• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Surya Dosha Remedy and Mantra

சூரிய தோஷத்திற்கான பரிகாரமும் மந்திரமும்

நாக தோசம், செவ்வாய் தோசம், எனக்கேள்விப் பட்டிருக்கிறோம்! ,

அது என்ன சூரிய தோசம்?

சூரியனால் ஏற்படக்கூடிய தோசமே "சூரியதோசம்"
என சாஸ்திரங்கள் அழைக்கிறது,

சூரியன் தோசம் செய்வாரா,அவ்வாறாயின் என்ன தோசம் செய்வார் என்பதை அறிவதற்கு முன் சூரியனைப் பற்றிய ஒரு மினி ஸ்டோரியைப் பார்ப்போம்! .

சூரியனுக்கு சமுக்ஞை,பிரபை,
ரைவதை என மூன்று துணைவியர் உண்டு,

இதில் முதல் மனைவியே பட்டத்து இளவரசி

அவளுக்கு வைவசுத மனு,யமன் என இரண்டு புத்திரர்கள்,யமுனை என்ற பெண்ணும் பிறந்திருந்த வேளையில்,

சூரியனுடைய வெப்பத்தையும்,உஷ்ணத்தையும் தாங்க இயலாத சமுக்ஞை, அங்கிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தாள்.

பின்னால் சூரியனால் தொல்லை வரக்கூடாது என்ற காரணத்தால்
தமது நிழலையே ஒரு பெண்ணாக உருவமாக்கி அங்கே விட்டு பிரிந்துச் சென்றாள்.

அந்த பெண் உருவம் "சாயாதேவி"என்ற பெயரில் சூரியனோடு வாழ்ந்து வரலானது,

எனவே வெப்பக் கிரகமான சூரியன் யாருடைய ஜாதகத்தில் ஏழில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும்,
அவரை விட்டு அவர் மனைவி பிரிந்து
சென்று விடுவாள்,
என வழங்கலானது,

பாவக்கிரகமான,
வெப்பக்கிரகமான சூரியன் ஏழில்
அமர்ந்தால் திருமணத்தடையும்,
திருமணம் ஆகாத நிலையும்,
திருமணமானால் மனைவி பிரிந்து விடுதல்
அல்லது,இழந்து விடுதல் என களத்திர தோசம் உண்டாகிறது,

சூரியன் ஏழில் இருப்பது மட்டுமன்றி,ஏழாம் அதிபதியோடு இணைந்தாலும்,
பார்த்தாலும்,
சுக்கிரனோடு இணைந்தாலும்,
பார்த்தாலும் கூட
சூரியன் தோசத்தை உண்டு பண்ணி,
இல்லற வாழ்வில்
பெரும் பாதிப்பை
தந்து விடுகிறான்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சூரியன் 2,7ல் இருந்தால் களத்திர தோசம், பெண் ஜாதகத்தில் 8ல் இருந்தால் மாங்கலய தோசம் உண்டாக்கும்.

இப்படி தோசமுள்ள ஜாதகங்களை இதேபோல அமைப்புள்ள ஜாதகத்தோடுதான் இணைக்க வேண்டும்,

தனுசு லக்னத்திற்கு மட்டும் ஏழில்
சூரியன் தோசம் செய்வதில்லை.

காரணம் தனுசு லக்னத்திற்கு 9ம்
இடமான சிம்மராசியாதிபதி சூரியன் பாக்யாதிபதியாவதால்,

ஆனால் தனுசு லக்னத்திற்கு 7ல் சூரியன் சுக்ரனோடு இணைந்தால் தோசம் செய்துவிடுவார் என அறிக,

தந்தையை அவரின் வயதான காலத்தில் சரியாக பராமரிக்காதவர்களுக்கும் சூரிய தோஷம் ஏற்படும்.

சூரிய தோஷம் ஏற்பட்ட நபர்களுக்கு உடல் அடிக்கடி நோய்வாய்ப்படும்.

