• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

Status
Not open for further replies.
அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

Capture.PNGகந்த புராண சொற்பொழிவு
கம்பரசன்பேட்டை j சீதாராம ஶர்மா
இடம்: வரஸித்தி வினாயகர் ஆலயம், ரயில்வே காலனி, கிழக்குத் தாம்பரம்
நாள்: 22 அக்டோபர் 2017, ஞாயிறு

இது என்னோட மூனாவது சொற்பொழிவு. மொதல்ல கிழக்குத் தாம்பரம் ஏரிக்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் கோவில்ல, ரெண்டாவது இதே பிள்ளையார் கோவில்ல, ரெண்டுமே இந்த வருஷத்து நவராத்ரியின் போது, அம்பாளை பத்தி.

மூன்று பாகங்களாக கீழே கொடுத்திருக்கும் யூ ட்யூப் லிங்க்ல பதிவேற்றியிருக்கிறேன். ஆஸ்தீக, நாஸ்தீக நண்பர்கள், இருந்தா நல்லாயிருக்கும் இருக்கற எல்லா டீமும் கேக்கறா மாதிரி தான் முடிஞ்ச வரைக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன். முழுவதும் கேட்டு விட்டு, வழக்கம் போல குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். உபயோகமாக இருக்கும்னா இன்னும் கொஞ்சம் பேருக்குப் பகிருங்கள். ரெண்டு மணி நேரத்துல சொன்னதால கொஞ்சம் கதை, கொஞ்சம் செய்யுள், கொஞ்சம் தத்வம்னு வேகமா போயிருக்கேன். பொறுத்துக் கொள்ளவும். நீங்க குழந்தைகளுக்கு மெல்ல சொல்லிக் குடுங்கோ.

லிங்க் போட எனக்கு இன்னும் வயசாகல :) 10 போஸ்ட்க்கு மேல போட்டாதான் லிங்க் போட முடியும்னு மெஸேஜ் வருது. ஆரம்பத்துல குடுத்திருக்கற இமேஜ்ல லிங்க் இருக்கு. டைப் அடிச்சு பாருங்கோ, இல்லாட்டி எனக்கு மெயில் போடுங்கோ, கீழே கமெண்ட் போடுங்கோ, லிங்க் அனுப்பறேன்.


 
Status
Not open for further replies.
Back
Top