கல்யாண வரம் தரும் நித்ய கல்யாணப்பெருமாள&

Status
Not open for further replies.
கல்யாண வரம் தரும் நித்ய கல்யாணப்பெருமாள&


கல்யாண வரம் தரும் நித்ய கல்யாணப்பெருமாள்


1a1d6f20-cf64-451c-8dc5-d244d8339172_S_secvpf.gif



திருத்தணியிலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் நெமிலி என்னும் கிராமம் உள்ளது. இங்கே நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் உள்ளது. பெருமாளின் வலது உள்ளங்கையில் நடுவில் தாமரைப் பூ தெரிகிறது. அதே கையின் மணிக்கட்டில், கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

கங்கணம் என்பது கங்கணப் ப்ராப்தி, அதாவது கல்யாணச் சடங்கின் அறிகுறி. இங்கு திருமணப் பிராத்தனை செய்து கொள்ள விரும்புபவர்கள் கையில் அர்ச்சனை தட்டோடு, இரண்டு மாலைகளும் கொண்டு வர வேண்டும். ஜாதகம் இருந்தால் அதையும் எடுத்துக் கொண்டு வரலாம்.

ஜாதகத்தை காளிங்க நர்த்தன கண்ணனின் காலடியில் வைத்து ராகு, கேது பரிகார அர்ச்சனை செய்து பின்னர் வரனுக்கும் சங்கல்பம் செய்து வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

அதன்பின் பெருமாள் கையில் கட்டப்பட்டிருக்கும் கங்கணக் கயிறை வரனின் வலதுகையில் கட்டி, மாலையையும் சுற்றி விடுவார்கள். பின்னர் கோவிலை மூன்று முறை வலம் வந்து, மாலையை இல்லத்துக்கே எடுத்துச் செல்லலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராய் வந்து அதே மாலையை பெருமாளுக்கு சமர்பித்து விடலாம்.

?????? ???? ????? ????? ???????????????? || soon marriage nithya perumal temple worship
 
Status
Not open for further replies.
Back
Top