிமுக தமிழக அரசு அறுநூறு டாஸ்மாக் கடைகளை தமிழகமெங்கும் திறந்தது! டாஸ்மாக் திட்டத்துக்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலில் வென்ற பாமக,திமுக கூட்டணி அரசில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டு 34000 பேருக்கு வேலை வாய்ப்புத்தரப்பட்டு "நல்ல" சாராய வியாபாரம் மூலம் 2005-2006 ஆம் ஆண்டில் 5660 கோடி லாபம் தமிழக அரசுக்குக் கிடைத்தது 2006-2007 ஆம் ஆண்டு லாபம் 6965 கோடி லாபம் டாச்மாக் சரக்குகள் மீதான விற்பனை வரிமூலம் அரசுக்கு லாபமாகக் கிடைக்கிறது! டாஸ்மாக் பிஸினஸ் விபரம் இங்கே
இலவச நிலம், இலவச டிவி, இலவச கேஸ் ஸ்டவ் திமுக கூட்டணி அரசு (திமுக+ கூட்டணிக் கட்சி சார்ந்த)பொதுமக்களுக்கு வழங்குவதற்கான செலவு சில நூறு கோடிகள்தான்
மொத்தமே ஆயிரம் கோடிக்குள் வந்துவிடும்!
இம்மாதிரி குடும்பத்தைக் குடிகொண்டு கெடுக்கும் இலவச சேவைத்திட்டங்கள் தமிழகத் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது, கீழ்மட்ட தமிழ் மக்களின் வாழ்வை டாஸ்மாக் சாராயக்கடைகளில் அழித்துவிட்டு அரசு செய்வது எனும் உண்மை பெரும்பான்மை பொது மக்களுக்குப் புரியாதது முழுமையான விழிப்புத்திறன் தரும் தரமான கல்விக்கூடங்கள் வெகுதியாக தமிழக மெங்கும் இல்லாததால் தானே இந்த ஏமாற்றுதல் நடந்தேறுகிறது தமிழகத்தில்!
ஒரு பீர் பாட்டில் விலை 35 ரூபாய், ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை 60 ரூபாய் ஒருநாளைக்கு ஒரு குடிமகன் 50 ரூபாய்க்குக் குடித்தால் மாதத்திற்கு 1500ரூபாய் மூன்று மாதத்திற்கு 4500 ரூபாய். இது போக போதையில் தெருவில் கவிழ்ந்து கிடந்து கிழிபடும் உடைகள், தொலைக்கும் பொருட்கள், ஆரோக்கியக்குறைவுக்கு மருத்துவச்செலவு என இன்னொரு ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சின்மயா பள்ளிக்கூடத்தில் எல்கேஜிக்கு மூன்று மாத டெர்ம் கட்டணம் 2500 மிக அதிகம் என்று குற்றம் சாட்டினார் ஜெய்சங்கர். மூன்று மாதம் சாரயம் குடிப்பதற்கு ஒரு சாமானியத் தமிழன் செலவழிப்பது குறைந்தபட்ட்சம் 3500 ரூபாய்!
மூன்று மாதத்திற்கு 2500 ரூ செலவில் தரமான கல்விக்காக சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கச் சராசரியான தமிழனால் முடியாதா??
எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?
நல்ல சாராயத்தை, சரக்கை டாஸ்மாக்கிலே காசுகொடுத்துப் பெறும் தமிழன் நல்ல தரமான கல்வியை பெற அது இலவசமாகத் தரப்படவேண்டும் எனச் சேவை என்றால் அது இலவசமாகத்தான் எனும் திராவிட அரசியல் மனோவியாதிக்கு உட்பட்டு எதிர்பார்ப்பது சரியானதா?
தமிழ்நாட்டில் கல்வி கற்க இல்லாமையைக் காரணம் காட்டுவது மிகவும் தவறானது. அரசே மக்களுக்கு காலம் காலமாக உவப்போடு தருவது இலவசச் சேவைத்திட்டங்களும், சாரயமும் தான்! சாமானியப் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகக் கல்வி கற்றால் அடுத்து திமுக, அதிமுக, பாமக , தேமுதிக என இலவசத்திட்டங்கள் வாயிலாக மக்களைக் கவர்ந்து ஓட்டுப்பொறுக்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது.