கண், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். கம்பீரம் இருக்காது. தங்களின் தகுதிக்கு கீழான வேலைகள், பணிகளை செய்யும் நிலை ஏற்படும்.

பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதில் தடை மற்றும் தாமதங்கள் உண்டாகும்.

சூரிய தோஷம் நீங்கி சூரியனின் நற்பலன்களை பெறுவதற்கு மாதம்
ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் ஒரு வேளை உணவை தவிர்த்து
விரதம் இருந்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை
அன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், நவகிரகங்களில் சூரிய தேவரையும் வணங்கி அந்த கோவிலிலோ அல்லது கோவிலுக்கு அருகிலோ அரச மரம் இருந்தால், அந்த அரச மரத்திற்கு உங்கள் கைகளால் நீரூற்றி வருவது உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.

சூரிய பகவான் மட்டுமே நம்முடைய
கண்களுக்கு தெளிவாக தெரியும் தெய்வமாவார்

அதனால் அவரை வணங்குவது அதிக சிறப்பை தரும்.

ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருப்பவர்கள்
(துலாம் ராசியில் இருப்பவர்கள்)
சூரியன் பலம் இழந்து
இருப்பவர்கள் , ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் படித்தால்
சூரியனால் வரும் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

சூரிய பகவானின் அருளை பெரும் பல வழிகளில் இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை
படிப்பதும் ஒன்றாகும்.

இந்த தோசமுள்ளவர்கள்,
சூரியனார் கோயில் சென்று சூரியனை பூஜித்து வர,தினசரி
சூரிய நமஸ்காரம் செய்ய,ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய தோசத்தின் விளைவுகளை தவிர்க்கலாம்,

இராமாயணத்தில் ராம ராவண யுத்தம்
கடுமையாக நடந்துகொண்டிருத்த போது இருவரும் சம பலம் கொண்டவர்களாக
கடும் யுத்தத்தில்
ஈடுபட்டனர்.

ராமன் எவ்வளவோ முயன்றும் ராவணனை கொல்ல முடியாமல் தடுமாறுகிறார்,

இந்த ராவணனை கொள்வதற்கு என்ன
வழி என்று
தெரியாமல் தவித்த
போது அகத்தியர் அவர் மூனே தோன்றி ஒரு உபாயத்தை சொல்கிறார்.

அவர் ராமனின் முன் நின்றவாறு ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை உபதேசிக்கிறார்.

சூரியனை குறித்த இந்த ஆதித்ய ஹ்ருதயம்
எனும் துதி விஷேஷ
மந்திரங்கள் அடங்கியது.

இந்த துதியை ராமன் போர்க்களத்திலேயே முறையாக அமர்ந்து
ஆசமனம் செய்து
மூன்று முறை மன ஒருமைப்பாட்டுடன் ஓதி விட்டு பிறகு தன் போரை
தொடர்ந்தார்.

அப்போது ராமன் வழக்கமாக குறி
வைக்கும் இடத்தை
மாற்றி ராவணனின் நாபியில் பகுதியில்
குறி வைத்து அம்பை எய்தார் .

அது அதிவேகமாக சென்று ராவணனின் உயிரை எடுத்து வந்தது

பிறகு 10 பாணங்களால்
10 தலைகளையும்
20 பாணங்களால்
இருபது கைகளையும் ராமன் அறுத்து வீழ்த்தினார் .

31 பானங்களில் ராவணனை ராமன் முழுவதுமாக கொன்றார்

இதை துளசி தாசர் தன்னுடைய
ராமா சரிதத்தில்
அழகாக விவரித்திருப்பர்.

தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பானங்களை
எய்தும் கொல்ல முடியாத ராவணனை ராமன் இறுதியில் 31
பானங்களை
கொண்டு அளித்ததற்கு ஆதித்ய ஹ்ருதயம் அளித்த ஆற்றலும் புத்தியுமே ஆகும்.
 

Latest ads

Back
Top