• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jagatguru Sri Maha Periyava Messages

Status
Not open for further replies.


பெரியவா சரணம் !!

“சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”"


நேத்திக்கு ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.

“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.

காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.

குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.

ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.

வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?

புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!

கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.

அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

From the book ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே
Source: Siva sankaran / BRahmana Sangam / Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா"


அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர்.

"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா. உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்", என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.
தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

"உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது" என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ ஏதும் தென்படவில்லை.

"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது" என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.
யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது, ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.

வந்தவர் அவரிடம் கேட்டார்.

"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே. அவர் எங்கே போயிருக்கார்?"

"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால்
வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.

"அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?" கேள்வி பிறந்தது அவருக்கு.
வந்தவரோ, 'இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.
வயதான பெரியவர் தொடர்ந்தார்.

"சிரமம், சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.

"அது எப்படி சாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"

வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார்.

"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க. உங்களோட பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.

இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.

அவர் வயதான பெரியவரைப் பார்த்து,

"பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு. என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான். நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..

எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும். காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது.

ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு. ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார்.

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.

"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி. வியப்போடு
அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல் மலைத்து நின்றார்.

அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாக பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.

"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை ஆசிர்வதித்தார் மகான்.

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.....

Source: Siva sankaran / Brahmins Association / Brahmana Sangam / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
பெரியவா சரணம் !!

" காதில் விழவில்லையா? என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி "

காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை. தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை.

திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம். மகானிடம் பெரும் பக்தி. அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் .

ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கையாக்கி விட்டது.

மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை, இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமாகிகொண்டு வர, ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும்.

பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு " இத்தனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்" என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா, உங்கள் காதில் விழவே இல்லையா, என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அங்கே சென்று கதவை திறந்தபோது " காஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம், மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்டே கொடுக்க சொன்னார்" என்றனர் வந்தவர்கள்.
காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்? கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தந்தையின் வாயில் ஊற்ற, அவரது மூச்சு திணறல் நின்றது. அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்.

மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார்? "காதில் விழவில்லையா? என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?

Source: Source: Siva sankaran / Brahmins Association / Brahmana Sangam / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Why antagonise the Kuladeivam (family deity)?

A couple had immense bhakti towards Maha Periyava. They would never start anything significant any day without doing puja to his statue. The wife was in the family way, and
was in the advanced stage. Not a day passed without them praying to the sage that the child should be born healthy even though their family deity was Lord Narasimhar!

When the pregnant woman was sleeping one night, Lord Narasimhar appeared in her dream and ordered the couple to name the child after him. The lady argued with the Lord that it was their custom to consult Kanchi Maha Periyava before they did anything. But then Lord Narasimhar was adamant.

The wife narrated the dream to her husband the next morning. They decided to name the child Narasimha and also have a word with the sage after the child was born. After all, they could not antagonise the family deity!

A handsome male child was born to them. When the initial rituals were over, they went to have darshan of the sage.

They had decided to tell him about the dream and seek his advice. When their turn for darshan came, they placed the child at the feet of the sage. Looking at the child, Periyava had a delightful smile on his face. He said to the child, "Generally people name a child only after the due rituals. But then this fellow is born with a name even when he was in the stomach. Isn't that so, Narasimha?" Even before the couple could think of expressing their predicament, the sage had already solved their problem! This is how he graces his devotees!

Source:
https://www.facebook.com/Jagadguru-Sri-Maha-Periyava-Kanc…/…
Source: Revanth Daripalli, Brahmana Sangam / Bahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம் !!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே""
காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் ஸாயங்காலம், பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வயஸான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின் மடிஸார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.

"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"

"பெரியவா ஆஶீர்வாதத்ல... எல்லாம் நன்னா நடந்துது....."

அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"

கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.

தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை ஸேகரிக்கும்.

நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும் ஸம்பந்தமேயில்லை என்பதுபோல், ஶம்-கரனின் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!

ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!

யாருக்கு?

"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "

அந்த வயஸான தம்பதிகளை அழைத்தார்.

"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"
ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்யஶாலி தம்பதி கைக்கு போனது.

"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."

அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.
அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!
பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.
மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரஸாதம் தந்து ஆஶீர்வதித்தார்.
சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."
ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விஜாரித்தார்.

"எங்களுக்கு ஸொந்த ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பொறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி தர்ஶனம் பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.

அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ அவஸர வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா தர்ஶனத்துக்கு கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான். வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.

வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."

அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.

பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !

நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வைப்பது மட்டுமே!

Source: Source: Siva sankaran / Brahmins Association / Brahmana Sangam / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: Missing child found


A lady alighted from the bus near Sri Matham with her ten year old daughter. Holding the child by her hand, she crossed the road. Many thoughts preoccupied her. "Hope the place is not crowded. Will I be able to receive Periyava's darshan in peace and so on? When she reached the entrance of the Matha, she suddenly realised that the child was missing. She was shocked. She looked everywhere but the child was not to be seen. She went in and told Periyava about it. Periyava closed his eyes and sat silently for a while, as if in meditation. "Go to the Kalikambal temple. Write "My child is missing. Find her and bring her back to me" on a chit and with an offering of one rupee, drop it into the hundi at the temple and then come back. The lady left in an agitation chanting, "Kali, Kali.' silently in her mind as she went. What a wonderful surprise! The little girl was standing at the entrance of the temple, sobbing. Some devotees were attempting to pacify the child. The lady clarified her identity and came back, bringing the child with her. Her heart melting in gratitude, she prostrated to Periyava. "Did you write the note and drop it in the hundi?" "Yes, I did. It was Periyava that I saw in the sanctum sanctorum. Here I am able to see only "Kali". Is Periyava Kali or Kamakshi? All forms of the Divine Mother are His!


Source: https://www.facebook.com/Jagadguru-Sri-Maha-Periyava-Kanc…/

Source: Revanth Daripalli, Brahmana Sangam / Bahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம் !!

"ஆருத்ரா தரிசனம்"
(ஆருத்ரா தரிசனத்தன்று பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம்.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-24 &
சி.வெங்கடேஸ்வரன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
(மார்கழி மாதம் வரும் 16-12-2016 ஆரம்பம்
அதையொட்டி இரண்டு பதிவுகள்).
மார்கழி மாதம்.ஆருத்ரா தரிசனம்.
ஸ்ரீ புதுப் பெரியவாள் பூஜை செய்வார்கள்.
"அடுத்த காலப் பூஜையாவது ஸ்ரீ பெரியவாள்
செய்வது சிலாக்கியம் என்று ஸ்ரீ மடம் மானேஜர்
பெரியவாளிடம் வந்து, " இன்று ஆருத்ரா.பெரியவாள்
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யணும்" என்று
பிரார்த்திப்பது போல் நினைவுபடுத்தினார்.
பெரியவாள்,; "இன்னிக்கு ஆருத்ரா தரிசனம்னு பெயர்.
இன்னிக்குப் பூஜை செய்வதை விட தரிசனம்
செய்வதுதான் உத்தமம். அதனாலே புதுப் பெரியவா
பூஜை செய்யட்டும். நான் தரிசனம் பண்ணிக்கிறேன்.."
என்றார்கள்.
பெரியவாள் வாக்கில் சரஸ்வதி தேவி நித்யவாஸம்
பண்ணிக் கொண்டிருந்தாள்.பட்டென்று சாதுர்யமான
பதில். 'பின் எப்படித்தான் வரும்?
.......................................................................................................................

"தை பிறந்தது மேளமும் கொட்டியது"
.
"நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,''

ஜனவரி 12,2016,.தினமலர்

காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.

அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், "என்ன விஷயம்?'' என்று பெரியவர் கேட்டார்.

"பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,'' என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், "உன் பெயர் என்ன?'' என்றார்.