பெருவாரியான கல்விக்கூடங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் போது இடஒதுக்கீடு அரசியலும் தானே காணாமல் போகும்! ஆனால் நாற்பதாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்தில் மைனாரிட்டி கிறித்துவக் கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வெகுதியாகத் தெரியும்படியாகக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைவாகவேயும், இன்னமும் படிக்க இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கித்தரும் அளவிலேயே இடப்பற்றாக்குறையிலேயே வைத்திருப்பது சமூக நீதி அரசியல்வாதிகளின் சமூகநீதி இயக்கங்கள்?!
டாஸ்மாக் சாராயக்கடைகளில் ஊற்றித்தர 35000 வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பகுத்தறிவுத் தமிழகஅரசு மிகநிச்சயமாக அழித்தது மூன்றரை இலட்சம் குடும்பங்களாவது இருக்கும்.
கழகங்களின் தமிழக அரசுகள் தரமான கல்வி நிறுவனங்கள் அமைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தவில்லை ஏன்? அனைவரும் கல்வி கற்றால் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முதலில் காணாமல் போவது கழகங்கள் தான்!
மருத்துவ மனையில் பதிவுக்கட்டணம் 30 ரூபாயில் இருந்து 100-125 ரூபாய்க்கு சங்கரா மருத்துவமனைகளில் இருக்கிறது என்றார் ஜெய்சங்கர். சங்கரா மருத்துவமனையில் தேவையே இல்லாத எக்ஸ்ரே, லேப் டெஸ்ட்கள், என ஐநூறு ரூபாய்க்குச் செலவு என்ற இதர மருத்துவமனையில் நோயாளிகளிடம் பிடுங்குவதுமாதிரி செய்வதில்லைதானே!
சங்கரா கண்மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் நவீன டெக்னாலஜியில் என்றுமே முன்னோடியாக முதன்மையில் இருக்கிறது. அரவிந்த் நிறுவனத்தையும் குறை கூறமுடியாது. என்றபோதும் கண்தான, மாற்று சிகிச்சை இவைகளில் முன்னோடி சங்கர நேத்ராலயா!
10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயாளியான எனது தாய்க்கு காட் ராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு லென்ஸைக் கண்விழிக்குள்ளேயே வைத்துச் செய்யும் நவீனமுறையில் 25,000 ரூபாய்க்கு செய்தார்கள் சங்கர நேத்ராலயாவில். இன்றுவரை பிரச்சினையில்லை!
சென்னையில் வேலை செய்த காலத்தில் இஎஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவம் பெற என்று 3% சம்பளத்தினைப் பிடித்துக்கொள்வார்கள். இஎஸ்.ஐ மருத்துவமனைக்காக பல ஆயிரம் ரூபாய்கள் ஐந்தாண்டுகளில் கட்டாயமாகத் தந்திருக்கிறேன். சைதாப்பேட்டை, கே.கே நகர் இஎஸ்.ஐ கிளை மருத்துவமனைகளுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்! ஐயோ பரிதாபம் எனும் சேவை! இத்தனைக்கும் மாதம் பணம் கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவச் சேவையின் இலட்சணம்! அரசு மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை! எல்லாவற்றுக்கும் த.நா வெள்ளை மாத்திரை + பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஊதாநிறத் திரவம் தான்!
முறையான கட்டணத்தில் உயர் தரமான கல்வி, மருத்துவம் தரும் முயற்சி சேவை இல்லாமல் வேறு என்ன?? இல்லாத சில ஆயிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடையாளர்களுடன் இருக்கும் நல்ல உறவைப் பயன்படுத்தி இலவசமாக கல்வி, மருத்துவம் தருபவை சங்கரா, சின்மயா நிறுவனங்கள்!
அப்பல்லோவுடன் சங்கரா மருத்துவமனைகளின் சேவைத்தரத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம். கட்டணம் அப்பல்லோவினை விட மிகவும் குறைவானதே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தமிழகத்தில் வன்னியர்களது பங்களிப்பாக செங்கல்வராயன் பாலிடெக்னிக், ஆதிபராசக்தி கல்விநிறுவனங்கள் என்பவையும், சௌராஷ்டிர சமூகத்தினரது பங்களிப்பாக சௌராஷ்டிரா பாலிடெக்னிக்,கல்லூரி நிறுவனங்கள், செட்டியார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக அழகப்பா, அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், நாடார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி நிறுவனங்கள் என இச்சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் இடங்களில் இச்சமூகத்தினரது பிரத்யேக முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் வாயிலாக அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் பயன்பெற்றிருக்கின்றார்கள். விழிப்பு பெற்று இருக்கின்றார்கள்.
