• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

thithi poojaas from pavishya puraanam

Status
Not open for further replies.

kgopalan

Active member
விரதங்கள் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.

தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடியவில்லை என்றால்
இல்லறத்தார் என்னென்ன திதியில் என்னென்ன விரதம் உபவாஸம் இருந்தால் தேவர்களை த்ருப்திபடுத்தலாம் என்று சுனந்து முனிவர் கூறினார்.

ப்ரதமை திதியில் பாலையும், த்விதியை திதியில் உப்பையும் தவிர்க்க வேன்டியது. த்ருதியை திதியில் எள்ளுஞ்சாதம் சாப்பிட வேண்டும்.

சதுர்த்தியில் பால் ஆஹாரம், பஞ்சமியில் பழம், சஷ்டியில் காய், சப்தமியில் வில்வ ஆஹாரம் செய்ய வேண்டும்.

அஷ்டமியன்று பொடி சாதம், நவமியன்று அக்னியில் சமைக்காத உணவு;
தசமி அன்றும் ஏகாதசியன்றும் பால்; துவாதசியன்று கீரை; த்ரயோதசியன்று கோமியம், சதுர்தசியன்று பார்லி உணவும் சாப்பிட வேண்டும்.

அமாவசையன்று ஹவிஸ்; பெளர்ணமியன்று தர்ப்பை புல்லில் நனைத்த ஜலமும் சாப்பிடவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குறிய தேவதைகள் த்ருப்தி யடைகிறார்கள்.,

இந்த விருதம் நான்கு வர்ணத்தாரும் செய்யலாம். இந்த விரதம் ஆண், பெண் எல்லோரும் செய்யலாம்..

ஒரு பக்ஷம் இம்மாதிரி ஆகாரம் செய்தால் பத்து அஸ்வமேத யாக பலன் கிடைக்க பெறுகிறார்கள்.. நான்கு, மாதம், எட்டு மாதம், 12 மாதம் இவ்வாறு விரதம் இருந்தால் பல மந்வந்தரங்கள் சூரிய லோகத்தில் சுவர்க்க அநுபோகங்களை அநுபவிப்பான்.

இந்த விரதத்தை அதாவது ஒவ்வொரு திதியிலும் திதி உபவாசம் எப்படி இருக்க வேண்டுமென்பது;-

இந்த விரதத்தை ஐப்பசி நவமி; மாசி ஸப்தமி; வைகாசி த்ருதியை; கார்த்திகை பெளர்ணமியில் ஆரம்பித்தால் உத்தமம்.

நீண்ட ஆயுள் கிடைக்கும். சூர்ய லோகத்தில் சுகமாக இருக்கலாம்.
முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் விரதம், உபவாசம் ஆகியவைகளை செய்து , தானம் கொடுத்து , தர்ம வழியில்

நடந்து , தாய், தந்தை, குரு ஆகியோருக்கு சேவை செய்து, விதிப்படி தீர்த்த யாத்திரை செய்து , அற வழியில் நீண்ட ஆயுள் கழித்த புண்ணிய பலனை மேலும் உயர்த்திக் கொண்டு மேலுலகில் நற்பதவி பெறுகிறான்.,

இந்த உலகில் வாழும் போது எல்லா பொன் பொருள்களும், சிரேஷ்டமான உயர்ந்த மனைவி, நம்பிக்கையான வேலைகாரர்கள் ஆகியவை கிடைக்கும்.
கடுமையான வ்யாதிகளிலிருந்து விடுபடுவர். பந்து ஜனங்களின் புகழும், , புத்திரன், பேரன்களை பார்த்து மகிழவும் முடியும்.

இம்மாதிரி விரதம், உபவாசம், தானம் என்று செய்யாவிட்டால் ஒற்றை கண், குருடு, முடம், நொன்டி, ஊமை, படிப்புஅறிவின்மை தீராத நோய், தரித்திரம்
ஆகியவைகளால் பாதிக்கபடுவர். .

முதலில் பரமாத்மா சிருஷ்டிக்காக ஜலத்தை உற்பத்தி செய்தார். அதிலிருந்து ஒரு முட்டை(அண்டம்) உண்டாகி அதில் ப்ருஹ்மா தோன்றினார்.இதுதான் ப்ருஹ்மாண்டம். ப்ருஹ்மா அதை இரண்டாக பிளந்து ஒன்றில் பூமியையும் மற்றதில் ஆகாயத்தையும் செய்தார்.

அதன் பின் திசைகள்., உப திசைகள். தெய்வம், அசுரன் என்று உற்பத்தி செய்தார்.
எந்த திதியில் இதை உற்பத்தி செய்தாரோ அதுவே ப்ரதி பதா என்கிற ப்ரதமை திதியாயிற்று. . இதிலிருந்துதான் மற்ற திதிகள் உண்டாயின.