"ராதா' என்றாள் அவள்.
பெரியவர் அவளிடம், "உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?'' என்றார்.

"ஆம்' என்றாள் அவள்.

"சரி...அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,'' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர்.

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.

"எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,'' என்றனர்.

திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.

திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.

ராதாவிடம், "உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"கண்ணன்'' என்ற ராதாவிடம், "உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?'' என்றார்.

"ஆம்...என்றாள் ராதா ஆச்சரியமாய்.

"மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?' என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், "நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,'' என்றார்.

இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!

சி.வெங்கடேஸ்வரன்
Source: Varagooran Narayanan / Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
பெரியவா சரணம் !!

I would like to share a message recd. Thro’ WhatsApp.

"மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்" கார்த்திகை தீபம் அன்று(13-12-2016 கார்த்திகை தீபம்)

(மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.)
(நன்றி : தினமலர்-டிசம்பர் 2014

காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.

திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.

மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.

அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார்.

பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.

அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.

கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.

எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம் !!

(“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்”)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
நன்றி-காஞ்சி பெரியவா ஃபாரம்

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?

“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.

ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.

மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:

“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”
அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:

“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.

“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”

“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.

இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.

“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.

தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.

“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”

“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.
மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு, “நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.
அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத்

“தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.
மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…

Source: Varagooran Narayanan / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம் !!

காஷ்ட மௌனம் .

“அமுதசுரபி புத்தகத்திலிருந்து ” – — ஸ்ரீ ஸ்ரீ ரா.கணபதி
1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாசபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர வந்த சாதுர்மாசத்தின்போதும் அது முடிந்த பிற்படும் கூட பல மாசங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும்பாகம் காஷ்ட மௌனம் . அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருபார். .

இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிசனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மியமாக ஒரு சங்கை. அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார் . பெரியவாளா னால் கண் கொட்டாமல் மூச்சு விடுகிறாரா என்று கூட தெரியாமல் சிலையாக இருக்கிறார்.

பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.

பர்மியரும் பொறுத்து பொறுத்து பார்த்தார்.
அந்நாள் ஸ்ரீ மட மேனேஜர் C.S. விஸ்வநாதையர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : ” என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருகிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ,கோடிஸ்வரனாய் இருக்கிறானே , வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே . இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று . எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன் . ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !”

தவித்து வேண்டிய சந்தேக நிவாரணத்தைப்பெறாமலே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியவிட்டாலும் , அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடதினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிசனம் செய்யச் சென்றார் – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .

பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .

பர்மியர் பரவசரானார் . அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார்! பன்முறை பணிந்தெழுந்தார் .

சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.

பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன .

பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறும்பூது!

மாதங்கள் கடந்து பெரியவாள் பெரியவா பேச்சுலகுக்குத் திரும்பினார்.

ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டும்மென்று அடம் பிடித்தனர் .

அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.

“அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !” என்றார்.

” சரி , பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி , பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாது என்னன்னு பெரியவா சொல்லலாமே !” என்றார் அவர்களில் ஓர் அதிஸ்வாதீன அடியார்.

“அதுவா?” என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார் . குறும்பு கொப்பளிக்க ” பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”

சங்கர மடத்தின் ஜகத்குருராக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.

Source: WhatsApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: The Sub-Judge of Kumbhakonam and His Holiness

The following is an English translation from the Tamil original of an article by `A friend'. The article appears in the souvenir published by the 450-year-old Raja Veda Kavya Patashala of Kumbhakonam.

He was a Sub-judge in Kumbhakonam (Tamilnadu) during 1961-63. I had not known him before or after he had assumed charge. One day, in the latter half of 1961, I was required to meet him. The message came through his clerk. I was a little surprised but when I went to meet him, he received me with courtesy and asked me to associate myself with the effort to reform some public charitable institutions initially set up to do dharmic word.

Having under his control 35 such institutions, he had occasion to observe that they were not functioning according to the original intentions of their founder/donors. As one who had no experience of running such institutions, I was reluctant to undertake the assignment offered by the Sub-Judge. When I showed my disinclination, the Sub-judge told me firmly but in an endearing tone: "Why do you reject a request to serve a good cause? People are generally inclined to go on talking endlessly about the deficiencies of public institutions. They stop with that. I did not know you before, and, yet, I called you here because God prompted me to do so. If you do not wish to have a share in this good work, you will be committing a sin." I was nonplussed.

Fortunately, the Paramacharya of Kanchi, Jagadguru Chandrasekharendra Saraswati, was then camping at Elayatthangudi. I put in a telephone call to the manager of the Math, Sri Viswanatha Iyer, and requested him to ascertain the wishes of His Holiness in the matter. He gave a reply call conveying the Paramacharya's approval to my undertaking the assignment. I informed the Sub-Judge about my willingness to take up the responsibility he had intended to give me. Promptly, and with joy, he made me a trustee of the Govindakudi Appakkutti Iyer Charities. (GAC)

Along with me two more trustees were appointed. The Sub-Judge made the three of us responsible for the running of the Veda Patashala under the auspices of the GAC. He assured us of his help and support in overcoming all obstacles. Thanks to all round co-operation, we succeeded in reviving the Vedic school and running it with a strength of 70 pupils.

One day the Sub-Judge took me to an Arabic College in a village near Mayavaram (now Mayiladuthurai). He took me to the classes where the students were taught the Koran with meaning. Turning to me, he said: "Like this, even the Vedas should be taught so that there would be sustained growth of Vedapatashalas." I remembered immediately that the Paramacharya had once asked me about a `Vedabhashya College'. I did not have adequate funds then but when the Paramacharya broached the subject, I told him without hesitation: "If that be His Holiness's wish, I will do everything possible to start such a college." His Holiness replied that He would ask me to do so at the appropriate time.

Now, that my visit to the Arabic College, I was determined to start one. I mentioned this to Paramacharya when I met Him the next time and requested Him to inaugurate it also if He had the time and convenience. The Paramacharya nodded His head in assent with a smile on his lips.
The initial obstacles to the starting of the Vedabhashya College having been overcome with the help of Sub-Judge, I reported progress to the Paramacharya. he remarked humorously: "Yes our own people will not listen to me. Even without my telling him, the Sub-judge has done his best."
A few months later, when the Paramacharya was camping at Kalyanapuram near Veppattur, the Sub-Judge expressed, rather hesitantly, a desire to meet Him. I told him that I would let him know His Holiness's convenience to meet Him in two days. When told His Holiness about the Sub-Judge's desire, the Paramacharya readily agreed to meet him. The Sub-Judge's joy knew no bounds when I told him that he could visit the Paramacharya.

The next day, late in the afternoon, both of us, the Sub-Judge and I called on His Holiness. It was raining heavily. The sub-Judge stayed back in the car and I went to meet the Paramacharya. The Acharya was in the midst of a discussion on some sastraic subject. The moment He saw me He gestured with His hand to mean, `Where is he?' When I said that he was in the car, the Acharya asked me to take the Sub-Judge to a premises nearby. I did so and within a short time, in pouring rain, wading through the slush, the Acharya reached the building. His Holiness enquired of the Sub-Judge about his family and honoured him with a shawl. The Sub-Judge replied to all the gentle queries and was on the verge of tears. I was a silent witness to their colloquy. "Be well, doing good things." He spoke not a word about the Veda Patashala or the Vedabhashya College. Returning to Kumbhakonam, the Sub-Judge, asked me to fix the date for the inauguration of the Vedabhashya College. It was finally opened by the Paramacharya on Dec. 12, 1963 at the Town High School, Kumbhakonam. About 5000 attended the function. Both the District judge and the Sub-Judge were present and also spoke on the occasion.