அரசு ஆதரவு , அதிகாரம் இல்லாமல், இன்றைக்கும் லாரியிலே ஏற்றினால் நாலு பேர் குறைவார்கள் எனும் அளவுக்குக் குறைந்த அளவில் தமிழக,இந்திய மக்கள் தொகையில் இருக்கும் பிராமணர்கள் தமிழ் நாடெங்கும் , இந்தியாவெங்கும் வெகுதியாக இருப்போருக்காகவும் தமிழகம், இந்தியா முழுக்க நல்ல தரமான பள்ளிக்கல்விக்கு தரமான மத்தியக் கல்வித்திட்ட, மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தில் சங்கரா வித்யாலயா, சின்மயா பள்ளிகள், மருத்துவமனைகள் திறந்து நடத்துவது பொதுமக்கள் சேவை இல்லையா??
சசிகலாவின் மதுத்தொழிற்சாலை, உடையாரின் மதுத்தொழிற்சலை, விஜய் மல்லயாவின் மதுத்தொழிற்சாலைகளில் இருந்து வாங்கப்படும் மதுவகைகளை 7500 கோடிக்குத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சாராய வியாபரம் செய்து நல்ல சாராயத்தை டாஸ்மாக்கின் வாயிலாக பெருவாரியான பொதுமக்களுக்கு இல்லந்தோறும் 8000 கடைகள் வாயிலாக எடுத்துச்சென்று போதையில் இருக்கும் சமூகத்திற்கு சில நூறுகோடிகளுக்கு கழக ஏஜெண்டுகளுக்குக் கமிஷன், கட்டிங்குகள்குக்காக இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம் என்று சீரழித்துவிட்டு
பார்ப்பனர்கள் அடிமைப்படுத்தினார்கள், பார்ப்பனர்கள் ஒடுக்கினார்கள் என்று ஓலம் போடுவதுதான் மக்கள் சேவையா??
சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா கல்வி, மருத்துவ நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளால் மூன்று பேரைக்கூட அழிக்காது ஆண்டுக்கு 100,000 ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேல் தரமான கல்வி அறிவோடு நல்ல சிந்தனையையும் மனதில் விதைத்து சாராயபோதையில் சீரழிந்த தமிழ்நாட்டு மக்கள் சமூகத்தினை தெளிவாக்கிவரும் சேவையைச் தொடர்ந்து செய்கிறது!
இந்தக் கல்வி இயக்கங்கள் அமைத்து நல்ல கல்வி முறையான கட்டணத்தில் அனைவருக்கும் தந்து, பெரிய அளவிலான சமூக விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஆயிரக்கணக்கான பிராமணர்களைச் சேர்கிறது எனும் வகையில் நான் முன்பே சொன்ன கருத்தான:
"//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//"
மிகவும் சரியானது! சமூக விழிப்புணர்வை எடுத்துவரும் தரம்மிக்க சேவையை வழமையாக பிராமணர்கள் தற்போதும் முன்ணணியில் இருந்து முன்னோடியாகச் செய்துவருகின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை!
பகுத்தறிவு சுடர்விட, சுயமரியாதையோடு யோசியுங்கள்!
thanks to drear friend mr hariharan
சின்மயா வித்யாலயா பள்ளிகள், சங்கரா வித்யாலயா பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் தருவது மக்கள் சேவையே அல்ல வெறும் வியாபாரம்தான் என்கிறார் ஜெய்சங்கர்.
முதலில் பொது மக்களுக்குச் சேவை செய்வது என்றால் அது கட்டாயம் இலவசமாகத்தான் இருந்தாகவேண்டும் எனும் எண்ணத்தால் விளைகின்ற பார்வைக்குறை காரணமாக எழும் எண்ணம் என்றே கருதுகிறேன்.
