ஒரு பொருள்,
இரண்டு வாங்கினால்,
மற்றொன்று இலவசம் என்றார்.
ஆனாலும் நான் வாங்கவில்லை;
காத்திருந்தேன்.
சில நாட்களுக்குப் பின்,
ஒன்று வாங்கினால்,
இன்னொன்று இலவசம் என்றார்.
அப்போதும் நான் வாங்கவில்லை;
காத்திருந்தேன்.
இன்னும் சில நாட்கள் கழிந்த பிறகு,
ஒன்று வாங்கினால்,
மேலும் இரண்டு இலவசமாகத்
தருவோம் என்றார்.
அப்போதும் நான் வாங்காமல்
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
எதற்காகத் தெரியுமா?
ஒன்று வாங்கினால்,
அந்த ஒன்றையே
இலவசமாகத் தரும் காலம்
வராமலா போய் விடும்?