ராமேஸ்வரம் ராமநாதர்கோவிலில் உப்பு லிங்கம்
இதை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
உப்புலிங்கம்
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
இராமேஸ்வர லிங்கம் உப்பினால் கட்டப்பட்டது என்பதன் மேலதிகச் செய்திகள் இதோ. உப்பு எனில் கடல் உப்பு அல்ல.
சித்தர் முறைப்படி, நவபாஷாணம் என்றழைப்பது போல அஷ்ட லவணம் என்றழைக்கப்படும் எட்டுவிதமான உப்புக்கள் (இவை மூலிகையில் இருந்து சாறு எடுத்து பின்னர் அவற்றை உப்புப் படிகங்களாக மாற்றப்பட்டவை. இப்படி அஷ்டலவண உப்புக்கட்டுக்களால் சமைக்கப்பெற்ற லிங்கம்தான் இராமேஸ்வர லிங்கம்) கொண்டு உருவாக்கப்பட்ட உப்புக்கட்டே இராமேஸ்வர லிங்கம் ஆகும்..
போகர் உருவாக்கிய அஷ்ட லவண உப்புக்கட்டினால் செய்யப்பட்டதே கொடைக்கானலில் பேரிஜம் அருகே உள்ள பூம்பாறை எனும் ஊரில் அமைந்திருக்கும் குழந்தை வேலவர் திருச்சிலை ஆகும். நவபாஷாணம் போலவே, அஷ்ட லவணங்களால் செய்யப்பட்ட சிலைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. சித்தமருத்துவத்தில் மிக உயரிய மருந்தாக விளங்கும், முப்பு எனப்படும் மருந்தும் அஷ்ட லவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
உப்புலிங்கம்
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
இராமேஸ்வர லிங்கம் உப்பினால் கட்டப்பட்டது என்பதன் மேலதிகச் செய்திகள் இதோ. உப்பு எனில் கடல் உப்பு அல்ல.
சித்தர் முறைப்படி, நவபாஷாணம் என்றழைப்பது போல அஷ்ட லவணம் என்றழைக்கப்படும் எட்டுவிதமான உப்புக்கள் (இவை மூலிகையில் இருந்து சாறு எடுத்து பின்னர் அவற்றை உப்புப் படிகங்களாக மாற்றப்பட்டவை. இப்படி அஷ்டலவண உப்புக்கட்டுக்களால் சமைக்கப்பெற்ற லிங்கம்தான் இராமேஸ்வர லிங்கம்) கொண்டு உருவாக்கப்பட்ட உப்புக்கட்டே இராமேஸ்வர லிங்கம் ஆகும்..
போகர் உருவாக்கிய அஷ்ட லவண உப்புக்கட்டினால் செய்யப்பட்டதே கொடைக்கானலில் பேரிஜம் அருகே உள்ள பூம்பாறை எனும் ஊரில் அமைந்திருக்கும் குழந்தை வேலவர் திருச்சிலை ஆகும். நவபாஷாணம் போலவே, அஷ்ட லவணங்களால் செய்யப்பட்ட சிலைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. சித்தமருத்துவத்தில் மிக உயரிய மருந்தாக விளங்கும், முப்பு எனப்படும் மருந்தும் அஷ்ட லவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.