ப்ரதமை விரதத்தை கார்த்திகை பெளர்ணமி; அல்லது மாசி ஸப்தமி அல்லது வைகாசி சுக்ல த்ருதியை முதல் தொடங்குவது விசேஷம். .இதற்கு முன்னால் வரும் சதுர்தசி அன்றே இந்த விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். .அன்று சாப்பிடலா.ம்.

அடுத்து அமாவாசையன்று மூன்று வேளை குளிக்க வேண்டும். ஆகாரம் கூடாது. காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்..விரதத்தை துவங்கும் நாளில் விடியற்காலையில் எழுந்து சிரேஷ்டமான அந்தணனை சந்தனம், தாம்பூலம்

கொடுத்து மரியாதை செய்யவும். தேவையான அளவு பால் கொடுத்து குடிக்கச் சொல்லவும். அதன் பின் அவரை ஆசனத்தில் அமர்த்தி , ப்ருஹ்மாவாக மனசில் கருத வேண்டும்.

“”ப்ருஹ்ம தேவரே எனக்கு காட்சி தர வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.. ப்ருஹ்மதேவரின் அருள் கிடைக்கும். அதன் பின் விரதமிருப்பவர் பசும் பால் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருஷம்

காயத்ரியுடன் விரதத்தை செய்து வருஷ கடைசியில் ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு விரதமிருப்பதால் எல்லா பாபமும் விலகும். ஆன்மா தூய்மை ஆகும். நீன்ட ஆயுளுடன் தர்மவானாகவும், தனவானாகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் எல்லா

போகங்களையும் அநுபவிப்பராகவும் இருப்பார். விண்ணுலகில் தேவதைகளுக்கு சமமாக கருதபடுவார்..அதன் பின் சத்ய யுகத்தில் பத்து பிறவிகள் வாழ்வாங்கு வாழ்வார்.

இந்த விரத மிருப்பதால் அந்தணர் அல்லாதவரும் அந்தணராகி விடுவர்.
விசுவாமித்ரர் இந்த விரதமிருந்த பிறகு தான் ப்ருஹ்ம ரிஷி எனப்பெயர் பெற்றார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு மறுநாள் ப்ருஹ்மாவை 16 உபசார பூஜை செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தபின் பெளர்ணமியன்று

ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சங்கம், மணி, பேரி, வாத்யம் முதலியவற்றால் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

வெள்ளை நிற பசுவின் பஞ்சகவ்யத்தாலும், தர்ப்பை ஜலத்தாலும் ப்ருஹ்மாவிற்கு ப்ருஹ்ம ஸ்நானம் செய்விக்க வேண்டும்..

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று ப்ருஹ்மாவின் ரத யாத்திரை துவங்க வேண்டும்.. அருகில் காயத்ரி அமர்ந்திருக்க ப்ருஹ்மா மாந்தோல் ஆஸனத்தில் அலங்காரமாக காக்ஷி அளிப்பார்.

முன்னும் பின்னும் வேத கோஷம், வாத்யம் முழங்க பவனி வர வேண்டும் .ப்ருஹ்மாவின் விக்கிரஹம் அருஹில் ஒரு வேத விற்பன்னர் பூஜை செய்து மக்களுக்கு ப்ரசாதம் வழங்க அமர்ந்திருக்க வேண்டும்

இரவு நிலைக்கு திரும்ப வேண்டும். ரதம் ஓட்டி வந்தவர்களுக்கும், வாத்ய கோஷ்டி ; வேத விற்பன்னர்களுக்கும் அன்னம், பானம், சன்மானம் கொடுக்க வேண்டும்.

ஜன்மாந்திரங்களில் செய்த பாவங்கள் தொலையும்.

23-11-2014. மார்க்கசிரம் சுக்ல பக்ஷ ப்ரதமையில் பகலில் சாப்பிடாமல் இரவில் விஷ்ணு பூஜை செய்து சாப்பிட வேண்டும்.. நக்ன விரதம் என்றால் பகலில் சாப்பிடாமல் இரவில் சாப்பிடுவது.

த்விதீய திதி விரதம்.

இந்த த்விதீய விரதத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு தேவர் குல அங்கீகாரமும் ஆவிர்பாகமும் கிடைத்தன. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று துவங்கி ஒரு வருடம் காலம் கழித்து பூஜை முடித்து பிராம்ணருக்கு பொன்னால் ஆன தாமரையை தானம் செய்தால் மேலுலகில் பல கற்ப காலங்கள் வாழ்ந்து விட்டு பூமியில் ராஜாவாக பிறக்கலாம்..