The Paramacharya spoke for about two hours. He also introduced the Sub-Judge to the gathering. When He had concluded his speech and the crowd had started dispersing, the Paramacharya raised His hand in a gesture of asking the people to sit down. He then narrated an incident.

When the Acharya's entourage which included the Math animals - the horse was carrying the drum - was passing in front of a mosque, there were objections from a group of Muslims. The horse was stopped but a conflict was somehow avoided. One of the members of the group at the mosque wanted to meet the Acharya the next day alone. The Acharya agreed though many objected to the Acharya meeting a stranger from what was considered to be a hostile community alone.

The Acharya brushed aside all objections and met the gentleman all alone. Did the visitor have any bad intention? No, all that he wanted was to read out to the Acharya the slokas in Sanskrit he had composed in praise of the Acharya! Asked how he learnt Sanskrit and what occupation he was engaged in the visitor replied that he had learnt Sanskrit from his father and other elders and that he was running a mutton shop! After narrating this episode, the Paramacharya said: "There are good people in every community," and made a brief reference to the good work of the Sub-Judge.
The Sub-Judge had several meetings with the Paramacharya after this function. When he was in some difficulty and I mentioned it to the Paramacharya, the Acharya just observed: "Both of you have God's grace." The Sub-Judge used to say: `Dharma will protect.'
Innumerable are the acts of benevolence of the Sub-Judge. He saw to it that the students of the

Veda Patashala and the Vedabhashya College were properly fed and taken care of.

This is a divinity that binds us, the Sub-Judge and I as well as the Math.

What is the name of the Sub-judge? Judge Kamaluddin!

Source:
kamakoti.org

Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
Link:
https://www.facebook.com/permalink.php?story_fbid=1177076889048856&id=668285496594667&substory_index=0

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


Experiences with Maha Periyava: The Light of Wisdom

Jagadguru Sri Maha Periyava is the God who took form and walked and lived among us in our times. He lived, spreading his inner light and poured on us the insatiable nectar of Ananda (happiness) for the welfare of this world.

Sri Maha Periyava's power of memory is incredible. It was His speciality to keep every little thing keenly in His mind and express it at the right time. We shall recollect one such incident here.
This sage was a cherisher of nature and solitude. He liked staying in places such as open sheds and choultries, shade of trees and roadside places during his yatra.

He was touring in the state of Andhra Pradesh once. He stayed in a shed by the roadside. A devotee came in a car to have a darshan of Sri Maha Periyava.

"My name is Kalyanam. I am appellate authority in the customs department. I belong to the Thanjai district. There are lots of problems in my family; there is no peace of mind. Only Periyava should solve them. This is the reason why I have come for darshan."

Periyava asked him to sit down and heard his family problems. Then, raising both His hands, blessed and sent him, giving him a fruit.

One or two years passed. Spring came up in the life of Kalyanam. His problems were solved and peace returned. He came back to thank the sage, who was in His yatra at that time too. The man had darshan of Periyava on the way, lowered the burden of his mind on the sage's feet and stood happily.

"Because of Periyava my family lives in peace. I want to submit some offering to the SriMatham." Periyava laughed and said, "You need not offer anything now" and sent him. Kalyanam returned half-heartedly.

Several years passed. Maha Kumbhabhisekam arrangements for Thillai Peruman were being made.

I was asked to come to SriMatham one morning. Thiru T.N.Krishnamoorthy, who was the SriKaryam of SriMatham at that time, and I went and stood before Maha Periyava. Sitting inside His palanquin, He was giving us orders on the tasks to be done at the time of Kumbhabhishekam, which included Tirumurai Music, Tirumurai Seminar, reciting Tiruvachakam completely, and the children of dikshitas reciting Shambhu Natana Stotra.

A man came. Periyava asked him to sit with us. The man who had come was Kalyanam, the arbitrator.

Maha Periyava asked him, "You met me on this day at this place (giving him the details), you remember it?" The man was astonished. When reminded of his second darshan, the man somewhat recollected the details and nodded his head.

"Are you fine now? You wanted to give money to the Matham! Can it be given now?"

"I shall give it now, definitely, no problem," said Kalyanam.

"That money is not needed for the Matham. It is Kumbhabhisekam time at Thillai for Nataraja. I have instructed these people about the tasks needed to be done there. You give your money for those tasks and get them done. Let that money go to Nataraja. You discuss with them and come back."

The three of us came out, discussed the details and went back to Him. Maha Periyava was also happy and bade us farewell with a smile.

To bring to memory in those few minutes, the details of a meeting that took place many years back, and fulfil at the right time a man's wish made long back, chanelling for service to Nataraja Peruman -- it only brings amazement to think about the loftiness of such an act of blessing, such divine welfare and divine feeling.

Author: P.M.Jayasenthilnathan, Kanchipuram (in Tamil)
Source: Maha Periyaval - Darisana Anubhavangal vol. 1
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Courtesy: https://www.facebook.com/permalink....582377120&id=668285496594667&substory_index=0
 



பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Magical (miraculous) Mahadeva!!

Once a female devotee along with her daughter came for Sri Maha Periyava’s darshan. They had turmeric, kumkum, coconut, betal leaves, flowers and along with that they also had the Thirumangalyam (mangala sutra or the holy, auspicious necklace to denote the married symbol) from which it was evident that the girl was getting married. They also had the bridal saree (koora pudavai) in that plate.

It is a known fact that Sri Periyava always advises everyone to avoid silk sarees as it involves hurting the living creatures (silk worms) and as it is also an unnecessary show-off. Even then, this female devotee, due to ignorance, got a red silk saree and kept it for Sri Periyava’s blessings.
Unknowingly, the devotee presented the plate containing these items to Sri Maha Periyava.
But, Sri Balu Mama did not accept it. He looked that plate with lot of mental anguish as they had kept a silk saree for Sri Periyava’s blessings. He immediately separated that saree from other things and kept only the remaining things for Sri Periyava’s blessings. Sri Periyava was staying inside the room. Outside, that female devotee started having a heated discussion with SriMatham Balu. She was disappointed when the bridal saree was not kept for Sri Periyava’s blessings.
Hearing this discussion, Sri Periyava came out for giving darshan to His devotees. When Sri Periyava sat down, as if agreeance to what Sri Balu said, “Yes, that saree needs to be kept separate.”

But, since everyone knows that Sri Periyava would never make any devotee feel bad, Sri Balu was astonished to hear those words from Sri Periyava.

Sri Periyava did not disappoint anyone. He ordered a stick to be brought. Using that stick, when Sri Periyava opened that saree, there was a big scorpion along with two small scorpions in that saree. When that female devotee saw it, she was so terrified. She started thinking how come a scorpion could be there in that saree, as she had just got it from a store. She also thought that only because of Sri Periyava’s grace, they were protected from those scorpions.

“That’s why I asked to keep it separate” told Sri Periyava and also ordered not to kill those scorpions. Then, Sri Periyava, with His kind words mentioned, “Do not have the bridal saree in this colour. Koora pudavai (bridal saree) should not be in maroon colour (araku). Return it in the same shop and get a different colour, may be yellow or some other auspicious colour. There is no need to tell the shopkeeper about this incident.” He blessed them graciously and sent them away.

We would be ignorant if we just think that Sri Periyava with His supernatural powers foresaw that the scorpions were there in that saree and protected them from that. To support Sri Balu’s act, which was what Sri Periyava always advised, He created a miracle there within minutes to let that devotee understand the advice.

It is clearly evident that with our true bhakti to Sri Periyava, we would get prosperity, wealth and good life by His grace!!

Grace will continue to flow.

Narrated by SriMatham Balu
Source: Sri Periyava Mahimai Newsletter – Feb 2008
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Link:
https://www.facebook.com/permalink.php?story_fbid=1178712368885308&id=668285496594667&substory_index=0
 



பெரியவா சரணம் !!

"என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே""
ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!
காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.

இந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்து, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.
‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’ என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).

இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.
இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி! இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்!’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.
காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.

உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……
‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

நன்றி : அறுசுவை அரசு நடராஜன் .