தரம்மிக்க பள்ளிக் கல்வி என்பது தமிழகத்தின் தலைநகரமான சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை,என அனைத்துப் பகுத்திகளிலும் கிடைக்கவேண்டும் எனும் எண்ணம் சேவை மனப்பான்மையால் விளைவது.
சங்கரா பள்ளிகள், சின்மயா பள்ளிகளின் கல்விச்சேவையின் தரம் உயர்ந்தது. படிக்கும் மாணாக்கர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைக்க நல்ல கல்வி புகட்டுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து கெட்டு அழிவதைத் தடுக்க அதிமுக தமிழக அரசு அறுநூறு டாஸ்மாக் கடைகளை தமிழகமெங்கும் திறந்தது! டாஸ்மாக் திட்டத்துக்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலில் வென்ற பாமக,திமுக கூட்டணி அரசில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டு 34000 பேருக்கு வேலை வாய்ப்புத்தரப்பட்டு "நல்ல" சாராய வியாபாரம் மூலம் 2005-2006 ஆம் ஆண்டில் 5660 கோடி லாபம் தமிழக அரசுக்குக் கிடைத்தது 2006-2007 ஆம் ஆண்டு லாபம் 6965 கோடி லாபம் டாச்மாக் சரக்குகள் மீதான விற்பனை வரிமூலம் அரசுக்கு லாபமாகக் கிடைக்கிறது! டாஸ்மாக் பிஸினஸ் விபரம் இங்கே
இலவச நிலம், இலவச டிவி, இலவச கேஸ் ஸ்டவ் திமுக கூட்டணி அரசு (திமுக+ கூட்டணிக் கட்சி சார்ந்த)பொதுமக்களுக்கு வழங்குவதற்கான செலவு சில நூறு கோடிகள்தான்
மொத்தமே ஆயிரம் கோடிக்குள் வந்துவிடும்!
இம்மாதிரி குடும்பத்தைக் குடிகொண்டு கெடுக்கும் இலவச சேவைத்திட்டங்கள் தமிழகத் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது, கீழ்மட்ட தமிழ் மக்களின் வாழ்வை டாஸ்மாக் சாராயக்கடைகளில் அழித்துவிட்டு அரசு செய்வது எனும் உண்மை பெரும்பான்மை பொது மக்களுக்குப் புரியாதது முழுமையான விழிப்புத்திறன் தரும் தரமான கல்விக்கூடங்கள் வெகுதியாக தமிழக மெங்கும் இல்லாததால் தானே இந்த ஏமாற்றுதல் நடந்தேறுகிறது தமிழகத்தில்!
ஒரு பீர் பாட்டில் விலை 35 ரூபாய், ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை 60 ரூபாய் ஒருநாளைக்கு ஒரு குடிமகன் 50 ரூபாய்க்குக் குடித்தால் மாதத்திற்கு 1500ரூபாய் மூன்று மாதத்திற்கு 4500 ரூபாய். இது போக போதையில் தெருவில் கவிழ்ந்து கிடந்து கிழிபடும் உடைகள், தொலைக்கும் பொருட்கள், ஆரோக்கியக்குறைவுக்கு மருத்துவச்செலவு என இன்னொரு ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சின்மயா பள்ளிக்கூடத்தில் எல்கேஜிக்கு மூன்று மாத டெர்ம் கட்டணம் 2500 மிக அதிகம் என்று குற்றம் சாட்டினார் ஜெய்சங்கர். மூன்று மாதம் சாரயம் குடிப்பதற்கு ஒரு சாமானியத் தமிழன் செலவழிப்பது குறைந்தபட்ட்சம் 3500 ரூபாய்!
மூன்று மாதத்திற்கு 2500 ரூ செலவில் தரமான கல்விக்காக சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கச் சராசரியான தமிழனால் முடியாதா??
எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?
நல்ல சாராயத்தை, சரக்கை டாஸ்மாக்கிலே காசுகொடுத்துப் பெறும் தமிழன் நல்ல தரமான கல்வியை பெற அது இலவசமாகத் தரப்படவேண்டும் எனச் சேவை என்றால் அது இலவசமாகத்தான் எனும் திராவிட அரசியல் மனோவியாதிக்கு உட்பட்டு எதிர்பார்ப்பது சரியானதா?
