அடுத்த வாரம் வியாழக்கிழமை மறக்காமல் ராஜேந்திரனுக்கு போன் பண்ணி..குபேரனுக்கு சொல்லியாச்சான்னு விசாரித்து கன்போம் பண்ணிக்கொண்டேன்....அதற்க்கு அடுத்த வாரம் புதன் கிழமைக்காக நானும் மனைவியும் காத்திருந்தோம்...வீட்டில் நிற்பாய வந்தவுடன் என்ன ஸ்வீட் செய்வதுன்னு ப்ளான் வேறு...
புதன் கிழமையும் வந்தது....ஆபிசுக்கு அரை நாள் லீவ் போட்டுவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாமில்...காலை பத்துமணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரசுக்காக காத்திருந்தேன்...தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதம்ன்னு மைக்கில் சொன்னார்கள்....எக்ஸ்பிரஸ் எப்போ வரும் என்கிற சஸ்பென்சவிட..நிற்பாய வருமாங்கிற சஸ்பென்ஸ்தான் அதிகமா இருந்தது...டிரைன் வந்தவுடன்...பான்ட்ரி காரையும் ..குபேரனையும் தேடி பிடிச்சு...ராஜேந்திரன் அனுப்பினார்னு சொல்ல.....ஆமாம் சார்...சொல்லியிருந்தாரு....ஆனா ஒரு ட்ரிப்ல ரெண்டு ஸ்டவ்தான் என்னால கொண்டுவரமுடியும்....அதுக்குமேல கொண்டுவந்தா டிடிர் தகறாரு பண்ணுவாரு....நான் ஏற்கனவே ரெண்டு பேருக்கு கொண்டுவந்து தரேன்னு பிராமிஸ் பண்ணிட்டேன்...உங்களுக்கு அடுத்த ட்ரிப்பில் கண்டிப்பா கொண்டுவந்து தரேன் சார்..என்றார்..
சற்று ஏமாற்றம்தான்... ஆபிசுக்கு வந்து ராஜேந்திரனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்....பரவாயில்லை..அடுத்த வாரம் கொண்டுவந்து விடுவார்னு சமாதானம் சொன்னார்.. மனைவிதான் பாவம் ..ரொம்ப எதிர்பார்த்திருந்தாள்...அடுத்த புதன்கிழமை ‘விடாகொண்டனாய்’ சென்ட்ரல் பிளட்பாமில் தவம் இருந்தேன்.. இந்தமுறை அதிகம் எதிர்பார்ப்பு வைக்கவில்லை..வந்தால் வரட்டும்கிர மனநிலையில் இருந்தேன்..ஆனால்..உண்மையிலேயே நிர்பயா வந்துவிட்டது…குபேரன் சொன்னபடி ஸ்டவ் வாங்கி வந்திருந்தார்...அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு..வெற்றிகரமாக ‘நிர்பயாவுடன் கிளம்பினேன்...
.திடிரென்று ஒரு அல்ப ஆசை.. இவ்வளவு அலைஞ்சு இந்த ஸ்டவ்வை..வாங்கியிருக்கிறோம்....நேராக வீட்டுக்கு போய் புது ஸ்டவ்வில்..மனைவி கையால் காபி குடிக்கவேண்டும் என்று...... ஆபிசுக்கு போன் பண்ணி அரை நாள் லீவை..ஒருநாள் ஆக்கிவிட்டு..பஸ்ஸை பிடித்து..நேராக வீடு போய்ச் சேர்ந்தேன்...
மனைவிக்கு அந்த நேரத்தில் என்னை பார்த்ததில் ஒரே ஆச்சர்யம்... அதுவும்..’நிர்பயாவும்’ கையுமாக....அவளுக்கு கையும் ஓடலே காலும் ஓடலே......என் வீட்டுக்காரர் நினைத்தால் சாதிச்சுடுவார்னு ‘ஐஸ்’ வேறே... அது சரி இந்த நிர்பயாவுக்கு..நான் அலைஞ்ச அலை எனக்ககுத்தானே தெரியும்.. ஸ்டவ் டப்பாவில் இருந்த இன்ஸ்டிரக்க்ஷனை படித்து பார்த்து..அதன் படி..த்ரி, பர்னர் எல்லாம் செட் பண்ணி....அடுப்பை பத்தவைத்து....ப்ளு...ப்ளேம்...அழகாகத்தான் இருந்தது...சூடும் அதிகமாக இருந்தது...மனைவி காபி போட்டு கொடுத்தாள்...