Source: Source: Siva sankaran / Brahmins Association / Brahmana Sangam / Face Book
https://www.facebook.com/groups/367386353459514/permalink/569204936610987/

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: “One who gracefully destroyed arrogance”

It is indeed Parameswara’s grace that we have amongst us Sri Sri Sri Maha Periyava with all the features of Sri Sukha Brahma Rishi.
Even though Sri Maha Periyava was at such great heights, He never exhibited those qualities and treated both the poor and wealthy, the same every time.

Out of the many experiences that SriMatham, Sri Balu has witnessed, this experience is one amongst them. There was a poor old lady who had utmost bhakti towards Sri Periyava. With the very little money she had, she was leading a very pious life. She considered that it was indeed a blessing for her to daily clean, light a lamp in the place of Sri Periyava, the Pratyaksha Parameswara and performed her religious duties with extreme purity. She did not have anything else other than two sarees.

Once a devotee of Sri Maha Periyava gave a lot of rice and jaggery. It was to be spent in a proper way, wasn’t it? The old lady was summoned by Sri Periyava.

“Take this rice and wherever you find ant-hills in Kanchipuram, put it there. In each ant-hill, put half aazhakku (cup) measure” ordered Sri Periyava.

Everyone was aware of the old lady’s sincerity. She went all around Kanchipuram and found many ant-hills and put the rice and jaggery into it. It may be easy to say but one should understand how difficult it is to find out so many ant-hills. When she finished this task successfully with Sri Periyava’s grace, Sri Periyava then showed her a big garland of wick and an oil tin and ordered, “Cut this wick in smaller ones; go to every temple; light as many lamps as possible that you can; it is enough if you go to two or three temples every day”.

Another order came like this from Sri Periyava. But the old day was happy to hear this. As per Sri Periyava’s orders, she meticulously went to a lot of temples every day and finished this noble deed in a few days. She became very happy once she conveyed the message to Sri Periyava.

As everyone knew that there would be a reason behind every act of Sri Periyava, wouldn’t there be a reason for ordering the old lady to do these activities!

One day a wealthy man came to SriMatham with a lot of pomp and show. Right from the time he arrived, there was a clear evidence of his arrogance and display of his wealth. With a lot of self-praise, he said “I have done Sahasra Bhojanam and come here. Also, I have lit a laksha (lakh) lamps”.

Sri Periyava knew about this wealthy man’s ego and arrogance. One should not even boast of any good deeds that he does and when one does it with so much ego, all the punya (merits) that accrue from that deed goes waste, isn’t it!

If he had told this to Sri Periyava with humility, it would be very heartening to see the way Karunamoorthy enjoyed that deed and appreciated it. Now, to that man, Sri Periyava started talking as if He was changing the topic.

“There is an old lady here. She has also done laksha bhojanams and also lit several laksha deepams” told Sri Periyava to that wealthy man.

That man started thinking that Sri Periyava without even listening to his words was talking about another old day who had done something similar to him. He also wondered if that old lady was wealthier than him. Also, his curiosity to learn about that old day increased.

Now that Sri Periyava had understood this man’s thoughts, ordered that old lady to come there. “She is the one who has done those noble deeds” Sri Periyava introduced that old day. She was wearing an old saree with a lot of holes in it. This wealthy man saw her with a lot of surprise and doubt. Sri Periyava slowly started talking,

“Bhagawan (God) is present in all living beings. Starting from Lord Brahma to an ant, Bhagawan resides everywhere. He is present in human beings too. You fed a thousand people. But, this old lady fed lakhs and lakhs of living creatures. You must have given the things to one temple for lighting one lakh lamps. It would not have been possible for you to manually light all those lamps by yourself. But, this old lady went to many temples and with a lot of bhakti and sincerity, she herself bought the lamps, poured oil, put the wick and lit the lamp by herself”.

When Sri Periyava finished saying this, the wealthy man stood there having realised his mistake. He understood that it was indeed a mistake to have spoken with so much ego to Sri Maha Periyava. As soon as he realised this, he moved away for other devotees to have darshan of Sri Periyava.

But Sri Maha Periyava who showers His love more than a mother called this man who had realised his mistake, made him sit close by, spoke with him and gave him prasadam. This man learnt a lesson on that day on how one has to be humble while doing noble deeds rather than showcasing his ego.

It is true that even if it is just one Bilva leaf, if it is offered to Sri Parameswara Periyava with bhakti, He accepts it with so much joy!

Source: Sri Periyava Mahimai Newsletter Jan 2008
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Link: https://www.facebook.com/permalink....444742267&id=668285496594667&substory_index=0

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: “Life Saver”

Only very few lucky devotees have realised the divine secret that Sri Sri Sri Maha Periyava, who has all the greatness as Sri Sukha Brahmarishi, is an incarnation of Sakshat Sarveshwara.

This incident was narrated by a Chennai devotee, Sri Venkataramani. His family was associated with Sri Kanchi Matham for three generations. His father Kamakshipuram Sri Vaidyanatha Iyer was an ardent of Sri Maha Periyava.

Sri Vaidyanatha Iyer used to do all the activities that Sri Maha Periyava instructed with utmost sincerity. Sri Periyava also was compassionate towards him. He never celebrated anything for himself. He did not even want to celebrate the Shashtiabdapoorthi or Bheemaratha Shanti that everyone celebrates in their 60th and 70th years. He did everything in his life as an offering to Eswara. Sri Ramani’s mother also did not like all these things.

But, Sri Vaidyanatha Iyer, when he was 84 years of age, desired to have Sathabhishekam function (function to celebrate the 80th birthday). When all his children urged him to perform this, he instructed them to seek Sri Sri Sri Maha Periyava’s blessings and if Sri Periyava blessed this, he would accede to their request.

Immediately, Sri Venkataramani, along with his mother and sister started for Sri Maha Periyava’s darshan when Sri Periyava was camping in a village near Kanchipuram. They had darshan of Sri Periyava in front of the house where Sri Periyava was staying. Sri Periyava was reading a book with a magnifying lens. They kept a plate in front of Sri Periyava with coconut, fruits, betal leaves and nuts in it and also informed Sri Periyava about their request.

Even though Sri Periyava asked, “Is Sathabhishekam for the elder one?” Sri Periyava did not give any prasadam to them as He usually does. Again, Sri Periyava continued reading the book.

Within few minutes, a couple came for Sri Periyava’s darshan and requested for His blessings for their daughter’s wedding. Sri Periyava immediately accepted the plate that they kept with the wedding invitation. They too left the place with full happiness.
When Sri Venkataramani saw this incident, he along with his mother and sister felt bad. They were worried that Sri Periyava did not bless them alone. Sri Periyava ordered everyone including them to go to Sri Pudhu Periyava and get the prasadam. So saying, Sri Periyava went inside the room for taking rest.

Sri Venkataramani’s mother was extremely worried why Sri Periyava did not bless them and give prasadam, as He usually does. Even though they got prasadam from Sri Pudhu Periyava, they decided not to leave without getting prasadam from Sri Maha Periyava.

As they kept standing there, Sri Periyava said, “Do Sathabhishekam for your father immediately”. But, even now, Sri Periyava did not give prasadam. They returned to Chennai without full satisfaction.

Next day, when their relative residing in Kanchipuram went for Sri Periyava’s darshan, Sri Periyava said, “Go tell them to do Sathabhishekam for your grandfather immediately.” Then, Sri Maha Periyava also gave prasadam to him.

When he came home, they did not know what to do. So, they asked him to go to Chennai with prasadam from Sri Periyava. Sri Vaidyanatha Iyer’s family was extremely happy when they received prasadams from Sri Maha Periyava and as Sri Periyava instructed them to do the function immediately, they celebrated this the next day itself.

