ஏராரும் எதிராசரென உதித்தான் வாழியே!
ஏராரும் எதிராசரென உதித்தான் வாழியே!
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த ஆர்த்தி பிரபந்தம் முழுவதும் எம்பெருமானாரின் பெருமையைக் கூறுபவை.
எம்பெருமானாரின் கருணையே நம்மை ரக்ஷிக்கும்.அவர் கிருபாமாத்ர ப்ரஸந்நாசாரியார்.
எம்பெருமானார் திருவடிகளில் பரமபக்தி தலையெடுத்து, " பரமாபதமாந்ந என்று சொல்லத்தக்க பரமார்த்தியை அடைந்து அருளிச் செய்த பாசுரங்கள் அடங்கியதால் " ஆர்த்தி பிரபந்தம்" என்று பெயர்.
இப்பிரபந்தத்தை தொடங்கும்போதே "வாழி எதிராசன் வாழி எதிராசன்" என்று எம்பெருமானாரை மங்களாசாசனம் செய்கிறார். அதுமட்டுமல்ல , எம்பெருமானாரை பல்லாண்டு பாடுவோரையும் வாழ்த்துகிறார்.
இதற்கு பிள்ளைலோகம் ஜீயர் அருளிய விளக்கத்தை பார்ப்போம்.
"ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:"
ராமன் வனவாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான். அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து, எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி, அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள்.
அதுபோல், இங்கு மணவாள மாமுனிகளுக்கு, எம்பெருமானார் தம்மை ஏற்றுக் கொள்ள எதிரில் வந்து நின்றது போல் ஒரு எண்ணம். அவரிடம் இந்த உலகினால் துன்பப்படும் தன்னுடைய ஆத்மா காட்டி, தான் விரும்பியதையெல்லாம் கூற நினைத்த மணவாள மாமுனிகள் அவருடைய அழகிலும், குணங்களிலும் மனதை பறிகொடுத்து அவரையும், அவருக்கும் எம்போதும் மங்களாசாசனம் செய்யும் இராமானுசனடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களையும் மங்களாசாசனம் செய்கிறார்.
" வாழிஎதிராசன் வாழிஎதிராசன்
வாழிஎதிராசன்யெனவாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழியெனவாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை"
- ஆர்த்தி பிரபந்தம்
ஏராரும் எதிராசரென உதித்தான் வாழியே!
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த ஆர்த்தி பிரபந்தம் முழுவதும் எம்பெருமானாரின் பெருமையைக் கூறுபவை.
எம்பெருமானாரின் கருணையே நம்மை ரக்ஷிக்கும்.அவர் கிருபாமாத்ர ப்ரஸந்நாசாரியார்.
எம்பெருமானார் திருவடிகளில் பரமபக்தி தலையெடுத்து, " பரமாபதமாந்ந என்று சொல்லத்தக்க பரமார்த்தியை அடைந்து அருளிச் செய்த பாசுரங்கள் அடங்கியதால் " ஆர்த்தி பிரபந்தம்" என்று பெயர்.
இப்பிரபந்தத்தை தொடங்கும்போதே "வாழி எதிராசன் வாழி எதிராசன்" என்று எம்பெருமானாரை மங்களாசாசனம் செய்கிறார். அதுமட்டுமல்ல , எம்பெருமானாரை பல்லாண்டு பாடுவோரையும் வாழ்த்துகிறார்.
இதற்கு பிள்ளைலோகம் ஜீயர் அருளிய விளக்கத்தை பார்ப்போம்.
"ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:"
ராமன் வனவாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான். அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து, எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி, அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள்.
அதுபோல், இங்கு மணவாள மாமுனிகளுக்கு, எம்பெருமானார் தம்மை ஏற்றுக் கொள்ள எதிரில் வந்து நின்றது போல் ஒரு எண்ணம். அவரிடம் இந்த உலகினால் துன்பப்படும் தன்னுடைய ஆத்மா காட்டி, தான் விரும்பியதையெல்லாம் கூற நினைத்த மணவாள மாமுனிகள் அவருடைய அழகிலும், குணங்களிலும் மனதை பறிகொடுத்து அவரையும், அவருக்கும் எம்போதும் மங்களாசாசனம் செய்யும் இராமானுசனடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களையும் மங்களாசாசனம் செய்கிறார்.
" வாழிஎதிராசன் வாழிஎதிராசன்
வாழிஎதிராசன்யெனவாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழியெனவாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை"
- ஆர்த்தி பிரபந்தம்