அன்புடையீர்,
என் பெயர் மகாதேவன். எஸ்.
நான் கோடம்பாக்கத்தில் 2, த்வாரகா அபார்ட்மெண்ட்,8 படேல் வீதியில் இருக்கிறேன். வடமொழி பிரதியை என்னிடம் கொடுத்தால் அதை வடமொழியில் டைப் செய்து PDF ஆக மாற்றி இங்கு போஸ்ட் செய்ய முடியும்.
இத்துடன் நான் ஆஞ்சநேயரின் சுந்தரகாண்டம் ஐந்து நிமிடத்தில் சொல்ல போஸ்ட் செய்து இருக்கிறேன். இதை ப்ரிண்ட் எடுத்து யார் வேண்டுமானாலும் தினசரி படிக்கலாம். PDF லும் என்னிடம் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் tejomay2004@gmail என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் இலவசமாக.
ஐந்து நிமிட சுந்தர காண்டம் இதோ:-
ஐந்து நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்கள்.
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்ரஹ தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமசந்திரமூர்த்தியையும், ராமபக்த்தனான அனுமனையும் மனதில் தியானித்து இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார் - இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்.
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான். அனைத்து வானரங்களும் அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான். அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான். கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும் சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மஸ்திரத்தால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் பெயர் சொல்ல வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான். அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்ஜநேயர் ‘கண்டேன் சீதையை’ என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக் கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சிறை மீட்க சித்தமானார். ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர். அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை பணிக்கின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
வெற்றி தரும் ஸ்லோகம்:- அனுமன் சீதாதேவியைக் கண்டுபிடிக்க அசோகவனதிற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தை கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை சதஸ்யை ஜனகாத்மஜாயை !
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி நேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய !
நன்றி
அன்புள்ள அய்யா அவர்களுக்கு
தாங்கள் எழுதியபடி உங்களுக்கு தமிழில் அல்லது வடமொழியில் வேண்டும் என்றல் ....சென்னையில் உள்ள கிரி புக்ஸ் கடையில் இருக்கிறது...
என்னிடத்தில் தமிழிலும் மற்றும் வடமொழியில் புத்தகம் உள்ளது..ஆனால் pdf வடிவில் இல்லை....mp3 அங்கு உள்ளது....எனினும் கூகுள்
சர்ச் செய்யவும்.....
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
tbs