இந்த வருடம் 10-9-2014 அன்று வரும் அசூன்ய ஸயன வ்ருதம் .. ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று துவங்க வேண்டும். இதனால் பெண்கள் விதவை ஆகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி பிரியாமல் வாழ முடியும்.

பள்ளி கொண்ட பெருமாளையும் அவரது மனைவியையும் பூஜை செய்து பின் வரும் துதியை சொல்ல வேண்டும்.

ஶ்ரீ வத்ஸ தாரீ ஶ்ரீ காந்த ஶ்ரீ வத்ஸ ஶ்ரீ பதே அவ்யய
கார்ஹஸ்த்யம் மா ப்ரணாசம் மே பாது தர்மார்த்த காமதம்.
காவஸ்ச மா ப்ரணஸ்யந்து மா ப்ரணஸ்யந்து மே ஜனா:


ஜாமயோ மா ப்ரணஸ்யந்து மத்தோ தாம்பத்ய பேததஹ
லக்ஷ்ம்யா வியுஜ்யே அஹம் தேவ ந கதாசித் அதா பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்


லக்ஷ்ம்யா ந சூன்யம் வரத யதாதே சயனம் சதா
சய்யா மமாப்ய சூன்யஸ்து ததா தே மதுஸுதன.

இவ்வாறு மஹா விஷ்னுவிடம் வேண்டிகொண்டு அவரை எப்போதும் ப்ரியாத மஹா லக்ஷ்ம்யையும் வேண்டி பூஜைசெய்தால் நிரந்த்ரமான பிரிவில்லாத படுக்கை சுகம் கிடைக்கும்.

காய்ந்து போன மிகவும் பழுத்த, கனிந்த பழம் நிவேத்யம் செய்ய க்கூடாது.
பேரீச்சை, மாதுளை, அத்தி பழங்கள், இளநீர் மஹாவிஷ்ணுவிற்கு பிடிக்கும்.

எப்படி மஹா லக்ஷ்மி இல்லாத படுக்கை மஹா விஷ்ணுவிற்க்கு கிடையாதோ அதைபோல சோபை அற்ற படுக்கை வேண்டாம். லக்ஷ்மிகரமான மனைவி பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஸகலமும் கிடைக்கும்.

திருதியை வ்ரதம்.: அக்ஷய த்ருதியை மற்றும் ரம்பா த்ருதியை.

பெண்கள் எவ்வகையில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவ்வகையில் பெண்களுக்கு உதவ கூடியது திருதியை வ்ரதம்.

எக்காரணம் கொண்டும் உப்பு சேர்க்க கூடாது.

இந்த உபவாசத்தை ஆயுள் பூராவும் செய்தால் ரூபம், லாவண்யம், செளபாக்கியம் அனைத்தும் பெறுகிறார்கள்..

கன்னி பெண்கள் இந்த விரதம் அநுஷ்டித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.

தங்கத்தில் கெளரியின் உருவத்தை செய்து ஒருமனப்பாட்டுடன் கெளரி பூஜை செய்ய வேண்டும். இரவு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சம நிலையாக படுக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்தணருக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணையும் தர வேண்டும்.

இம்மாதிரி நியமப்படி பூஜை செய்யும் கன்னிகை உன்னதமான பதியை அடைவாள். நீண்ட காலம் போக போக்கியங்களை அநுபவித்து கடைசியில் தன் கணவருடன் உத்தம லோகத்தை அடைவாள்.

விதவை இந்த விரதத்தை செய்தால் மேல் லோகத்தில் தன் பதியுடன் சேர்வாள். அவருடன் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்வாள்.

இந்த்ராணி இந்த பூஜை செய்து ஜயந்தனை பெற்றாள். அருந்ததி இந்த பூஜை செய்து வசிஷ்டருடன் வானத்தில் ஸப்த ரிஷி மண்டலத்தில் அமர்ந்தாள்.

ரோஹிணி இந்த பூஜை செய்து சந்திரனின் அன்பு காதல் மனைவியாக வாழும் வாய்ப்பை பெற்றாள்.

வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் இப்பூஜை செய்வது உத்தமம்.மாசி மாதம் செய்யும் த்ருதியை பூஜைக்கு பின் உப்பு, வெல்லம், இரண்டையும் தானம் செய்தால் ஆண், பெண் இருவருக்கும் மிக மதிப்பை கொடுக்கும். நல்லது.

புரட்டாசி மாத த்ருதியை வ்ருதத்தின் போது வெல்ல அப்பம் நிவேத்யம் செய்திடல் வேண்டும். மாசி த்ருதியையின் போது கொழுக்கட்டை மற்றும் சொர்ண தானம், செய்திடல் வேண்டும்.

