• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Regarding Thila Homam at Rameshwaram

Status
Not open for further replies.
Can anyone guide me to whom we have to contact in rameshwaram for doing thila homam. I would like know the best and experienced person whom I can contact for doing this Homam, as I have lots of doubts to get clarified. So i feel doing with an experienced person will help me not going in a wrong way or doing mistakes before our family perform this homam.

Need the contact number and person name ( priest name)
 
sri. n.s. sankara vaadhyaar. ( 04573) 2222544 and 94436 84262 no.3 uthira kaali amman koil street. RAMESWARAM.
 
THILA HOMAM book written by nanganallur SRIDHARAN in tamil is available now in GIRI TRADING AGENCY. Details are there.
 
Dear Friend,

Thank you so much for giving the details of the person and contact number... Is he an experienced person whom we can approach and clear our doubts regarding the pooja???
 
Kindly let me know whether he is expert in conducting thila homam. I have lots of doubts get clarified by him
 
he is one of the experts in Rameswaram doing thila homam. SRINGERI SANKARA MADAM vadhyar at rameswaram.His father was doing thila homam there. now he is doing thila homam there now. சாரதா திலக கல்போக்த தில ஹோமம்.


ராமேஸ்வரம் n.s.. சங்கர வாத்யார் No..3 உதார காளியம்மன் கோவில் தெரு
ராமேஸ்வரம், தொலை பேசி_( 04573 ) 222544 . மற்றும் கைபேசி 94436 84262;

விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், நாந்தி சிராத்தம், புண்யாஹா வசனம், , இரு வெள்ளி ப்ரதிமைகளில் ஆண், பெண் தாய் தந்தை ஆகிய இருவரது வம்சமும் முன்னோர்கள் இறந்தவர்கள் பெயர்கள் சொல்லி ஆவாஹனம் பூஜை செய்வார்கள். . லக்ஷ்மி நாராயணர் ப்ரதிமை ஒன்றும் சேர்த்து பஞ்ச கவ்யத்தால் விதிபடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மண்டபம் தயார் செய்து கொள்க. மூன்று அடி சதுரத்தில்

மண்டலம் செய்து கொள்க.

மண்டபத்தின் கிழக்கே ஹோம குண்டத்தில் ஒளபாஸனம் செய்து கொள்க. அக்னியின் தெற்கு பகுதியில் பழங்கள் மீது இரு ஆண், பெண் ப்ரதிமைகளை வைப்பர். ப்ராசீனாவீதியாய் ஆண் ப்ரதிமைக்கும் பெண் ப்ரதிமைக்கும் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, , யம ஸூக்தம் ஜபித்து எள்ளுருண்டை, எள்ளுசாதம், தாம்பூலம், நைவேத்யம்,

அக்னிக்கு அருகில் கும்பத்தில் லக்ஷ்மி நாராயணர் வைக்கவும். உபவீதம். லக்ஷ்மி நாராயணர் பூஜை. புருஷ ஸூக்த விதானப்படி விஷ்ணு பூஜை. . குளிகன் இருக்கும் ராசியில் ஹோமம் செய்வது நல்லது. நாகராஜ ப்ரதிமை பக்கத்தில் வைத்து பூஜிக்கவும்.ஸர்ப்ப காயத்ரி உச்சரித்து த்யான ஆவாஹன பூஜை. .அஷ்ட நாகங்கள் பெயர் அநந்தன், வாசுகி, தக்ஷன், கார்கோடகன், பத்மன், மஹா பத்மன், சங்க பாலன் குளிகன்.


.எருமை வாஹனத்துடன் யம தர்ம ராஜன் உருவம் இரும்பில்
செய்து கொள்ள வேண்டும். அதற்கும் பூஜை செய்ய வேண்டும். பக்கத்தில் பத்ர காளி வடிவிலான மஹேஸ்வரி வெள்ளி ப்ரதிமையில் வைத்து பூஜிக்க வேண்டும்.

ஜப மந்திரங்கள். நான்கு வேதங்களின் தொடக்க வாக்கியங்கள், பவமானம், திக் பால மந்திரம், யம ஸூக்தம், பித்ர்யம், ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், ம்ருத்யு ஸூக்தம், சாந்தி பஞ்சகம்.

அக்னியில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து ஹோமம் செய்ய வேன்டும். முதலில் பசு மாடு தானம் செய்ய வேண்டும். நாந்தி சிராத்தம், வைஷ்ணவ சிராத்தம்,காமதேநு ப்ரதிமை பூஜை, சநீஸ்வரன் ப்ரதிமைக்கு ஆவாஹனம் பூஜை.. காயத்ரி மந்திரம், சுதர்ஸன மந்திரம்,மந்திர ஹோமம்.

பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும். கர்த்தாவுக்கு கும்ப ஜலம் அபிசேகம். ஈர வஸ்த்ரம் தானம்.; பசு மாடு தானம், தச தானம் தனுஷ் கோடிக்கு சென்று அங்கு ஆண், பெண் ப்ரதிமைகளை கடலில் மந்திரம் சொல்லி போட்டு விட்டு ஸ்நானம் செய்து விட்டு வந்து ப்ராஹ்மணர்களுக்கு போஜனம், தக்ஷிணை கொடுத்துவிட்டு சாப்பிட வேண்டும்.

கோயிலிலுள்ள 16 கிணறுகளிலும் ஸ்நானம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் கடலில் ஸ்நானம் செய்ய வேண்டும். ,

இவை எல்லாம் சங்கர வாத்யாரே வைத்திருப்பார். மொத்தமாக இவர்களுக்கும் தங்க, சாப்பிட அவர்களிடம் மொத்தமாக பேசிக்கொள்ளவும்.
 
Status
Not open for further replies.
Back
Top