தமிழ்நாட்டில் கல்வி கற்க இல்லாமையைக் காரணம் காட்டுவது மிகவும் தவறானது. அரசே மக்களுக்கு காலம் காலமாக உவப்போடு தருவது இலவசச் சேவைத்திட்டங்களும், சாரயமும் தான்! சாமானியப் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகக் கல்வி கற்றால் அடுத்து திமுக, அதிமுக, பாமக , தேமுதிக என இலவசத்திட்டங்கள் வாயிலாக மக்களைக் கவர்ந்து ஓட்டுப்பொறுக்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது.
பெருவாரியான கல்விக்கூடங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் போது இடஒதுக்கீடு அரசியலும் தானே காணாமல் போகும்! ஆனால் நாற்பதாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்தில் மைனாரிட்டி கிறித்துவக் கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வெகுதியாகத் தெரியும்படியாகக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைவாகவேயும், இன்னமும் படிக்க இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கித்தரும் அளவிலேயே இடப்பற்றாக்குறையிலேயே வைத்திருப்பது சமூக நீதி அரசியல்வாதிகளின் சமூகநீதி இயக்கங்கள்?!
டாஸ்மாக் சாராயக்கடைகளில் ஊற்றித்தர 35000 வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பகுத்தறிவுத் தமிழகஅரசு மிகநிச்சயமாக அழித்தது மூன்றரை இலட்சம் குடும்பங்களாவது இருக்கும்.
கழகங்களின் தமிழக அரசுகள் தரமான கல்வி நிறுவனங்கள் அமைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தவில்லை ஏன்? அனைவரும் கல்வி கற்றால் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முதலில் காணாமல் போவது கழகங்கள் தான்!
மருத்துவ மனையில் பதிவுக்கட்டணம் 30 ரூபாயில் இருந்து 100-125 ரூபாய்க்கு சங்கரா மருத்துவமனைகளில் இருக்கிறது என்றார் ஜெய்சங்கர். சங்கரா மருத்துவமனையில் தேவையே இல்லாத எக்ஸ்ரே, லேப் டெஸ்ட்கள், என ஐநூறு ரூபாய்க்குச் செலவு என்ற இதர மருத்துவமனையில் நோயாளிகளிடம் பிடுங்குவதுமாதிரி செய்வதில்லைதானே!
சங்கரா கண்மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் நவீன டெக்னாலஜியில் என்றுமே முன்னோடியாக முதன்மையில் இருக்கிறது. அரவிந்த் நிறுவனத்தையும் குறை கூறமுடியாது. என்றபோதும் கண்தான, மாற்று சிகிச்சை இவைகளில் முன்னோடி சங்கர நேத்ராலயா!
10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயாளியான எனது தாய்க்கு காட் ராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு லென்ஸைக் கண்விழிக்குள்ளேயே வைத்துச் செய்யும் நவீனமுறையில் 25,000 ரூபாய்க்கு செய்தார்கள் சங்கர நேத்ராலயாவில். இன்றுவரை பிரச்சினையில்லை!
சென்னையில் வேலை செய்த காலத்தில் இஎஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவம் பெற என்று 3% சம்பளத்தினைப் பிடித்துக்கொள்வார்கள். இஎஸ்.ஐ மருத்துவமனைக்காக பல ஆயிரம் ரூபாய்கள் ஐந்தாண்டுகளில் கட்டாயமாகத் தந்திருக்கிறேன். சைதாப்பேட்டை, கே.கே நகர் இஎஸ்.ஐ கிளை மருத்துவமனைகளுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்! ஐயோ பரிதாபம் எனும் சேவை! இத்தனைக்கும் மாதம் பணம் கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவச் சேவையின் இலட்சணம்! அரசு மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை! எல்லாவற்றுக்கும் த.நா வெள்ளை மாத்திரை + பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஊதாநிறத் திரவம் தான்!
முறையான கட்டணத்தில் உயர் தரமான கல்வி, மருத்துவம் தரும் முயற்சி சேவை இல்லாமல் வேறு என்ன?? இல்லாத சில ஆயிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடையாளர்களுடன் இருக்கும் நல்ல உறவைப் பயன்படுத்தி இலவசமாக கல்வி, மருத்துவம் தருபவை சங்கரா, சின்மயா நிறுவனங்கள்!