வைகாசி மாத த்ருதியையின் போது சந்தனம் கலந்த நீரையும், கொழுக்கட்டையையும் நைவேத்யம் செய்தால் எல்லா தேவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வைகாசி மாத த்ருதியை அக்ஷய த்ருதியை என அழைக்கபடுகிறது. இன்று சாப்பாடு, ஜலம், வஸ்த்ரம். தங்கம் தானம் செய்தால் குறைவில்லா பல நன்மைகள் உண்டாகும்.. இன்று உபவாசம் இருப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் ஏராளமாக கிடைக்கும்.

சதுர்த்தி விரதம் தொடரும்.




..








.
 
மிக மிக அருமை...!!! ஐயா...!! நன்றிகள்.. கோடி
 
திதிகளில் பூஜைகள்.தொடர்கிறது

திதி பூஜைகள் தொடர்ச்சி. சதுர்த்தி விரதம்.

சுக்லபக்ஷம் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு கந்த மூலாதிகளால் வாசனையான திரவியங்கள், , பலகாரங்கள் ஆகியவற்றுடன் பூஜை செய்ய வேண்டும். அரளி பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.

பிள்ளையார் முன்பு அந்தணர்கள் ஸ்வஸ்திவாசகம் சொல்ல பூஜை ஆரம்பிக்க வேன்டும். அதன் பின் பார்வதி, சங்கரன் என்று தொடங்கி கணேச பூஜையை துவங்க வேண்டும், பித்ருக்களுக்கும், நவகிரஹங்களுக்கும் பூஜை

செய்ய வேண்டும். நான்கு கலசங்கள் வைத்து அதில் கோரோசனை, குங்கிலியம், மருந்து வாசனை சாமான்களை போட்டு, புனித நீரால் கலசங்களை நிரப்ப வேண்டும். கணேசரை அழகிய சிம்மாசனத்தில்
அமர்த்த வேண்டும். கலச பூஜை செய்தபின் அடியிற்கண்ட மந்திரத்தால் கணேசரை பூஜை செய்ய வேண்டும்.

சஹஸ்ராக்ஷம் சததாரம் ரிஷிபி: பாவனம் கிருதம்
தேன அபிஷிஞ்சாமி பாவமான்ய: புனந்து தே.
பகம் தேவருணோ ராஜா பகம் ஸூர்யோ ப்ருஹஸ்பதி:

பகம் இந்த்ரஸ்ச வாயுஸ்ச பகம் சப்தர்ஷயோ தது:
யத்தே கேஸேஷூ தெளர்பாக்கியம் சீமந்தேயச்ச மூர்த்தனி
லலாடே கர்ணயோ: ரக்ஷணோ ஆபஸ்ததுந்தம் தேசதா:

இந்த மந்திரங்களை கணேசருக்கு அபிஷேகம் செய்வித்த பின் சொல்ல வேண்டும். அதற்கு பின் யாக ஹோம பூஜைகளையும் செய்ய வேண்டும். அதற்குபின் கையில் புஷ்பம், அறுகம்புல் மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு

கணேசனின் தாயார் பார்வதியை மூன்று முறை புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.. மந்திரத்தை சொல்லி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

ரூபம் தேஹி யசோ தேஹி பகம் பகவதி தேஹி மே;
புத்ரான் தேஹி, தனம் தேஹி, சர்வான் காமாம்ஸ்ச தேஹிமே
அசலாம் புத்தி மே தேஹி தராயாம் கியாதி மே வ ச

ப்ரார்த்தனைக்கு பின் அந்தணருக்கு சாப்பாடு போட்டு வஸ்த்ரம், தக்ஷிணை கொடுக்க வேண்டும் இவ்வாறு கணேசரையும் கிரஹங்களையும் பூஜை செய்தால் செய்யும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும் லக்ஷ்மி கடாக்ஷமும் கிடைக்கும்..

கணேச காயத்ரி சொல்லி வழிபாடு செய்யலாம்.
மஹா கர்ணாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
கணேசருக்கு பூஜை செய்ய நாள், நக்ஷத்திரம் உபவாசம் எதுவும் தேவையில்லை .சிரத்தையுடன் பூஜை செய்தால் போதும்.

புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தியில் செய்ய படும் கணேச பூஜை சிவா (க்ஷேமம்) என்று அழைக்க படுகிறது.(28-9-2014)
அன்று ஸ்நானம், தானம், உபவாசம் ஆகிய நற் கருமங்கள் செய்தால் கணபதியின் அருள் பார்வை கண்டிப்பாக கிடைக்கும்.பூஜை முடிந்த பிறகு வெல்லம், உப்பு, பால் ஆகியவை தானம் செய்ய வேன்டும்.

