இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி!
(I have already posted this article in English: London swaminathan)
இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி!
இந்தக் கதையை ஆனதாஸ்ரமம் ஸ்ரீ சுவாமி ராம்தாஸ் கூறினார். ‘சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இது உள்ளது.
“ இரண்டு சாமியார்கள் ஒரே நேரத்தில் ஒரு ஊருக்கு வந்தார்கள். ஒருவர் அரச மரத்துக்கு அடியில் உகார்ந்தார். பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. மற்றொருவர் ஆலமரத்துக்கு அடியில் உகார்ந்தார். அங்கும் கூட்டம் குவிந்தது. கடவுள் நம்பிக்கை உடைய ஒருவருக்கு சாமியார்களைப் பார்கத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை வரவே முதலில் அரச மர சாமியார் இடத்துக்குப் போனார்.
“சுவாமிஜி, இந்த ஏழை எளியேன் மீது உங்கள் அருள் பார்வை படவேண்டும” என்று இறைஞ்ச, அவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். அத்துடன் நிறுத்தி இருக்கக் கூடாதோ?
“சுவாமிஜி, உங்களுக்குத் தெரியுமா? ஊரின் மேற்குப் பக்கத்தில் ஆல மரத்துக்கு அடியில் ஒரு சாமியார் வந்து அமர்ந்து இருக்கிறார். அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. உங்களுக்கு அவரைத் தெரியுமோ?”
சுவாமிஜி பட்டெனப் பதில் கொடுத்தார். “அவனா? அவன் ஒரு எருமை!” என்று இளப்பத்துடன் சொன்னார்.
அந்த பக்தன் ஒரு வைக்கோல் கட்டை வாங்கிக் கொண்டு ஆலமர சாமியாரிடம் சென்றான். வைக்கல் கட்டுடன் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான்.
“பக்தா எழுந்திரு. உன் பக்தியை மெச்சினோம். இது என்ன வைக்கோல் கட்டு. வயலிலிருந்து நேரடியாக வந்தாயா?” என்றார். “இல்லை, சுவாமிஜி. நீங்கள் எருமை அல்லவா? நீங்கள் சாப்பிடவே கொண்டு வந்தேன்” என்றான் பக்தன்.
வந்ததே கோபம் சுவாமிஜிக்கு! மடையா, மூளை பிறண்டுவிட்டதா? என்று கத்தினார்.
“மன்னிக்கவேண்டும் சுவாமிஜி. உங்களைப் போலவே ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் உங்களைப் பற்றிக் கேட்ட போது நீங்கள் எருமைச் சாமியார் என்று சொன்னார். அன்போடு உங்களுக்காகக் கொண்டுவந்தேன்” என்றான்.
“ஓ, அவன் சொன்னானா? அவன் கழுதை அல்லவா!” என்றார்.
பக்தன் மெதுவாக பின்னோக்கி வந்தான். நேராகக் கடைக்குப் போய் இரண்டு கிலோ பருத்திக் கொட்டை வாங்கிக் கொண்டு அரச மர சாமியாரிடம் வந்து நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தான். “சுவாமிஜி ,உங்களுக்குப் பிடித்த பருத்திக் கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் உடனே சாப்பிட்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.
“மடையா, நான் என்ன குதிரையா, கழுதையா ,மாடா? இதை எல்லாம் தின்பதற்கு? எடுத்துக்கொண்டு ஓடு” என்றார்.
“சுவாமிஜி , சொன்னால் கோபிக்க மாட்டீர்களே. நீங்கள் சொன்ன எருமைச் சாமியாரிடம் போனேன். உங்கள் பெருமை பற்றிக் கேட்டபோது அவன் ஒர் கழுதை என்று உங்களைப் பற்றிச் சொன்னார். அதனால்தான் இப்படிச் செய்தேன்”.
பக்தன், இதைச் சொல்லி முடிப்பதற்குள்,, எழுந்தார் கழுதைச் சாமியார். “எங்கே அந்த எருமை? அவன் இருக்கும் இடத்தைக் காட்டு”, என்று புறப்பட்டார்.
பக்தன், பயபக்தியுடன் அவரைப் பின் தொடர்ந்து ஆல மரத்துக்கு அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் “ஏ, கழுதை, ஏ எருமை” என்று ஏசிய சப்தத்துடன் மின்னலும் இடிச் சப்தமும் தோன்றின.
பக்தன் என்ன முட்டாளா, பக்கத்தில் போக!! மரத்துக்குப் பின்னால் நின்று ரசித்தான்!! அவனுக்கோ ஒரே சிரிப்பு” !!

