Rationalism is only for his partymen? Fooling the public!!
தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் இடது கை மணிக்கட்டில், புதிதாக, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல ஆண்டுகளாக, மஞ்சள் நிற துண்டு அணிந்து வருகிறார். ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக, தகவல் பரவியது. இது தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்தபோதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்தவில்லை.
ஒருமுறை அவர் வெளியிட்ட, கேள்வி - பதில் அறிக்கையில், 'எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன்' என, தெரிவித்திருந்தார்.
தற்போது புதிதாக, தன் இடது கை மணிக்கட்டில், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளார். இதன் ரகசியம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
வேலுாரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக்கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சிவப்பு நிற பட்டைக்கான காரணம் குறித்து, பிரபல ஜோதிடர் சிவகுரு ரவி கூறியதாவது:கருணாநிதியின் ராசி ரிஷபம்; லக்னம் கடகம். அவரது ஜனன கால ஜாதகப்படி, மகர ராசியில், செவ்வாய் உச்சபலம் பெற்றுள்ளார். கடக லக்னப்படி, ஐந்துக்குரிய செவ்வாய், உச்சபலம் பெற்று, யோகாதிபதியாக வருகிறார். செவ்வாய் நிறம் சிவப்பு. எனவே, சிவப்பு நிற பட்டை அணிந்துள்ளார்.கருணாநிதி ஜாதகப்படி, சுக்கிர திசையில், செவ்வாய் புத்தியில், ராகு, ஐந்தாம் இடத்தில் இருந்து, நான்காம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார். எனவே, இடது கையில் கைக்கடிகாரத்தை கட்டியுள்ளார்.
இதன் மூலம், அரசியலில் அவர் பின்னோக்கி தள்ளப்படுவது தடுக்கப்படும். அவரை முன்னிலைப்படுத்தி பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதே கருத்தை, வேறு சில ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1408955
தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் இடது கை மணிக்கட்டில், புதிதாக, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல ஆண்டுகளாக, மஞ்சள் நிற துண்டு அணிந்து வருகிறார். ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக, தகவல் பரவியது. இது தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்தபோதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்தவில்லை.
ஒருமுறை அவர் வெளியிட்ட, கேள்வி - பதில் அறிக்கையில், 'எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன்' என, தெரிவித்திருந்தார்.
தற்போது புதிதாக, தன் இடது கை மணிக்கட்டில், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் அணியத் துவங்கி உள்ளார். இதன் ரகசியம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
வேலுாரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக்கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சிவப்பு நிற பட்டைக்கான காரணம் குறித்து, பிரபல ஜோதிடர் சிவகுரு ரவி கூறியதாவது:கருணாநிதியின் ராசி ரிஷபம்; லக்னம் கடகம். அவரது ஜனன கால ஜாதகப்படி, மகர ராசியில், செவ்வாய் உச்சபலம் பெற்றுள்ளார். கடக லக்னப்படி, ஐந்துக்குரிய செவ்வாய், உச்சபலம் பெற்று, யோகாதிபதியாக வருகிறார். செவ்வாய் நிறம் சிவப்பு. எனவே, சிவப்பு நிற பட்டை அணிந்துள்ளார்.கருணாநிதி ஜாதகப்படி, சுக்கிர திசையில், செவ்வாய் புத்தியில், ராகு, ஐந்தாம் இடத்தில் இருந்து, நான்காம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார். எனவே, இடது கையில் கைக்கடிகாரத்தை கட்டியுள்ளார்.
இதன் மூலம், அரசியலில் அவர் பின்னோக்கி தள்ளப்படுவது தடுக்கப்படும். அவரை முன்னிலைப்படுத்தி பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதே கருத்தை, வேறு சில ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1408955