• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆதித்ய ஹ்ருதயம்.

Status
Not open for further replies.
பலச்'ருதி.
ஏனமாபத்ஸு க்ருச்2ரேஷு
காந்தாரேஷு ப4யேஷு ச |
கீர்தயன் புருஷ: கச்'சின்
நாவ ஸீத3தி ராக4வா || (25)

ராகவா! எவராகிலும் ஆபத்துக் காலங்களிலும், கஷ்டங்களிலும், வன வனாந்திரங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களில் இதை
ஓது
வாராகில் அவர் தளர்ச்சி அடைய மாட்டார் .
 
பூஜயஸ்வைன மேகாக்3ரோ
தே3வ தே3வம் ஜக3த்பதிம் |
ஏதத் த்ரிகு3ணிதம் ஜப்த்வா
யுத்3தே4ஷு விஜயிஷ்யஸி || (26)


ஒருமைப் பட்ட மனத்துடன் தேவ தேவரும், உலக நாதரும் ஆன இவரைப் பூஜிப்பாய்!
இதை மூன்று முறை ஜெபித்து போரில் வெற்றி பெறுவாய்!
 
அஸ்மின் க்ஷணே மஹா பா3ஹோ
ராவணம் த்வம் வதி4ஷ்யஸி |
ஏவமுக்த்வா ததா3க3ஸ்த்யோ
ஜகா3ம ச யதா2க3தம் || (27)

"பெரும் தோள்கள் படைத்தவனே ! இந்தக் கணத்தில் நீ ராவணனை
வதைப்பாய் !" என்று கூறிவிட்டு, அகஸ்தியர் வந்த வழியே திரும்பிச்சென்றார்.
 
ஏதத் ச்2ருத்வா மஹா தேஜா
நஷ்ட சோ'கோsப4வத் ததா3 |
தா4ரயாமாஸ ஸுப்ரீதோ
ராக4வா ப்ரயதாத்மவான் || (28)

மஹா தேஜஸ்வியான ஸ்ரீ ராமர் இதைக் கேட்டு கவலை நீங்கியவர் ஆனார்.
மிகுந்த பிரியத்துடனும், தன்னடக்கத்துடனும் அதை மனத்தில் தாரணை செய்து கொண்டார்.
 
ஆதி3த்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து
பரம் ஹர்ஷம் அவாப்தவான் |
த்ரிராசம்ய சு'சிர் பூ4த்வா
த4னுராதா4ய வீர்யவான் || (29)

வீர்யவான் ஆகிய ஸ்ரீ ராமபிரான் மும்முறை ஆசமனம் செய்து பரிசுத்தர்
ஆகி;; வில்லை ஏந்திக் கொண்டு ; சூரியனை நோக்கி ஜபம் செய்து பரமானந்தத்தை அடைந்தார்.
 
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா
யுத்3தா4ய ஸமுபாக3மத் |
ஸர்வ யத்நேன மஹதா
வதே4தஸ்ய த்4ருதோப4வத் || (30)

உள்ளக் களிப்புடன் ராவணனை நோக்கி போர் செய்ய நெருங்கினார்.
எல்லா முயற்சிகளையும் செய்து அவனை வதம் செய்வதில் உறுதி கொண்டவர் ஆனார்.
 
அத2 ரவி ரவத3ன் நிரீக்ஷ்ய ராமம்
முதி3த மனா :பரமம் ப்ரஹ்ருஷ்யமாண :|
நிசி' சரபதி ஸம்க்ஷயம் விதி3த்வா
ஸுரக3ண மத்4யக3தோ வசஸ்த்வரேதி || (31)

அப்போது தேவ கணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான் உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீ ராமரை நோக்கி ராவண வதத்திற்கு அனுக்ரஹித்து, "விரைந்து முடிப்பாக!" என்றார்.

[வால்மீகி மகரிஷி அருளிய ஆதி காவியமான ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் என்ற பெயர் பெற்ற நூற்று ஏழாவது ஸர்க்கம் முற்றுப் பெற்றது ].

சா2யா ஸுவர்சலாம்பா3 ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம :
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top