ரஜனி படத்தை முதல் நாள்,...முதல் ஷோ...முதல் டிக்கட்டில் பார்த்த ‘குஷி’ இருந்தது...
[ அடுத்ததில் முடியும் ]
புதன் கிழமையும் வந்தது....ஆபிசுக்கு அரை நாள் லீவ் போட்டுவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாமில்...காலை பத்துமணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரசுக்காக காத்திருந்தேன்...தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதம்ன்னு மைக்கில் சொன்னார்கள்....எக்ஸ்பிரஸ் எப்போ வரும் என்கிற சஸ்பென்சவிட..நிற்பாய வருமாங்கிற சஸ்பென்ஸ்தான் அதிகமா இருந்தது...டிரைன் வந்தவுடன்...பான்ட்ரி காரையும் ..குபேரனையும் தேடி பிடிச்சு...ராஜேந்திரன் அனுப்பினார்னு சொல்ல.....ஆமாம் சார்...சொல்லியிருந்தாரு....ஆனா ஒரு ட்ரிப்ல ரெண்டு ஸ்டவ்தான் என்னால கொண்டுவரமுடியும்....அதுக்குமேல கொண்டுவந்தா டிடிர் தகறாரு பண்ணுவாரு....நான் ஏற்கனவே ரெண்டு பேருக்கு கொண்டுவந்து தரேன்னு பிராமிஸ் பண்ணிட்டேன்...உங்களுக்கு அடுத்த ட்ரிப்பில் கண்டிப்பா கொண்டுவந்து தரேன் சார்..என்றார்..
சற்று ஏமாற்றம்தான்... ஆபிசுக்கு வந்து ராஜேந்திரனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்....பரவாயில்லை..அடுத்த வாரம் கொண்டுவந்து விடுவார்னு சமாதானம் சொன்னார்.. மனைவிதான் பாவம் ..ரொம்ப எதிர்பார்த்திருந்தாள்...அடுத்த புதன்கிழமை ‘விடாகொண்டனாய்’ சென்ட்ரல் பிளட்பாமில் தவம் இருந்தேன்.. இந்தமுறை அதிகம் எதிர்பார்ப்பு வைக்கவில்லை..வந்தால் வரட்டும்கிர மனநிலையில் இருந்தேன்..ஆனால்..உண்மையிலேயே நிர்பயா வந்துவிட்டது…குபேரன் சொன்னபடி ஸ்டவ் வாங்கி வந்திருந்தார்...அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு..வெற்றிகரமாக ‘நிர்பயாவுடன் கிளம்பினேன்...
.திடிரென்று ஒரு அல்ப ஆசை.. இவ்வளவு அலைஞ்சு இந்த ஸ்டவ்வை..வாங்கியிருக்கிறோம்....நேராக வீட்டுக்கு போய் புது ஸ்டவ்வில்..மனைவி கையால் காபி குடிக்கவேண்டும் என்று...... ஆபிசுக்கு போன் பண்ணி அரை நாள் லீவை..ஒருநாள் ஆக்கிவிட்டு..பஸ்ஸை பிடித்து..நேராக வீடு போய்ச் சேர்ந்தேன்...
மனைவிக்கு அந்த நேரத்தில் என்னை பார்த்ததில் ஒரே ஆச்சர்யம்... அதுவும்..’நிர்பயாவும்’ கையுமாக....அவளுக்கு கையும் ஓடலே காலும் ஓடலே......என் வீட்டுக்காரர் நினைத்தால் சாதிச்சுடுவார்னு ‘ஐஸ்’ வேறே... அது சரி இந்த நிர்பயாவுக்கு..நான் அலைஞ்ச அலை எனக்ககுத்தானே தெரியும்.. ஸ்டவ் டப்பாவில் இருந்த இன்ஸ்டிரக்க்ஷனை படித்து பார்த்து..அதன் படி..த்ரி, பர்னர் எல்லாம் செட் பண்ணி....அடுப்பை பத்தவைத்து....ப்ளு...ப்ளேம்...அழகாகத்தான் இருந்தது...சூடும் அதிகமாக இருந்தது...மனைவி காபி போட்டு கொடுத்தாள்...
ரஜனி படத்தை முதல் நாள்,...முதல் ஷோ...முதல் டிக்கட்டில் பார்த்த ‘குஷி’ இருந்தது...
[ அடுத்ததில் முடியும் ]