Next day after the Sathabhishekam function, Sri Vaidyanatha Iyer passed away peacefully while talking happily with everyone.
Everyone now realised Sri Maha Periyava’s karunyam and the reason behind Sri Periyava instructing them to do the function immediately. As Sri Periyava knew about Sri Vaidyanatha Iyer’s end even before two days, they all realised that Sri Maha Periyava blessed Sri Vaidyanatha Iyer by granting him two more days of life as they wanted to do the Sathabhishekam.

Sri Periyava who knew the past, present and future, wanted His devotee’s wish to fruitify and hence blessed their family accordingly.

Source: Sri Sri Sri Maha Periyava Mahimai Newsletter – Mar 2008

Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb


LinK: https://www.facebook.com/668285496594667/photos/a.668845023205381.1073741828.668285496594667/1191371370952741/?type=3&theater

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

Experiences of Maha Periyava: “Kamakshi Kaapathinaala?”(Did Kamakshi save you?)

At the time of this incident the devotee was living in Calcutta along with her husband.

After her husband went to office, the front door bell rang and she opened the door. 3-4 Naxalites forced their way into the house. She could make out from the conversation amongst themselves that they intended to kill her.

As per their demand, she prepared tea for them. After that, she took their permission to make a phone call. She spoke to her kids who were studying in Chennai. She instructed them that in case there be any bad news about her on the next day, they should take it stoically.

Once done, she returned to the main hall and bowed down in front of the pictures of Sri Maha Periyava and the picture of Kali which was hung alongside. “Today is Ekadashi; I am having to face such a situation today!” She was very upset.

Turning to the Naxalites, she pleaded, “Please kill me with a single blow and for God’s sake do not do anything else to me”.

Then the miracle took place there. When the Naxalites happened to look towards the Maha Periyava photo that the lady had bowed down to, they could see an image of Bhavatharini in full fury. They were Kali devotees and they were stunned to see that where there was just one photo of Kali earlier, now there were two! Being Kali devotees, they began to see Kali in the lady they were planning to murder. “Please forgive us, mother”, they said to her and escaped from there!

Once her husband returned home, she told him everything tearfully and immediately started for Kanchipuram. As usual, there was a lot of crowd at the Kanchi Matham. She came in the line, stood in front of Periyava teary eyed and did a Namaskaram.

Periyava said, “So, Kamakshi saved you, eh?” making it abundantly clear that He knew everything!

True Guru Bhakthi always wins.

Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb


Source:
[url]https://www.facebook.com/668285496594667/photos/a.668845023205381.1073741828.668285496594667/1192766017479943/?type=3&theater[/URL]

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: It is Trimurti there; it is the same here too!

Though Sri Maha Periyava used to describe Himself as a samanya sanyasi (common ascetic), there are incidents wherein He displayed His svaya rupam (real self), on His own accord.

It was the time when Sri Maha Periyava was camping in Tiruvanaikkaval. I and my husband needed to have darshan of Him and return to Thanjavur. The next day was a Somavara amavasya (Monday on a new moon day). We had to do pradakshina of a peepal tree in Thanjavur.

Periyava conversed with everyone who came there and bid them farewell with prasadam. But, when we did our prarthana, He would remain as if He did not hear our words; when we went in the queue, He would stop giving prasadam with the person before us, and when our turn came, would get up and go inside. He was doing such things repeatedly.

We gave up the plans of our Thanjavur trip and stayed there for the night. I was very angry within.

After the viswa rupam on the next early morning, before He sat for His one-hour japam inside the mena, He directed the karvar (manager), "After three quarters of an hour, even while I am in the japam, make arrangements to carry the mena to the banks of the Kollidam", and shut the door of the palanquin.

Thinking, 'Can't do pradakshina of the Ashwatta (peepal tree). At least let me go around Periyava', I started doing pradakshina of the mena. After it was over, the mena started. We accompanied it and took our snana (bath) in the Kollidam.
As Sri Maha Periyava sat for His anushtanam, He called me and asked, "How many pradakshinas did you do?" I said, "Ninety."

There was no way Periyava could have known about my pradakshina! Then He asked me to complete the remaining count of pradakshinas.

After the pradakshina was over, He asked me, "Reciting what shloka did you do the pradakshina?"

Me: I did pradakshina, reciting 'Gurur Brahma Gurur Vishnu Gurur Devo Maheshwarah'.

Periyava: What would you recite during the Ashwatha pradakshina?

Me: 'Mulato Brahma Rupaya, Madhyato Vishnu Rupine, Agratah Siva Rupaya Vruksa Rajaya Te Namah'.*

Periyava: Then what? It is Trimurti there; it is the same here too!

With these words, He blessed me with the prasadam.

From then on, I took up the niyama (routine) to do pradakshina to Sri Maha Periyava only on the Somavara amavasya.
Author: Jayalakshmi Ammal, Pollachi

Source: Maha Periyaval - Darisana Anubhavangal vol. 4
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: https://www.facebook.com/Jagadguru-Sri-Maha-Periyava-Kanchi-Paramacharya-668285496594667/

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



பெரியவா சரணம் !!

ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது…

பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம்.

ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி ஓடினாள்.

பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா?

அவளை கூப்பிட்டார்.

தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது.
“அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன ஸுவாஸினி வந்திருக்கா பாரு! மங்களகரமா இருக்கோல்லியோ? இந்த வேளைல நீ மாத்ரம் கண்ணீரும் கம்பலையுமா நின்னா நன்னாருக்குமா? நெத்தில குங்குமம் வெச்சுக்கோ”
தாயினும் மேலான தயாபரனின் வார்த்தைகள் அவள் அழுகையை அதிகமாக்கியது.

“இல்ல பெரியவா, நா… குங்குமம் வெச்சுக்க கூடாது”

பெரியவா பதிலே சொல்லவில்லை.

“எங்காத்துக்காரர் military-ல வேலை பாத்தார். ஆறு மாஸம் முந்தி டெல்லிலேந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துது. அதுல…. அவர் சண்டைல செத்து போயிட்டதா எழுதியிருந்தது. நா…. நம்பலை பெரியவா! வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிண்டேன். டெல்லிக்கு ஃபோன் பண்ணினா, அவாளும், border-ல இருக்கறவாகிட்ட பேசி, அவர் செத்துப் போய்ட்டார்னு confirm பண்ணிட்டா! பேப்பர்ல கூட ரெண்டு மூணு தடவை ந்யூஸ் வந்துடுத்து. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..! கார்யம்-லாம் அப்போவே பண்ணிட்டோம். இன்னிக்கு நா… மடத்துக்கு வந்ததே, அவரோட அகால மரணத்துக்கு அவருக்கான கர்மாவை இனிமே எப்படி பண்றது-ன்னு கேக்கத்தான் வந்தேன். இந்த மாதிரி ஸுவாஸினி பூஜை நடக்கப்போறதுன்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன் பெரியவா….”
நாதியில்லாமல் இருந்தவள், இன்று ஆத்மநாதனிடம் கதறிவிட்டாள்.
பரப்ரஹ்மம் பேசாமல் இருந்தது.

“அவரோட ஆத்மா ஶாந்தி அடையணும். இதுதான் என் ப்ரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். பெரியவா… இப்போ போகச்சொன்னா போய்ட்டு, இன்னொருநாள் வரதுக்குகூட தயாராயிருக்கேன்”
பெரியவா பதிலேதும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்தார்.
ஸாக்ஷாத் காலஸம்ஹாரமூர்த்தியாக ஜ்வலித்தார். தன் முன்னால் இருந்த மரடப்பாக்குள் கையை விட்டு, கை நிறைய குங்குமத்தை அள்ளினார், அழகான புன்முறுவலுடன் அவளிடம் நீட்டினார்.
அவளோ முழித்தாள். அவளுடைய கை, குங்குமத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை!


” வாங்கிக்கோங்கோ ! பெரியவா தன் கையாலேயே குங்குமம் தரார்னா, ஒங்களோட பாக்யம்ன்னா! நீங்க ஸுமங்கலிதான்!
பக்கத்தில் இருந்தவர்கள் முடுக்கியதும், நடுங்கும் கைகளில் குங்குமத்தை வாங்கிக்கொண்டாள்.