அப்பல்லோவுடன் சங்கரா மருத்துவமனைகளின் சேவைத்தரத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம். கட்டணம் அப்பல்லோவினை விட மிகவும் குறைவானதே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தமிழகத்தில் வன்னியர்களது பங்களிப்பாக செங்கல்வராயன் பாலிடெக்னிக், ஆதிபராசக்தி கல்விநிறுவனங்கள் என்பவையும், சௌராஷ்டிர சமூகத்தினரது பங்களிப்பாக சௌராஷ்டிரா பாலிடெக்னிக்,கல்லூரி நிறுவனங்கள், செட்டியார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக அழகப்பா, அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், நாடார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி நிறுவனங்கள் என இச்சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் இடங்களில் இச்சமூகத்தினரது பிரத்யேக முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் வாயிலாக அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் பயன்பெற்றிருக்கின்றார்கள். விழிப்பு பெற்று இருக்கின்றார்கள்.
அரசு ஆதரவு , அதிகாரம் இல்லாமல், இன்றைக்கும் லாரியிலே ஏற்றினால் நாலு பேர் குறைவார்கள் எனும் அளவுக்குக் குறைந்த அளவில் தமிழக,இந்திய மக்கள் தொகையில் இருக்கும் பிராமணர்கள் தமிழ் நாடெங்கும் , இந்தியாவெங்கும் வெகுதியாக இருப்போருக்காகவும் தமிழகம், இந்தியா முழுக்க நல்ல தரமான பள்ளிக்கல்விக்கு தரமான மத்தியக் கல்வித்திட்ட, மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தில் சங்கரா வித்யாலயா, சின்மயா பள்ளிகள், மருத்துவமனைகள் திறந்து நடத்துவது பொதுமக்கள் சேவை இல்லையா??
சசிகலாவின் மதுத்தொழிற்சாலை, உடையாரின் மதுத்தொழிற்சலை, விஜய் மல்லயாவின் மதுத்தொழிற்சாலைகளில் இருந்து வாங்கப்படும் மதுவகைகளை 7500 கோடிக்குத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சாராய வியாபரம் செய்து நல்ல சாராயத்தை டாஸ்மாக்கின் வாயிலாக பெருவாரியான பொதுமக்களுக்கு இல்லந்தோறும் 8000 கடைகள் வாயிலாக எடுத்துச்சென்று போதையில் இருக்கும் சமூகத்திற்கு சில நூறுகோடிகளுக்கு கழக ஏஜெண்டுகளுக்குக் கமிஷன், கட்டிங்குகள்குக்காக இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம் என்று சீரழித்துவிட்டு
பார்ப்பனர்கள் அடிமைப்படுத்தினார்கள், பார்ப்பனர்கள் ஒடுக்கினார்கள் என்று ஓலம் போடுவதுதான் மக்கள் சேவையா??
சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா கல்வி, மருத்துவ நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளால் மூன்று பேரைக்கூட அழிக்காது ஆண்டுக்கு 100,000 ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேல் தரமான கல்வி அறிவோடு நல்ல சிந்தனையையும் மனதில் விதைத்து சாராயபோதையில் சீரழிந்த தமிழ்நாட்டு மக்கள் சமூகத்தினை தெளிவாக்கிவரும் சேவையைச் தொடர்ந்து செய்கிறது!
இந்தக் கல்வி இயக்கங்கள் அமைத்து நல்ல கல்வி முறையான கட்டணத்தில் அனைவருக்கும் தந்து, பெரிய அளவிலான சமூக விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஆயிரக்கணக்கான பிராமணர்களைச் சேர்கிறது எனும் வகையில் நான் முன்பே சொன்ன கருத்தான:
"//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//"
மிகவும் சரியானது! சமூக விழிப்புணர்வை எடுத்துவரும் தரம்மிக்க சேவையை வழமையாக பிராமணர்கள் தற்போதும் முன்ணணியில் இருந்து முன்னோடியாகச் செய்துவருகின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை!
பகுத்தறிவு சுடர்விட, சுயமரியாதையோடு யோசியுங்கள்!
thanks to drear friend mr hariharan