பிராமணருக்கு சாப்பாடு போடுவதுடன் குருவாக கருதி உபசரிக்க வேண்டும். தானத்தின் போது வெல்லம், உப்பு, எள்ளு உளுந்து கொழுக்கட்டைகளும் வடை பாயசமும் கொடுக்க வேண்டும்.

மாசி மாதம் சுக்ல சதுர்தியில் செய்யும் கணபதி பூஜை “சாந்தா” என்று அழைக்கப்படும். .இன்று உபவாசமிருந்து கணபதிக்கு ஹோம பூஜைகள் செய்த பிறகு பிராமணர்களுக்கு உப்பு, வெல்லம், காய்கறி, இனிப்பு பண்டங்கள் தானம் செய்ய வேண்டும். (22-2-2015)

எந்த மாதத்தில் செவ்வாய் கிழமையுடன் இணைந்து சுக்ல சதுர்த்தி வருகிறதோ அதை “சுகா” என்று அழைப்பார்கள்
.(1-7-2014)
இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி

செய்தார். அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.

செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.

முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..

இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..

அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.

த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம்.
ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:

இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.,
 
கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போது

அடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .

பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.

குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு “அக்னி மூர்தெள” என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்

மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.

நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.

அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..

நாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம்

சர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே.
யே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா:
யே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:

யே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:

இந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.

இவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்த

பிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான்.
.
சதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.

அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.

பூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.

பஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.

புரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும்
.ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும்

.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் “குருகுலவே ஸ்வாஹா”என்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது.
 
திதிகளில் பூஜைகள்.தொடர்கிறது11

சஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:--
புரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது..

புரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.

ஸப்தமி திதி;--ஸூர்யன்.
சப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதி ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என்றும்

பெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்

ப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.

அதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்

காஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரை
மார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன்.
,
கதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள்… இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

சம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.

சூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.

ஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..

சூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..

மஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..

சூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.

பஞ்சமி திதியில் ஒரு வேளை ஆகாரம் சாப்பீட்டு சஷ்டியன்று உபவாசமிருந்து சப்தமியன்று முதலில் உபவாசமிருந்து அதன் பின் காய்கறிகள், பஞ்ச பட்ச பரமான்னங்களை சூரியனுக்கு நிவேத்யம் செய்து ,ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போட்டு இரவில் மெளன விரதத்துடன்

சூர்யனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுகிறானோ அவன் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறான். சூர்ய லோகத்தில் பல மன்வந்த்ரம் வாழ்வான். பிறகு பூமியில் சக்கிரவர்த்தியாக வாழ்வான்.

மனதில் நினைத்ததை எல்லாம் கொடுக்க கூடிய திதிகள்:- த்ருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, நவமி… மாசி ஸப்தமி, ஐப்பசி நவமி, புரட்டாசி சஷ்டி, மாத பஞ்சமி இவைகள் விசேஷ பலன் தருபவை.
28-11-2014.

கார்திகை சுக்ல பக்ஷ ஸப்தமியில் ஸப்தமி வ்ருதம் இருப்பதை துவக்கலாம். உத்தமமான பிராமணருக்கு நல்ல கனிகளை தானமாக கொடுக்க வேண்டும்
.
.ராத்திரியில் தவமிருப்பவர் காய் கறிகளையே சாப்பிடவேண்டும்.இந்த வ்ருதத்தை நான்கு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். பாரணை இருக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தால் சூரிய பகவானை ஸ்நானம் செய்விக்க வேண்டும். அ.தன் பின் தானும் சாப்பிட வேண்டும்.

முதல் மாதம் குங்குமப்பூ , சந்தனம், , புஷ்பம், பழம், பாயசம், தூப தீப நைவேத்யங்கள். ஆகியவைகளுடன் பூஜை செய்ய வேண்டும் .ப்ராமணருக்கு அதே மாதிரி சாப்பாடு போடவேண்டும்.

இரண்டாம் மாதம் ஜலத்தில் தர்பையை போட்டு அதை சூரிய பகவானுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பல புஷ்பங்கள், காய் கறிகள், வெல்ல அப்பம் நைவேத்தியம். காய்ச்சிய பால், அரளி பூ, குங்குலிய தூபம், தயிர் சாதம் போன்றவைகளால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்.
 
.புராணிகருக்கு வஸ்த்ரம், அலங்கார பொருள் கொடுத்து புராணங்கள் சொல்ல செய்ய வேண்டும் .சிகப்பு சந்தனம், அரளிப்பூ, குங்குலிய தீபம், கொழுக்கட்டை, பாயசம் நைவேத்யம்.

பால், தாமிர பாத்ரம், புராண கிரந்தங்கள், பெளராணிகர் ஆகியவை சூரியனுக்கு ப்ரீதியானவை. சாக ஸப்தமி வ்ருதம் சூர்ய பகவானுக்கு மிகவும் இஷ்டம். .

சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும். சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு “”ஓம் ககோல்காய ஸ்வாஹா”” என்று அர்க்கியம் விட வேண்டும்..இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.. இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.

ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும். இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.

பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.

சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;

புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.

12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.

அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”

என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல

மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும்.
.
12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்

தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின் ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..

மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.

சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.

உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….

ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..

ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம்
.
இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.
 
ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.

மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.

தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும் மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க

வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.

சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்

நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.


சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..

ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம்

. கொண்டாடப்படுகிறது.புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம்.மார்கழி சுக்ல பக்ஷ

சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.

மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும்

.பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர்

ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.

8-3-2015 அன்று ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.

சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..

.
 
ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். 17-8-2014 அன்று ஆவணி மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய

ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்

108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறைவேறும்..

ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்

செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.

எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.

இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,

பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது.
கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.

சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு , ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.

ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர். 10-9-2014.

வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.
ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.

ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.

சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும். 23-3-2015.

29-9-2014 புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.

கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.

1-8-14 சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.

ஆவணி க்ருஷ்ண பக்ஷ பஞ்சமியன்று வீட்டு முற்றத்தில் வேப்பிலையால், மனசார, தேவியை பூஜை செய்வது மிக உத்தமம், ஏகாதசி விரதம் இவைகளை விட சிறப்பு வாய்ந்தது.

ஜமதக்னி முனிவர் சூரியனை மிரட்டினார். உலக நன்மைக்காக நீ வெப்பத்தை காட்டினாலும் அதனால் ஏற்படும் தாபம் போக என்ன வழி என்று சூரியனைக் கேட்டார். சூரியன் காலுக்கு செறுப்பும் தலைக்கு குடையும்

அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனச்சொன்னார் .சூரியனே ஜமதக்னி முனிவருக்கு குடையும் செறுப்பும் கொடுத்தார்.. குடை செறுப்பு தானம் செய்பவர் ஸ்வர்க்கம் செல்வர் என சூரியன் திரு வாய் மலர்ந்து அருளினார்.

ஸப்தமி விருதத்தை உத்தராயணத்தில் சுக்கில பக்ஷ ஞாயிற்றுகிழமைகளில் துவங்க வேண்டும்.. எல்லா பாபங்களையும் இந்த வ்ருதம் போக்கடிக்கும்.

ஞாயிற்றுகிழமை ப்ரதமை திதி முதல் ஸப்தமி வரை எருக்கு இலையை கொண்டு சூரியனை பூஜிக்க வேண்டும். .ப்ரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்த எருக்கம்

இலைகளையே உண்ண வேண்டும். முதல் நாள் ஒரு எருக்கு இலை. இரண்டாம் நாள் இரண்டு எரூக்கு இலை. மூன்றாம் நாள் மூன்று ; நான்காம் நாள் 4 இலை; 5ம் நாள் 5 இலை. 6ம் நா 6 இலை. 7ம் நாள் 7எருக்கு இலைகள் அர்ச்சனைக்கு…. இவைகளையே சாப்பிட வேண்டும்

இரண்டாம் மாதம் ப்ரதமை முதல் ஸப்தமி வரை மேற்சொன்ன வகையில் மாசிப்பச்சை இலைகளால் அர்ச்சனை செய்து அந்த இலைகளையே சாப்பிடவும். முதல் மாதம் செய்த மாதிரியே மற்ற மாதங்களும் செய்யவும்.

மூன்றாம் மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்..
நான்காம் மாதம் பழத்தை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்.
 
ஐந்தாம் மாதம் பாகம் செய்யாத ஆகாரத்தை உபயோகிக்கவும்.
ஆறாவது மாதம் எதயுமே சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய இலைகளை எடுத்து வந்து ஒரு புது குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்பட்டு

அவற்றால் பூஜை செய்ய வேண்டும் .இரவும் பகலும் கண் விழித்து பகவானை தியானிக்க வேண்டும். இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ அவனுக்கு எல்லா பாபங்களும் நீங்கி விடும்.

எருக்கு இலைகளால் அர்ச்சனை செய்தால் பணம் பெருகும். மாசிபச்சை இலைகளால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சிநேகம் உண்டாகும்.
வேப்பிலையால் அர்ச்சனை செய்தால் வியாதி விலகும் .பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான குழந்தைகள் பிறக்கும்.

பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணை தர வேண்டும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும்.ஸப்தமி விரதத்தில் எவனொருவன் எந்தெந்த பொருட்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்தந்த பொருட்கள் அவனுக்கு பல மடங்கு பெருகும்..