“நெத்தில இட்டுக்கோ! ஓன்னோட மனக்லேஸம் அவஶ்யமில்லாதது. ஒம்புருஷன் உஸுரோட இருக்கான். ஸீக்ரமா ஒங்கிட்ட வரப்போறான்.”

“உயிரோடு இல்லை” என்று ஆறு மாஸமாக அரஸாங்கம் முதல், அத்தனை பேராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு விஷயம், ஒரே நொடியில், தெய்வத்தால், “பொய்” என்று தள்ளப்பட்டது.
அந்த பெண்ணோ, ஸந்தோஷத்தில், பெரிய பொட்டாக இட்டுக்கொள்ளவும், அங்கிருந்த பல ஸுவாஸினிகள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, திருமாங்கல்யம் என்று வாரி வழங்கினார்கள். க்ஷணத்தில், அந்த இடம் குதூகலமானது.
அன்று அவளும் ஒரு ஸுவாஸினியாக வரிக்கப்பட்டு பூஜையில் அமர்ந்தாள்.

ஒருவாரம் கழிந்தது.

பெரியவாளின் திருவாக்கு, பொய்யாகுமா?
இறந்ததாக கருதப்பட்டு, கருமாதியும் பண்ணப்பட்ட அவளுடைய புருஷன்….. மெலிந்து, சோர்ந்து ஒரு அதிகாலை வேளை வீட்டுக்குள் நுழைந்தான்..!

அவனைக் கண்டதும், அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல், ஆனந்தத்தில் ஏதேதோ உளறினாள்.

“எப்டி இருந்தேள்? எங்க இருந்தேள்?…. ஏன் ஒங்க head-quarters-ல கூட அப்டி சொன்னா?….”
“நீ கேள்விப்பட்டதெல்லாம் நெஜந்தான். கிட்டத்தட்ட ஸாவோட விளிம்புக்கே போய்ட்டேன்.! குண்டு பாய்ஞ்ச வலியில, மயக்கமாய்ட்டேன்..! சலனமே இல்லாம, ஸன்னமான மூச்சுகூட இல்லாம இருந்த என்னை, செத்த பொணம்-னு நெனச்சிண்டு எதிரிகள்…. எங்கியோ இழுத்துண்டு போய் அநாதரவா போட்டுட்டு போய்ட்டா…! யாரோ சில மலைவாஸிகள் என்னை எடுத்துண்டு போயி ஸொஸ்தமாக்கினா..! அவா புண்யத்ல, எனக்கு புனர்ஜன்மா கெடச்சுது. அங்கேர்ந்து எந்தவிதமாவும் யாரையும் contact பண்ணக்கூட முடியல….! நன்னா நடக்க முடிஞ்சதும், ஒடனே கெளம்பிட்டேன். ஒன்னோட ப்ரார்த்தனை வீண் போகல..!”

ப்ரார்த்தனையா! !

மலைவாஸியான பரமேஶ்வரனுடைய பரமக்ருபையன்றோ!
“பெரியவா…. தெய்வம்னா….! எனக்கு குங்குமத்தை அள்ளி குடுத்தாரே!…”
அழுது கொண்டே, ஶ்ரீமடத்தில் நடந்ததைச் சொன்னாள்.
அவ்வளவுதான்! இருவரும் விழுந்தடித்துக்கொண்டு காஞ்சியில் பீடத்தில் அமர்ந்து அன்பைச் சுரந்து கொண்டிருக்கும், பரப்ரஹ்மத்தின் திருவடிகளில் வந்து விழுந்தார்கள்.
“என்ன?….. ஆத்துக்காரர் வந்துட்டாரா?…ஒனக்கு இனிமே எந்த கொறையும் இருக்காது…”

திருவாய் மலர்ந்தது காலனை எட்டி உதைத்த காலடி தெய்வம்!

Compiled & penned by gowri Sukumar

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Source: Venkataramanan Duraiswamy / Face Book
 




பெரியவா சரணம் !!

"சிகை வெச்சிண்டு இருக்கறவா, யாரவுது இங்க இருந்தா.....அவா இந்த பாதரக்ஷையை வெச்சுக்கலாம்""
போளூர் சுப்ரமண்ய ஐயர், சத்யம் தவறாதவர், போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தவர், சிகை வைத்துக் கொண்டு த்ரிகால சந்த்யாவந்தனம் செய்பவர்.

பெரியவாளிடம் அபார பக்தி! உண்மையான பக்தனை பகவான் தேடிக்கொண்டு போவான்.

அதுபோல், பெரியவா கலசப்பாக்கத்தில் முகாம்! சுப்ரமண்ய ஐயர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தபோது, பெரியவா அங்கிருந்த ஈஸ்வரன் கோவிலுக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். எனவே ஐயரும் விடுவிடென்று பெரியவா போன வழியில் ஈஸ்வரன் கோவில் போனார். கொஞ்ச தொலைவில் பெரியவா போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அப்போது ஐயரின் பார்வையில் பெரியவாளின் திருவடியும், பாதரக்ஷையும் விழுந்தது.

"பெரியவாளோட பாதரக்ஷையை ஒரு தடவையாவது ஸ்பர்சிக்கற பாக்யம் கெடைச்சா...இந்த ஜன்மா மட்டுமில்லே, இனிமே ஜென்மாவே இல்லாமப் பண்ணிடுமே!..." என்று மனஸ் அடித்துக் கொண்டது. குருவின் பாதுகையின் மஹிமையை குருவால் கூட விளக்க முடியாதே! கடவுளுக்கும் மேலான ஒன்று நம்பிக்கை என்றால், குருவிற்கும் மேலானது குருபாதம், குருபாதுகை!
பெரியவா, கோவில் முன்னால் நின்று கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ஐயர் ஓடிப்போய் கூட்டத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார். பெரியவா பாதுகையை பத்ரமா யாராவது வெச்சுக்கணுமே என்று அவர் மனஸ் கவலைப்பட்டது.

"இரு, இரு, ஒனக்காகத்தானே இன்னிக்கி நான் கோவிலுக்கே
வந்திருக்கேன் " என்பது போல் பெரியவா.....

"நா.....கோவிலுக்குள்ள போயிட்டு வர்ற வரைக்கும்...என் பாதரக்ஷையை யாராவுது வெச்சுண்டு இருப்பாளா?.."
சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு அந்த பாக்யம் கிடைக்குமா என்று ஆவலோடு பார்த்தனர்.

"சிகை வெச்சிண்டு இருக்கறவா, யாரவுது இங்க இருந்தா.....அவா இந்த பாதரக்ஷையை வெச்சுக்கலாம்!"
அங்கிருந்தவர்களில் சுப்ரமண்ய ஐயர்தான் பாரிஷதர்களைத் தவிர சிகை வைத்திருந்தவர். பரதனுக்கு கிடைத்த பெரும் பேற்றை
ராமாயணத்தில் படித்திருப்போம்...இன்று அந்த நிலையில் ஐயர் இருந்தார்.

கண்கள் குளமாக, ஜகத்குருவின் பாதுகையை நடுங்கும் கைகளில் ஏந்தி, பன்முறை கண்களில் ஒற்றிக் கொண்டு, சிரஸில் வைத்துக் கொண்டு, பெரியவாளின் கருணையை எண்ணி எண்ணி உருகிப் போனார்.

பெரியவாளோடு அத்தனை பேரும் கோவிலுக்குள் சென்று விட்டனர். ஐயர் மட்டும் பாதுகையோடு கோவில் வாசலில் ஆனந்தமாக நின்று கொண்டிருந்தார். பக்தனுடைய ஆசை, பகவான் விஷயத்தில் "போதும்" என்று வராது, த்வைத பாவம் இருக்கும் வரையில்! ஐயர் மனம் "பாதுகையை வெச்சிண்டு இருக்கறது பரமானந்தம்தான்! ஆனாலும், பெரியவாளோட கோவிலுக்குள்ள போய் தர்சனம் பண்ண முடியலியே!.." என்று ஏங்கியது!

