ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்கள் அனைத்திலும் இருந்து சிற்சில சொற்களை/சொற்றொடர்களை எடுத்து அழகான ராமாயணம் கோர்த்துள்ளார்,வியாக்யானச் சக்ரவர்த்தி,ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை.அந்தத் தொகுப்பு "பாசுரப்படி ராமாயணம்" என்று கொண்டாடப் படுகிறது
பால காண்டம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ,
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்,
அந்தமில் பேரின்பத்து அடியரோடு,
ஏழுலகம் தனிக்கோல் செல்ல,
வீற்று இருக்கும்,
அயர்வறும் அமரர்கள் அதிபதியான,
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பன் ,
அலை நீர்க்கடலுள் அழுந்தும்
நாவாய் போல்,
ஆவார் ஆர்துணை என்று,
துளங்கும்,நல் அமரர், துயர்தீர,
வல்லரக்கர்,இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி ,
மண்உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய,
அயோத்தி என்னும் அணிநகரத்து,
வெங்கதிரோன் குலத்துக்கு
ஓர் விளக்காய்க்,
கௌசலை தன் குல மதலையாய்த்,
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்,
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்விகாக்க,
நடந்து, வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி,
வல்லரக்கர் உயிர்உண்டு,
கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண் சிலைஇறுத்து,
மைதிலியை மணம் புணர்ந்து ,
இருபத்தொருகால் அரசு களைகட்ட,
மழுவாளேந்தி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு ,
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன் நெடுமணிமாட அயோத்தி எய்தி,அரியணை மேல்,
மன்னன் ஆவான், நிற்க !!!
அயோத்தியா காண்டம்
கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட,
கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு,
மலக்கிய மாமனத்தினனாய், மன்னவனும் மறாது ஒழிய,
குலக்குமரா ! காடுறையப் போ !என்று விடை கொடுப்ப,
இருநிலத்தை வேண்டாது,
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்
ஆங்கொழிந்து,
மைவாய களிறொழிந்து, மா ஒழிந்து, தேர் ஒழிந்து,-
கலன் அணியாதே காமர் எழில்விழல் உடுத்து,
அங்கங்கள் அழகுமாறி,
மான் அமரும் மெல் நோக்கி வைதேகி இன்துணையா,
இளங்கோவும், வாளும், வில்லும் கொண்டு பின் செல்லக்,
கலையும் கரியும் பரிமாவும்,
திரியும் கானம் நடந்து போய்ப்,
பக்தியுடைக் குகன் கடத்தக்,
கங்கை தன்னைக் கடந்து,
வனம் போய்ப் புக்கு , காயோடு நீடுகனி உண்டு.
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று,
சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என் பெற்றாய் கைகேசீ !
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன், என்று வான் ஏறத்
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரக்கூடத்து,
ஆனை புரவி தேரோடு காலாள்
அணிகொண்ட சேனை, சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணையம் வைத்துக் குவலயமும்,
துங்கக் கரியும்,பரியும், இராச்சியமும்,
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்
திருவுடை திசைக்கருமம் திருந்தப் போய்த் தண்டகாரண்யம் புகுந்து!!