பனிரெண்டு சுக்ல ஸப்தமிகளில் எவன் பசுஞ்சாணியை உட்கொண்டு பூஜிகிறானோ அவன் அளவற்ற பலன் அடைவான் .கஞ்சி மட்டும் குடித்தும், பால் மாத்திரம் சாப்பிட்டும், உலர்ந்த சருகு மாத்திரம் சாப்பிட்டும்,

ஒரு வேளை ஆகாரம் மட்டும் சாப்பிட்டுகொண்டும், ஜலத்தை மட்டுமே அருந்தியும், பிச்சை எடுத்து சாப்பிட்டு இருந்தும் இந்த ஸப்தமி விரதம் ஆண்/ பெண் இரு பாலாரும் இருக்கலாம். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஆராதனை செய்ய வேண்டும்.

பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலம் வரைந்து அதில் ஆவாஹனம் செய்யலாம்.. ஆகாசத்தில் ப்ரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும், அக்னி, ஜலம், ப்ரதி பிம்பம், யந்திரம், தங்கம் அல்லது செப்பு பாத்திரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்..ஆல மரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்.

சூரியனுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும் போதும் நமஸ்காரம் செய்யலாம்.ஸப்தமி வ்ருதம் இருந்து பூஜை செய்பவர்கள் சூரியனுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டும்.அந்தந்த உபசாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள மந்திரங்களை பக்தியோடு சொல்லி பூஜிக்கவும்.

முதல் உபசாரம்;1. ஆவாஹனம்:-- நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கல மானவருமான சூர்யனை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்தில் ஸான்னித்யம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது.

2.ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது. ஸ்தாபனம்.
3.வேறு இடங்களுக்கு போகாமல் அந்த ஆசனத்திலேயே அமர வைப்பது ரோதனம்.

4. சூரியனை ஒருமனத்தோடு தியானிப்பது ஸான்னித்யம்.
5,கால்களில் ஜலம் விட்டு அலம்புவது பாத்யம்
.
6.தாமிர பாத்திரத்தில் சந்தனம் கலந்த ஜலத்தில் வாசனை பூக்கள் போட்டு இரண்டு முழங்கால்களால் நடந்து சூரியனுக்கு ஜலம் அளிப்பது அர்க்கியம்.

7. பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், பழச்சாறு, வாசனை பவுடர், சுத்த நீராலும், அபிஷேகம் செய்வது ஸ்நானம்.

8.சந்தனம், குங்குமம் திலகமிடுவது அக்ஷதை போடுவது சந்தனம் உபசாரம்.

9. அழகிய வஸ்த்ரம் சூரியனுக்கு சார்த்தி அலங்கரிப்பது வஸ்த்ரம் என்ற உபசாரம்.
10.மலர் மாலை சாற்றி பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம்.

11.ஆபரணங்கள் அணிவிப்பது ஆபரணம் என்ற உபசாரம்
12.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் புகை போடுவது தூபம் என்ற உபசாரம்.

13.நெய்யிட்ட திரியை ஏற்றி சூரியனுக்கு அலங்காரமாக காட்டுவது தீபம்.

சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதற்கு மேலும் ஏற்றலாம்.

14. சூரியனுக்கு அங்க பூஜை அங்கங்கள் பெயர் சொல்லி அந்தந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது. அங்க பூஜை.
15.சூரியனுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு பலி போடுவது.

16. மறுபடியும் சந்தன ஜலத்தால் அர்க்கியம் தருதல்.
17.சூரிய ஜபம் செய்வது.
18.முத்திரைகளால் தேகத்தை தேவதா மயமாக்கி கொள்வது நியாசம் எனும் உபசாரம்.

19.மந்திர ஸ்லோகங்களால் துதி செய்வது ஸ்தோத்ரம் எனும் உபசாரம்.
20. அக்னி குண்டத்தில் ஹோமம் செய்வது ஹோமம் என்ற உபசாரம்

21.பூஜை செய்ததனால் ஏற்படக்கூடிய பலன்கள் தனக்கு சித்தியாக வேண்டும் என ப்ரார்திப்பது ஸம்ஹாரம் என்ற உபசாரம்.

22சூரியனின் கை கால்களை அலம்பி விடுவது சுத்த பாதம் என்ற உபசாரம்

23. பகவானை த்ருப்தி படுத்துவதற்காக விசிறி, பாட்டு, நடனம் முதலியன செய்வது விஹாரணம் என்னும் உபசாரம்.
24. சூரியனை யதாஸ்தானம் செய்வது விஸர்ஜனம் எனும் உபசாரம்.

