ஆழவார் திருநகரி ஸ்ரீபக்ஷிராஜர் திருவடிகளே சரணம்.....!!!
இன்று ஆடி ஸ்வாதி பக்ஷிராஜர் திருநக்ஷத்திரம். மற்ற திவ்யதேசம் மதில்மேல் உள்ள பக்ஷிராஜர்கும் ஆழ்வார் திருநகரி மதில்மேல் உள்ள பக்ஷிராஜர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இவர் சுவாமி நம்மாழ்வாரால் மங்காளாசாசனம் பெறப்பபெற்றவர் திருவாய்மொழி 4ம் பத்து 10 ம் திருவாய் மொழியில் 7 வது பாட்டு ஓடி ஓடி பலபிறப்பும் பிறந்து இந்த பாடல் பக்ஷிராஜர் காக பாட்டு இதில் நம்மாழ்வார் பக்ஷிராஜரை ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தி என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரம் இவருக்கு திருநக்ஷத்திரம் இன்று 10 வது திருநாள் 10 தினமும் காலை திருமஞ்சனம் இரவு திருவாய்மொழி சேவாகலாம் நடைபெறும் 10 வது திருநாள் இன்று மாலையில் பெரிய திருமஞ்சனம் நடைபெறும் இது போல் திருமஞ்சனம் எங்கும் கிடையாது. பால் பஞ்சாரமிர்தம் தேன் இளநீர் தயிர் குளிர்ந்தவெள்ளம் என்று எல்லாம் வகையான திருமஞ்சனம் நடைபெறும் அனைத்து மக்களும் பால் குடம் எடுத்து வருவார்கள், இவர் இந்த ஊரின் காவல் தெய்வம் ஆக வழிபடுகிறார்கள். அந்த திருமஞ்சனம் முடிந்த பிறகு ஸ்தபண திருமஞ்சனம் நடைபெறும். அப்புறம் 10ம் பத்து திருவாய்மொழி சேவகலாம் நடைபெறும் பின் பக்ஷிராஜர்க்கு சாற்றுபடி (அலங்காரம் ) நடைபெறும் பின் திருவிருத்தம் சேவகாலம் நடைபெறும். இந்த மாதிரி திருமஞ்சனம் திருநாள் எங்கும் கிடையாது. இந்த 10 நாட்களும் மக்கள் பக்ஷிராஜர்க்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த பக்ஷிராஜர் க்கு முன் இரண்டு கம்பம் உண்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இவருக்கு தேங்காய்போத்தி என்று பெயர் உண்டு அந்த கம்பத்தின் கீழ் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
ஓடியோடிப்பல பிறப்பும் பிறந்து* மற்றோர்தெய்வம்*
பாடியாடிப் பணிந்து* பல்படிகால்* வழியேறிக்கண்டீர்*
கூடி வானவரேத்தனின்ற* திருக்குருகூரதனுள்*
ஆடுபுட்கொடியாதி மூர்த்திக்கு* அடிமை புகுவதுவே.
ஸ்ரீநம்மாழ்வார் ♦ திருவாய்மொழி 4.10.7
ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி, பலபல யோனிகளிலே பிறந்து
வம்ச பரம்பரையாக
தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பலபடியாக வழிபட்டு
பலன் கை புகுந்தமை கண்டீர்களே;
தேவர்கள் திரண்டு
துதிக்கும்படி நின்ற
ஆழ்வார் திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு அடிமை புகுவது கண்டீரோ!
தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதனால் என்னபலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரையில் தெரியாமையில்லை; இந்நாள் வரையிலே கைகண்ட பலன்தானே இனிமேலும் காணக்கடவதாயிருக்கும்; ஆனபின்பு கருளக்கொடியுடையானுக்கு அடிமை புகுவதுவே உறுவதென்கிறார்.
தேவதாந்தரபஜனத்தின் பலனை முன்னடிகளில் அருளிச்செய்கிறார். மற்றோர் தெய்வம் பாடியாடிப்பணிந்ததற்குப் பலன் ஓடியோடிப் பல பிறப்பும் பிறப்பதேயத்தனை என்றாராயிற்று.
ஸ்ரீப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச் சாந்யா தேவதா: ஸ்ம்ருதா:இ ப்ரதிபத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்*
(பிரமன் சிவன் முதலிய தேவதைகளைச் தொழுவதனால் அற்பபலனே கிடைக்குமாதலால் விவேகிகள் அத்தெய்வங்களைத் தொழுவதில்லை) என்கிற பிராமாணத்தை அடியொற்றி ஆழ்வார் அருளிச்செய்கிறபடியால் இங்கே ஒரு ஆக்ஷேபமும் இடம்பெறாது.
நீங்கள் தொழுகின்ற தெய்வங்களும் வந்து தொழுது தத்தம் வாய்படைத்த பலன் பெறுமாறு தோத்திரம் செய்யுமிடமான திருக்குருகூரிலே ஸேவைஸாதிக்கின்ற பறவையேறு பரம்புருடனுக்கு அடிமை செய்வதே ஸ்வரூப ப்ராப்த மென்றாராயிற்று.