(I have already posted this article in English: London swaminathan)
இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி!
இந்தக் கதையை ஆனதாஸ்ரமம் ஸ்ரீ சுவாமி ராம்தாஸ் கூறினார். ‘சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இது உள்ளது.
“ இரண்டு சாமியார்கள் ஒரே நேரத்தில் ஒரு ஊருக்கு வந்தார்கள். ஒருவர் அரச மரத்துக்கு அடியில் உகார்ந்தார். பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. மற்றொருவர் ஆலமரத்துக்கு அடியில் உகார்ந்தார். அங்கும் கூட்டம் குவிந்தது. கடவுள் நம்பிக்கை உடைய ஒருவருக்கு சாமியார்களைப் பார்கத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை வரவே முதலில் அரச மர சாமியார் இடத்துக்குப் போனார்.
“சுவாமிஜி, இந்த ஏழை எளியேன் மீது உங்கள் அருள் பார்வை படவேண்டும” என்று இறைஞ்ச, அவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். அத்துடன் நிறுத்தி இருக்கக் கூடாதோ?
“சுவாமிஜி, உங்களுக்குத் தெரியுமா? ஊரின் மேற்குப் பக்கத்தில் ஆல மரத்துக்கு அடியில் ஒரு சாமியார் வந்து அமர்ந்து இருக்கிறார். அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. உங்களுக்கு அவரைத் தெரியுமோ?”
சுவாமிஜி பட்டெனப் பதில் கொடுத்தார். “அவனா? அவன் ஒரு எருமை!” என்று இளப்பத்துடன் சொன்னார்.
அந்த பக்தன் ஒரு வைக்கோல் கட்டை வாங்கிக் கொண்டு ஆலமர சாமியாரிடம் சென்றான். வைக்கல் கட்டுடன் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான்.
“பக்தா எழுந்திரு. உன் பக்தியை மெச்சினோம். இது என்ன வைக்கோல் கட்டு. வயலிலிருந்து நேரடியாக வந்தாயா?” என்றார். “இல்லை, சுவாமிஜி. நீங்கள் எருமை அல்லவா? நீங்கள் சாப்பிடவே கொண்டு வந்தேன்” என்றான் பக்தன்.
வந்ததே கோபம் சுவாமிஜிக்கு! மடையா, மூளை பிறண்டுவிட்டதா? என்று கத்தினார்.
“மன்னிக்கவேண்டும் சுவாமிஜி. உங்களைப் போலவே ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் உங்களைப் பற்றிக் கேட்ட போது நீங்கள் எருமைச் சாமியார் என்று சொன்னார். அன்போடு உங்களுக்காகக் கொண்டுவந்தேன்” என்றான்.
“ஓ, அவன் சொன்னானா? அவன் கழுதை அல்லவா!” என்றார்.
பக்தன் மெதுவாக பின்னோக்கி வந்தான். நேராகக் கடைக்குப் போய் இரண்டு கிலோ பருத்திக் கொட்டை வாங்கிக் கொண்டு அரச மர சாமியாரிடம் வந்து நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தான். “சுவாமிஜி ,உங்களுக்குப் பிடித்த பருத்திக் கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் உடனே சாப்பிட்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.
“மடையா, நான் என்ன குதிரையா, கழுதையா ,மாடா? இதை எல்லாம் தின்பதற்கு? எடுத்துக்கொண்டு ஓடு” என்றார்.
“சுவாமிஜி , சொன்னால் கோபிக்க மாட்டீர்களே. நீங்கள் சொன்ன எருமைச் சாமியாரிடம் போனேன். உங்கள் பெருமை பற்றிக் கேட்டபோது அவன் ஒர் கழுதை என்று உங்களைப் பற்றிச் சொன்னார். அதனால்தான் இப்படிச் செய்தேன்”.
பக்தன், இதைச் சொல்லி முடிப்பதற்குள்,, எழுந்தார் கழுதைச் சாமியார். “எங்கே அந்த எருமை? அவன் இருக்கும் இடத்தைக் காட்டு”, என்று புறப்பட்டார்.
பக்தன், பயபக்தியுடன் அவரைப் பின் தொடர்ந்து ஆல மரத்துக்கு அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் “ஏ, கழுதை, ஏ எருமை” என்று ஏசிய சப்தத்துடன் மின்னலும் இடிச் சப்தமும் தோன்றின.
பக்தன் என்ன முட்டாளா, பக்கத்தில் போக!! மரத்துக்குப் பின்னால் நின்று ரசித்தான்!! அவனுக்கோ ஒரே சிரிப்பு” !!