மூல மந்திரங்களை கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்ய வேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்த பிறகு சிறிது புஷ்பம்,,ஹோம பஸ்பம் ஆகியவற்றை வடக்கு திக்கில் வைக்க வேண்டும்,

இதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாக சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். உத்தமமான பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.

சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயர் கூறி பூஜை செய்ய வேண்டும்.. சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரிலும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரிலும், ஆனியில்- இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில்

கபஸ்தி, புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் சுவர்ண ரேதஸ்; கார்த்திகையில் துவஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதத்தில் விஷ்ணு; மாசி மாதம் அருணன் ; பங்குனியில் சூரியன் என்ற பெயர் சூட்டி சூரியனை பூஜிக்க வேண்டும்.

சூரியனின் தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்க தனி தனி பூஜா முறைகள் உள்ளன.

சூரியனை சாயா தேவி சுவர்ச்ச லாம்பா வுடன் தாமரை மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் அருணன், குதிரைகளயும் பூஜிக்க வேன்டும்.



நியமத்தோடு சூரியனை சப்தமியிலோ அல்லது ஞாயிற்றுகிழமையிலோ விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தேஜஸ், கீர்த்தி
புத்ர பெளத்ரர்கள் அடைவர்.,

ஸப்தமிக்கு முதல் நாளான சஷ்டி முதலே பிரயாணம், காம விஹாரமின்மை; மயக்க வஸ்துக்களை சாப்பிடாதிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்; எண்ணைய் ஸ்நானம் செய்யாதிருத்தல், ,வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசாமல், அவர்கள் பொருட்களை தொடாமலும் , பொய் பேசாதிருத்தல் போன்ற நியமங்களை கை கொள்ள வேண்டும்.


சூரிய மந்திரம் அல்லது தீக்ஷை இல்லாதவர் சூரியனை பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வியாதி வரும்.. குரு உபதேசம் பெற்று பிறகு பூஜிக்க வேண்டும்.

மானஸீக புஷ்ப பூஜை:--- ப்ரதிஷ்டை செய்த லிங்கத்தை வாசனையுள்ள பூக்களால் பூஜிப்பது போல இருதயத்தில் உள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் எவை?

அஹிம்சை எனப்படும் உடல், வாக்கு, மனம், ஆகிய முக்கரணங்களாலும் யாருக்கும் எந்த ஹிம்சையும் செய்யதிருத்தல் முதல் புஷ்பம்.

இந்திரிய ஜயம்:---கண், காது, மூக்கு, வாய், மனம் என்கின்ற ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஒரு நிலை படுத்த வேண்டும். இது 2ஆவது புஷ்பம்.

தேகத்துக்கோ மனதுக்கோ துன்பம் வந்தால் தைரியமாக ஏற்க வேண்டும். ,
தைரியம் 3ஆவது புஷ்பம்.

பிறர் செய்யும் தீங்கை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும்.அதை பொருட்படுத்தாதே. பொறுமை 4ஆவது புஷ்பம்.

சுத்தமான மனம், வாக்கு, தேகம் எப்போதும் இருக்க வேண்டும். களங்கம், அசுத்தம் இல்லாத ஈடுபாடு தேவை. ஸெளசம் எனும் சுத்தியே 5ஆவது பூ.

கோபம் வந்தாலும், கோபத்தை பிறர் தூண்டினாலும்,கோபபட கூடாது.
கோபமின்மை ஆறாவது புஷ்பம்.

செயலிலும், எண்ணத்திலும், பேச்சிலும் தர்மமாக இருக்க வேண்டும். அதர்மம் செய்யாமல் இருப்பதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பம்.

ஸத்யம் எட்டாவது புஷ்பம்.. பேச்சிலும், செயலிலும், எண்ணத்திலும் ஸத்யமாக இருக்க வேண்டும்.

இம்மாதிரி இருதயத்திலுள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நாள் தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் ஜபம், ஹோமம் செய்து பகவானை பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் என்னும் இருளிலிருந்து வெளிப்பட்டு சுஷும்னா நாடி வழியாக தலையை பேதித்துக் கொண்டு பகவானை அடைகிறான். .

பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்க வேண்டும் .தியானம் முதலிய உபசாரங்களாலும் பகவானை பூஜிக்க வேன்டும். இதனால் அகங்காரம் அழியும் .நான் என்னுடையது என்ற அகங்காரம் நீங்க வேண்டும்.

நமது கண்கள்—சூரியன்; நாக்கே வருணன்; மூக்கே பூமி ;இந்த சரீரம் அக்கினியும் வாயுவுமாகும் .கர்மேந்திரியங்களே இந்திரன் .நமது உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆதலால் விஷ்ணு போக்தா.

பாபங்களின் இருப்பிடம் அபானம் ஆகும்.. மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை எனப்படுகிறது.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top