உள்ளே பெரியவாளுக்கு மரியாதை பண்ணிவிட்டு, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்ட தயார் பண்ணினார் அர்ச்சகர். அவரைக் கையமர்த்திவிட்டு பெரியவா தன்னுடைய பாரிஷதர் ஒருவரிடம் "வெளில பாதுகையை வெச்சிண்டு ஒர்த்தர் நின்னுண்டு
இருப்பார்....நீ போய் அதை வாங்கிண்டு, அவரை உள்ளே அனுப்பு!" என்று சொன்னார்.

பாரிஷதர் வந்து பாதுகையை வாங்கிக்கொண்டு ஐயரை உள்ளே அனுப்பினார்.

இதோ! அவருடைய இரண்டாவது ஆசையும் இங்கே அமோகமாக நிறைவேறியது! கர்ப்பக்ருஹத்துள் குத்துவிளக்குகள் ப்ரகாசமாக ஒளிவிட, பரமேஸ்வரன் லிங்க ரூபமாக நாகாபரணம்
சூடி, உச்சியில் வில்வ மாலை தரித்து, ஆவுடையாரைச் சுற்றிய மயில்கண் வேஷ்டியும், மேலிருந்து அருவி போல் விழும் அங்கவஸ்த்ரமுமாக காக்ஷி அளிக்க, பக்கத்தில் உத்சவ மூர்த்தியாக பெரியவா நிற்க, அந்த அர்ச்சகர் தீபாராதனை காட்டினார், இருவருக்கும்!

அதேபோல், அம்பாள் சன்னதியிலும் அதே அனுபவத்தைப் பெற்றார் சுப்ரமண்ய ஐயர்!


Source: Siva Sankaran / Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 



பெரியவா சரணம் !!

"சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் ""

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.
கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள் அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில் கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்! தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.
'எப்படி?' என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!
அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!
அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.
உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.
அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.
பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.
இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?
பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.
"இவரைப் பார்த்திருக்கிறாயோ?"
"இல்லை"
"இவர் அட்ரஸ் தெரியுமோ?"
"தெரியாது"
"எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?"
(என்ன குறும்பு!)
"சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்...!"
பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே...
"இவர் சிவப்பழம்...பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு..."
அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.
அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

Source: Siva Sankaran / Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

[FONT=&quot]பெரியவா சரணம் !![/FONT]
[FONT=&quot]நான் கொடுத்த ருத்ராட்சம் எங்கே?[/FONT]
[FONT=&quot]
என்னுடைய தாத்தா ஸ்ரீ சின்னதுரை என்கிற கிருஷ்ணசாமி அய்யர் (எசையனூர் கிராமம்) மடத்தில் பணி செய்து வந்தார். பெரியவாள் வெளியே செல்லும் போது குடை பிடிப்பார்; பூஜைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுப்பார்.
[/FONT]

[FONT=&quot]
எனக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தபோது, எசையனூரில் வியாஸ பூஜை நடத்தினார்கள். நான் என் அப்பாவுடன் மடத்துக்குப் போனேன். அப்போது, பெரியவா என்னைப் பார்த்துவிட்டு, ”எட்டு வயதில் இவனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது. நான் ஒரு ருத்ராட்சம் தருகிறேன். அதை இவன் கழுத்தில் கட்டு” என்றார்.


பெரியவா குடுத்த ருத்ராட்சத்தை, என்ன காரணத்தாலோ (என் போதாத வேளை) என் கழுத்தில் கட்டாமல், தினசரி பூஜையில் வைத்து விட்டார் என் தாத்தா.

இந்த விஷயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மறந்தே போய்விட்டது. ஆனால், விதி (பிரும்மா) மறக்கவில்லை. எட்டு வயதில், ஒரு மரத்தின் மேல் ஏறிக் கீழே விழுந்ததில், இடது காலில் கொஞ்சம் வீக்கம் ஏற்பட்டது. வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம் எல்லாம் பார்த்துவிட்டு, புத்தூர் வைத்தியத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். “அப்போதே வந்திருக்கணும், இப்போ ஒன்றும் செய்யமுடியாது. விந்தி விந்தித்தான் நடக்கணும்”.


என் தகப்பனார், துரைசாமி அய்யர், காஞ்சிபுரம் சென்று, பெரியவாளிடம் சொல்லி, துக்கம் தாங்க முடியாமல் அழுதார்.

“நான் கொடுத்த ருத்ராட்சம் எங்கே?”
“அவன் கழுத்தில் கட்டும்படி உத்தரவாயிற்று. ஆனால், என் அப்பா, மிகவும் பூஜைக்குரிய பொருளாக வைத்துவிட்டார்.”
“அவனைப் பற்றிக் கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

எனக்குக் கல்யாணமாகி, குழந்தை குட்டிகளுடன் சௌக்கியமாக இருப்பதற்குக் காரணம் பெரியவா தான். என் தாத்தா, பெரியவாளுக்குச் செய்த கைங்கரியம் தக்க சமயத்தில், தக்க பலனைத் தந்தது. தெய்வப் பணி என்றைக்கும் வீண் போவதில்லை என்பதற்கு நானே சாட்சி.

Source: Siva Sankaran / Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


[/FONT]
 
lovely sharing of experiences balasubramaniam ji... i respect Maha periyavaal a lot. I love to readabout his highness and the thoughts he shared.
 


பெரியவா சரணம் !!

"ஆண்டவா!....எங்கியோ கெடக்கோம்...! ஆனாலும், எங்களோட தெய்வம் எங்களை பாத்துண்டே இருக்கே ""
பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதி வந்தார்கள். நல்ல வஸதியானவர்கள்.
"கார்லயா வந்தேள்?....."
"ஆமா...... பெரியவா"
"ட்ரைவர் வெச்சிண்டு வந்தியா? நீயே ஒட்டிண்டு வந்தியா?...."
"நாந்தான் ஓட்டிண்டு வந்தேன் பெரியவா......"
"எந்த வழியா வந்தே?....."
"காவேரிப்பாக்கம் வழியா வந்தோம்...."
"நீ.....திரும்பி போறச்சே....நா.... சொல்ற வழில போ!...."
"ஸெரி..... பெரியவா..."
வழியை சொன்னார்.......
"அந்த வழில, அந்த க்ராமத்ல, ஒரு பெரிய ஶிவன் கோவில் வரும்... அந்த கோவில் வாஸல்ல, ஒரு வயஸான தாத்தாவும் பாட்டியும் ஒக்காந்துண்டிருப்பா!....நீ.... அவாளப் போயி பாரு! நா.... அனுப்பிச்சேன்னு சொல்லு! அதோட, முக்யமா.... அவா..... என்ன கேக்கறாளோ... அத... பண்ணிக் குடுப்பியா?...."
"காத்துண்டிருக்கோம் பெரியவா!......"
ப்ரஸாதம் குடுத்தனுப்பினார். அவர்களும் பெரியவா சொன்ன வழியில், அந்த க்ராமத்துக்கு சென்று ஶிவன் கோவிலையும் கண்டுபிடித்தார்கள்.
கோவில் வாஸலில் இருந்த ஒரு சின்ன பெட்டிக் கடையில், மிகவும் ஏழைகள் என்று பார்த்தாலே சொல்லக்கூடிய ஒரு வயஸான தம்பதி அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி வந்து நின்ற பெரிய காரிலிருந்து இறங்கிய தம்பதி, தங்களை நோக்கி வருவதைக் கண்டனர்.
"எங்களை.....பெரியவா அனுப்பினா......"
"என்னது? பெரியவாளா?......."
"பெரியவா!" என்ற தாரக நாமத்தை கேட்ட மாத்ரத்தில், வயஸால் சுருங்கிய கண்களிலிருந்து கண்ணீர் 'குபுக்' கென்று வெளியே ஓடிவந்தது......
"பெரியவா.... ஒங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணுமோ..... அத....என்னை பண்ணித் தர சொல்லிருக்கா...!
"ஆண்டவா!....எங்கியோ கெடக்கோம்...! ஆனாலும், எங்களோட தெய்வம் எங்களை பாத்துண்டே இருக்கே!..."
குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

