திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் 'உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்' என்று முடிக்கிறாள்.
இந்த பதங்களுக்கு எம்பெருமான் பற்றிய நினைவும் உணர்வும் தான் நாம் வாழ்ந்திடும் ஒரே வழி என்று மேம்போக்கான பொருள் இருந்தாலும், மஹான் அண்ணங்கராச்சாரிய ஸ்வாமிகள் வேறொரு கோணத்தில் இது பற்றி வியாக்கினிக்கிறார்.
திருக்கச்சி நம்பிகள், ராமாநுஜரிடத்தின் ஆறு சந்தேகங்களுக்கு, தேவராஜப் பெருமாளிடம் விடையறிந்து சொன்ன 'உய்யும் ஆறு' (எண்ணிக்கை) பற்றியதோ இது என்று ஆண்டாள் நினைவுறுத்துகிறாள்.
இதுவன்றி, கண்ணன் சம்பந்தப் பட்ட ஆறு வார்த்தைகளை அருளிச் செயல் பேசுகிறது. இவை ஆறு பற்றியும் அடியார்கள் சிந்திப்பது 'உய்யும் ஆறு' - வாழும் வழி என்று பேசப் படுகிறது,
1. வதுவை வார்த்தை (திருமணம் சம்பந்தப் பட்டது) - 'வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்' (3441).
கண்ணன் நப்பின்னை பிராட்டியை விவாஹம் கொள்ள கும்ப தேசத்திற்கு ஏகிய போதில், தன்னுடைய ஏழு முரட்டுக் காளைகளை எவனொருவன் முறித்து வதம் செய்வானோ அவனுக்கே தன் பெண்ணை மணம் முடிப்பேன் என்று கும்ப மன்னன் சொன்ன வார்த்தை.
2. வெண்ணை உண்ட வார்த்தை - 'நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல் கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க' (3442)
நெய்யை யார் திருடித் தின்றது என்று யசோதை உரைத்து, கோலினைக் கையில் எடுக்கவும், பொல பொல என்று கண்ணனின் கண்கள்நீர் சொரியக் காரணமான வார்த்தை.
3. வெண்ணை வார்த்தை - 'ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு
அழு' (3472)
யார் வெண்ணையைத் திருடியது என்று யசோதை கேட்கும் முன்னரேயே, ஆர்ப்பாட்டத்தோடு கண்ணன் அழ ஆரம்பித்து நானே அந்தக் கள்வன் என்று சொல்லாமல் சொன்ன வார்த்தை.
4. 'தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை' (3613)
உலகமே ஆச்சரியப் படும் வண்ணம், பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதியாய் சென்று கெளரவ சேனையை நாசம் செய்து நடந்தான் என்று எல்லோரும் கொண்டாடும் நல் வார்த்தை
5. 'செம்மையுடைய திருவரங்கர் தாம் படைத்த மெய்ம்மைப் பெரு வார்த்தை' - (616)
அரங்கன் சரணம் அடைந்த அடியார்களிடம் சொல்வானாம் ' எந்த பாபங்கள் உன்னை பாடு படுத்தியதோ அவற்றை நான் பாடு பட வைக்கிறேன்' என்று சர்ம ஸ்லோகத்தில் கீதையில் சொன்னதையே சொல்லிய பெரு வார்த்தை.
6. 'கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பது ஓர் வார்த்தையும்' (191)
கண்ணா உன் மேல் கோபம் கொண்டு கம்சன் கரிய நிற செம்மயிர் பூதனைப் பேயை உன்னை வஞ்சனையாகக் கொல்ல அனுப்பினான் என்ற வார்த்தையையும் உலகம் பேசும்.
இந்த பதங்களுக்கு எம்பெருமான் பற்றிய நினைவும் உணர்வும் தான் நாம் வாழ்ந்திடும் ஒரே வழி என்று மேம்போக்கான பொருள் இருந்தாலும், மஹான் அண்ணங்கராச்சாரிய ஸ்வாமிகள் வேறொரு கோணத்தில் இது பற்றி வியாக்கினிக்கிறார்.
திருக்கச்சி நம்பிகள், ராமாநுஜரிடத்தின் ஆறு சந்தேகங்களுக்கு, தேவராஜப் பெருமாளிடம் விடையறிந்து சொன்ன 'உய்யும் ஆறு' (எண்ணிக்கை) பற்றியதோ இது என்று ஆண்டாள் நினைவுறுத்துகிறாள்.
இதுவன்றி, கண்ணன் சம்பந்தப் பட்ட ஆறு வார்த்தைகளை அருளிச் செயல் பேசுகிறது. இவை ஆறு பற்றியும் அடியார்கள் சிந்திப்பது 'உய்யும் ஆறு' - வாழும் வழி என்று பேசப் படுகிறது,
1. வதுவை வார்த்தை (திருமணம் சம்பந்தப் பட்டது) - 'வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்' (3441).
கண்ணன் நப்பின்னை பிராட்டியை விவாஹம் கொள்ள கும்ப தேசத்திற்கு ஏகிய போதில், தன்னுடைய ஏழு முரட்டுக் காளைகளை எவனொருவன் முறித்து வதம் செய்வானோ அவனுக்கே தன் பெண்ணை மணம் முடிப்பேன் என்று கும்ப மன்னன் சொன்ன வார்த்தை.
2. வெண்ணை உண்ட வார்த்தை - 'நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல் கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க' (3442)
நெய்யை யார் திருடித் தின்றது என்று யசோதை உரைத்து, கோலினைக் கையில் எடுக்கவும், பொல பொல என்று கண்ணனின் கண்கள்நீர் சொரியக் காரணமான வார்த்தை.
3. வெண்ணை வார்த்தை - 'ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு
அழு' (3472)
யார் வெண்ணையைத் திருடியது என்று யசோதை கேட்கும் முன்னரேயே, ஆர்ப்பாட்டத்தோடு கண்ணன் அழ ஆரம்பித்து நானே அந்தக் கள்வன் என்று சொல்லாமல் சொன்ன வார்த்தை.
4. 'தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை' (3613)
உலகமே ஆச்சரியப் படும் வண்ணம், பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதியாய் சென்று கெளரவ சேனையை நாசம் செய்து நடந்தான் என்று எல்லோரும் கொண்டாடும் நல் வார்த்தை
5. 'செம்மையுடைய திருவரங்கர் தாம் படைத்த மெய்ம்மைப் பெரு வார்த்தை' - (616)
அரங்கன் சரணம் அடைந்த அடியார்களிடம் சொல்வானாம் ' எந்த பாபங்கள் உன்னை பாடு படுத்தியதோ அவற்றை நான் பாடு பட வைக்கிறேன்' என்று சர்ம ஸ்லோகத்தில் கீதையில் சொன்னதையே சொல்லிய பெரு வார்த்தை.
6. 'கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பது ஓர் வார்த்தையும்' (191)
கண்ணா உன் மேல் கோபம் கொண்டு கம்சன் கரிய நிற செம்மயிர் பூதனைப் பேயை உன்னை வஞ்சனையாகக் கொல்ல அனுப்பினான் என்ற வார்த்தையையும் உலகம் பேசும்.