V
V.Balasubramani
Guest
இன்று உலக மக்கள்தொகை தினம்
இதில் முந்தப் போகிறோம் சீனாவை : இன்று உலக மக்கள்தொகை தினம்
உலகில் அதிகரிக்கும் மக்கள்தொகை தான், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை அறுவுறுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1987, ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதியை, மக்கள்தொகை தினமாக ஐ.நா., அறிவித்தது.
ராக்கெட் வேகத்தில்...:
உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2012ம் ஆண்டு கணக்கின் படி 700 கோடியை தொட்டது. இது மேலும் அதிகரித்து 2050ல் 950 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா :
இந்திய மக்கள்தொகை 1950ல், 38 கோடி. 2011 கணக்கின் படி, 121 கோடி. 2050ல், 162 கோடியாக அதிகரிக்கும். அப்போது இந்தியா தான் உலக மக்கள்தொகையில் முதலிடத்தை பெறும்.தற்போது 139 கோடி மக்கள்தொகையை கொண்டு, முதலிடத்தில் உள்ள சீன மக்கள்தொகை, அப்போது 138 கோடியாகத் தான் இருக்கும். அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ள சீனாவை, மக்கள்தொகையில் மட்டும் நாம் முந்துகிறோம் என்பது சோகமான சாதனை, இதைத் தடுக்க வேண்டுமெனில் மக்கள்தொகை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1293554
இதில் முந்தப் போகிறோம் சீனாவை : இன்று உலக மக்கள்தொகை தினம்
உலகில் அதிகரிக்கும் மக்கள்தொகை தான், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை அறுவுறுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1987, ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதியை, மக்கள்தொகை தினமாக ஐ.நா., அறிவித்தது.
ராக்கெட் வேகத்தில்...:
உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2012ம் ஆண்டு கணக்கின் படி 700 கோடியை தொட்டது. இது மேலும் அதிகரித்து 2050ல் 950 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா :
இந்திய மக்கள்தொகை 1950ல், 38 கோடி. 2011 கணக்கின் படி, 121 கோடி. 2050ல், 162 கோடியாக அதிகரிக்கும். அப்போது இந்தியா தான் உலக மக்கள்தொகையில் முதலிடத்தை பெறும்.தற்போது 139 கோடி மக்கள்தொகையை கொண்டு, முதலிடத்தில் உள்ள சீன மக்கள்தொகை, அப்போது 138 கோடியாகத் தான் இருக்கும். அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ள சீனாவை, மக்கள்தொகையில் மட்டும் நாம் முந்துகிறோம் என்பது சோகமான சாதனை, இதைத் தடுக்க வேண்டுமெனில் மக்கள்தொகை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1293554