"தயங்காம சொல்லுங்கோ.! ஒங்களுக்கு என்ன வேணும்?.... பணம்-னா கூட, தயங்காம சொல்லுங்கோ!..."
"பணத்தை வெச்சிண்டு நாங்க என்ன பண்ணப் போறோம்? எங்களுக்கு இனிமே என்ன வேணும்? ஸாகறதுக்குள்ள, காஶிக்கு மட்டும் ஒரேயொரு தடவை போகணும்! அங்க.... கங்கை-ல ஸ்நானம் பண்ணணும், கண்குளிர அந்த விஶாலாக்ஷியையும், விஶ்வநாதரையும், அன்னபூரணியையும் தர்ஶனம் பண்ணணும்...... அவ்ளோதான்! எங்களால அங்கல்லாம் இந்த வயஸு காலத்ல, சல்லிக்காஸு இல்லாம, எப்டி போக முடியும்-னு பெரியவாகிட்ட பொலம்பிண்டே இருந்தோம்! ப்ரத்யக்ஷ தெய்வம்! "
"ரொம்ப ஸந்தோஷம்! கவலையேபடாதீங்கோ! நீங்க ரெண்டு பேரும், ஸௌகர்யமா காஶிக்கு போறதுக்கும், அங்க... ஆசை தீர கங்கைல குளிக்கறதுக்கும், ஸ்வாமியை தர்ஶனம் பண்றதுக்கும், நா......ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு, ஒங்க ரெண்டு பேரோட ஆசையை நெறவேத்தி வெக்கறேன்..! பெரியவா அந்த பாக்யத்தை எனக்கு தந்ததுக்கு, பெரியவாளுக்கும், ஒங்களுக்கும் நமஸ்காரம் பண்ணிக்கறேன்....."

பணக்கார பக்தருக்கு, அவர்களுக்கான காஶி யாத்ரை ஏற்பாடு பண்ணுவது என்பது, ஒரு பெரிய கார்யமாக இல்லை. காஶியில் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டு, தம்பதிகளையும் தகுந்த துணையோடு அனுப்பி வைத்தார்.
மோக்ஷபுரியான காஶியில்........

ஸூர்யோதயம் ஆகும் ஸமயம், சுழித்துக் கொண்டு ஓடும் பவித்ர கங்கையில் அந்த ஏழை, முதிய தம்பதிகள், ஸங்கல்ப ஸ்நானம், பஞ்ச கங்கா ஶ்ராத்தம், தீர்த்த ஶ்ராத்தம், விஶாலாக்ஷி ஸமேத விஶ்வநாதர், அன்னபூரணி தர்ஶனம், எல்லாவற்றையும், மிகுந்த மனநிறைவோடு, பெரியவாளை ஒவ்வொரு க்ஷணமும் ஸ்மரித்துக் கொண்டே, செய்து முடித்தார்கள். ஸௌகர்யமான ஜாகை, போஜனம், வண்டி எல்லாமே அழகாக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது.
மறுநாள், கங்கையில் மூழ்கி ஸ்நானம் பண்ணும்போது, "கங்காதரனின் ஆக்ஞையால், என்னைத் தேடி வந்த உங்களை, இனி என்றென்றும் என்னுடைய மடியிலேயே தாங்கிக் கொள்வேன்" என்று சொல்லாமல் சொல்லி, அன்பாக அரவணைத்து, தன் மோக்ஷப்ரவாஹத்தில் கலந்து கொண்டுவிட்டாள் அன்னை கங்கா தேவி!
அவர்களுடைய ஶரீரம் கூட கிடைக்கவில்லை!

காஶியில் மரித்தால் மோக்ஷம்! பெரியவா இந்த ஏழைத் தம்பதிக்கு பண்ணிய ஸௌகர்யமான ஏற்பாடோ மோக்ஷ ஸாம்ராஜ்யம்! அதுவும்..... ஜோடியாக!
பெரியவா ஒவ்வொரு ஜீவனுக்கும் எங்கே, என்ன, எப்படி, முடிவு பண்ணியிருக்கிறார் என்பது அல்ப ஜீவன்களான நமக்கு என்ன தெரியும்?
பெரியவா ஸ்மரணை ஒன்றே நமக்கு காஶி, கங்கை, மோக்ஷ

Source: Siva Sankaran / Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!



 
Last edited by a moderator:



பெரியவா சரணம் !!

!!காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ !!

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தான் கே.வி.கே. சாஸ்திரியின் பூர்வீகம். அப்பா, தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக இருந்து, கஸ்டம்ஸ் உப்பளத்தில் சேர்ந்து, மரக்காணத்தில் பணியாற்றி ஓய்வுக்குப்பின் வளவனூரில் இருக்க நேரிட்டது. பெரியவாள் சொல்லிட்டா போதும் உடனே கேட்டு விடுவார். ஏன் என்ற மறு பேச்சே கிடையாது. ஒரு சமயம் பெரியவா, “ஏய், கிருஷ்ணஸ்வாமி, நான் ஒண்ணு சொல்றேன், நீ கேட்பாயா?” என்று புதிர்போல் கேட்டார்.

“உத்தரவு இடுங்கள்” என்று பணிவோடு நின்றார் கே.வி.கே.

“நீ கிருஷ்ணாபுரம் போய், கோவிலுக்கு அருகே உள்ள ஏழாம் நம்பர் வீட்டிலே போய் ஒரு அம்பது ரூபாய் கொடுத்துட்டு வா. அவர் வாங்க மாட்டேன்னு சொல்லுவா. உன் அப்பா அவர் அப்பாகிட்ட கடன் வாங்கினது. திருப்பிக்கொடுக்கவேயில்லை. அதை நீ கொண்டு கொடுத்து அப்பா கடனை தீர்த்துடு. அப்போதான் நிம்மதியா தூக்கம் வரும்னு” சொன்னார். கே.வி.கே க்கு இரவிலே தூக்கம் வராது – விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பார், காலையிலே தூங்கி விடுவார். இது எப்படி பெரியவாளுக்கு தெரியும் என்பதுதான் ஒரே கேள்விக்குறி.

சொன்னபடியே கே.வி.கே கிருஷ்ணாபுரம் சென்று பணத்தைக் கொடுக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்களோ, பணத்தை வாங்கவே மறுத்தனர். ‘எங்கப்பா டைரி எழுதற பழக்கம் உண்டு, அதிலே இப்படி கடன் கொடுத்தா இல்லை” என்று கூற, கடைசியில் எப்படியோ பெரியவா சொன்னான்னு சொல்ல அவர்களும் அதை வாங்கிக் கொண்டனர்.

வளவனூர் திரும்பி வந்து பெரியவாளிடம் நடந்த விபரத்தை கூறினார். பெரியவா சொன்னா தலைமுறை கடந்து வந்ததாலே இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. “எனக்கு மனதிலே பட்டுது சொன்னேன்” என்று கூறினார்.

கே.வி.கே க்கும் டைரி எழுதற பழக்கம் உண்டு. அவருடைய டைரியில் அப்பா கடன் திரு. சீதாராமய்யருக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பவோ எழுதியது ஞாபகம் வந்தது. அப்போதான் அந்த சீதாராமய்யர் குடும்பம் கிருஷ்ணாபுரமத்தில் இருக்கு என்ற விபரம் தெரிய வந்தது.
காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ? கே.வி.கே ஆண்டு முதல் நல்ல தேக ஆரோக்யத்துடன் தூங்கினார்.

Source: Siva Sankaran / Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top