இன்று ஆடி ஸ்வாதி பக்ஷிராஜர் திருநக்ஷத்திரம். மற்ற திவ்யதேசம் மதில்மேல் உள்ள பக்ஷிராஜர்கும் ஆழ்வார் திருநகரி மதில்மேல் உள்ள பக்ஷிராஜர்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இவர் சுவாமி நம்மாழ்வாரால் மங்காளாசாசனம் பெறப்பபெற்றவர் திருவாய்மொழி 4ம் பத்து 10 ம் திருவாய் மொழியில் 7 வது பாட்டு ஓடி ஓடி பலபிறப்பும் பிறந்து இந்த பாடல் பக்ஷிராஜர் காக பாட்டு இதில் நம்மாழ்வார் பக்ஷிராஜரை ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தி என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரம் இவருக்கு திருநக்ஷத்திரம் இன்று 10 வது திருநாள் 10 தினமும் காலை திருமஞ்சனம் இரவு திருவாய்மொழி சேவாகலாம் நடைபெறும் 10 வது திருநாள் இன்று மாலையில் பெரிய திருமஞ்சனம் நடைபெறும் இது போல் திருமஞ்சனம் எங்கும் கிடையாது. பால் பஞ்சாரமிர்தம் தேன் இளநீர் தயிர் குளிர்ந்தவெள்ளம் என்று எல்லாம் வகையான திருமஞ்சனம் நடைபெறும் அனைத்து மக்களும் பால் குடம் எடுத்து வருவார்கள், இவர் இந்த ஊரின் காவல் தெய்வம் ஆக வழிபடுகிறார்கள். அந்த திருமஞ்சனம் முடிந்த பிறகு ஸ்தபண திருமஞ்சனம் நடைபெறும். அப்புறம் 10ம் பத்து திருவாய்மொழி சேவகலாம் நடைபெறும் பின் பக்ஷிராஜர்க்கு சாற்றுபடி (அலங்காரம் ) நடைபெறும் பின் திருவிருத்தம் சேவகாலம் நடைபெறும். இந்த மாதிரி திருமஞ்சனம் திருநாள் எங்கும் கிடையாது. இந்த 10 நாட்களும் மக்கள் பக்ஷிராஜர்க்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த பக்ஷிராஜர் க்கு முன் இரண்டு கம்பம் உண்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இவருக்கு தேங்காய்போத்தி என்று பெயர் உண்டு அந்த கம்பத்தின் கீழ் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
ஓடியோடிப்பல பிறப்பும் பிறந்து* மற்றோர்தெய்வம்*
பாடியாடிப் பணிந்து* பல்படிகால்* வழியேறிக்கண்டீர்*
கூடி வானவரேத்தனின்ற* திருக்குருகூரதனுள்*
ஆடுபுட்கொடியாதி மூர்த்திக்கு* அடிமை புகுவதுவே.
ஸ்ரீநம்மாழ்வார் ♦ திருவாய்மொழி 4.10.7
ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி, பலபல யோனிகளிலே பிறந்து
வம்ச பரம்பரையாக
தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பலபடியாக வழிபட்டு
பலன் கை புகுந்தமை கண்டீர்களே;
தேவர்கள் திரண்டு
துதிக்கும்படி நின்ற
ஆழ்வார் திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு அடிமை புகுவது கண்டீரோ!
தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதனால் என்னபலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரையில் தெரியாமையில்லை; இந்நாள் வரையிலே கைகண்ட பலன்தானே இனிமேலும் காணக்கடவதாயிருக்கும்; ஆனபின்பு கருளக்கொடியுடையானுக்கு அடிமை புகுவதுவே உறுவதென்கிறார்.
தேவதாந்தரபஜனத்தின் பலனை முன்னடிகளில் அருளிச்செய்கிறார். மற்றோர் தெய்வம் பாடியாடிப்பணிந்ததற்குப் பலன் ஓடியோடிப் பல பிறப்பும் பிறப்பதேயத்தனை என்றாராயிற்று.
ஸ்ரீப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச் சாந்யா தேவதா: ஸ்ம்ருதா:இ ப்ரதிபத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்*
(பிரமன் சிவன் முதலிய தேவதைகளைச் தொழுவதனால் அற்பபலனே கிடைக்குமாதலால் விவேகிகள் அத்தெய்வங்களைத் தொழுவதில்லை) என்கிற பிராமாணத்தை அடியொற்றி ஆழ்வார் அருளிச்செய்கிறபடியால் இங்கே ஒரு ஆக்ஷேபமும் இடம்பெறாது.
நீங்கள் தொழுகின்ற தெய்வங்களும் வந்து தொழுது தத்தம் வாய்படைத்த பலன் பெறுமாறு தோத்திரம் செய்யுமிடமான திருக்குருகூரிலே ஸேவைஸாதிக்கின்ற பறவையேறு பரம்புருடனுக்கு அடிமை செய்வதே ஸ்வரூப ப்ராப்த மென்றாராயிற்று.