ஆரண்ய காண்டம்
தயங்கு மறைமுனிவர்க்கு
'அஞ்சேன்மின் !'என்று அருள் கொடுத்திட்டு,
வெங்கண் விறல்விராதன் உகவில் குனித்து,
வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி,
புலர்ந்து எழுந்த காமத்தால்,
சுடுசினத்துச் சூர்ப்பணகா,
பொன்னிறம் கொண்ட
சீதைக்கு நேராவன் என்றுவரக்,
கொடிமூக்கும்,காது இரண்டும்--
கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்,
கரனொடு தூடணன் தன்உயிரை வாங்க,)
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து,
மலை இலங்கை ஓடிப்புக,
கொடுமையில் கடுவீசை அரக்கன்
அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்,
ஓர் உருவு ஆய மானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து,
இலைக் குரம்பையில், தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து,
நீள்கடல்சூழ் இலங்கையில்,
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோந்து
வம்புலாம கடிகாவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும் பகலும் கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
கிஷ்கிந்தா காண்டம்
வனமருவு கவிஅரசன் தன்னோடு, காதல் கொண்டு,
மராமரங்கள் ஏழும் எய்து,
உருத்து ஏழு வாலி மார்பில்,
ஒரு கணை உருவ ஓட்டி,
கருத்துடைத் தம்பிக்கு,
இன்பக் கதிர்முடி அரசு அளித்து
வானரக் கோன் உடன் இருந்து, வைதேகி தனைத் தேட,
விடுத்த திசைக் கருமம் திருத்தித்,
திறல் விளங்கு மாருதியும்,
மாயோன் தூது உரைத்தல் செய்ய !!
சுந்தர காண்டம்
சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி,
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்,
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு,
"நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் !
அயோத்தி தன்னில் ஓர்,
இட வகையில் எல்லி அம்போது இனிது இருக்க,
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கிய மாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மாமனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்
'குலக்குமரா! காடு உறையப்போ' என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்,
கங்கை தன்னில்,கூர் அணிந்த வேல்வலவன் குகனோடு,
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி
'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் !' என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்;
பொன் ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின்வழி நின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்"
'அயோத்தியர் கோன்உரைத்த அடையாளம்;
'ஈது அவன் கைமோதிரமே'என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு,
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்,
இலங்கையர் கோன்மாக் கடிகாவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர்புரையும் அடிஇணை பணிய !!
யுத்த காண்டம்
காண எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று,
அலையார் கடற்கரை வீற்றிருந்து,
செல்வ வீடணற்கு நல்லவனாய்,
விரிநீர் இலங்கை அருளிச்,
சரண் புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய,
மலையதனால் அணைகட்டி,மறுகரையை ஏறி,
இலங்கை பொடி பொடியாகச்,
சிலைமலி நெஞ்சரங்கள் செலஉய்த்துக்
கும்பனோடு நிகும்பனும் பட
இந்திரசித் அழியக், கும்பகர்ணன் பட,
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர் போலக் குழமணிதூரம்
ஆட,
இலங்கை மன்னன்முடி, ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிரச்,
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து,
வென்றி கொண்ட செருக்களத்துக்,
கடிக்கமல நான்முகனும், கண் மூன்றத்தானும்,
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து,
மணிமுடி பணிதர,அடியினை வணங்கக்
கோலத், திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேர் ஏறிச்
சீரணிந்த குகனோடு கூடி,
அங்கண் நெடு மதிள்புடை சூழ் அயோத்தி எய்தி,
நன்னீராடிப், பொங்கிள ஆடை அரையில்சாத்தித்,
திருச்செய்ய, முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து,
சூட்டு நன்மாலைகள் அணிந்து,
பரதனும், தம்பி சத்துருக்கனனும்,
இலக்குமனனோடு, இரவும் நண்பகலும்
வடிவினை இல்லாச்
சங்கு தங்கு முன்கை நங்கை,
மலர்க்குழலாள் சீதையும் தானும்,
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகம் தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார் !!
ஸ்ரீராமாயணப் பெருக்கர்,
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் !!
பால காண்டம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ,
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்,
அந்தமில் பேரின்பத்து அடியரோடு,
ஏழுலகம் தனிக்கோல் செல்ல,
வீற்று இருக்கும்,
அயர்வறும் அமரர்கள் அதிபதியான,
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பன் ,
அலை நீர்க்கடலுள் அழுந்தும்
நாவாய் போல்,
ஆவார் ஆர்துணை என்று,
துளங்கும்,நல் அமரர், துயர்தீர,
வல்லரக்கர்,இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி ,
மண்உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய,
அயோத்தி என்னும் அணிநகரத்து,
வெங்கதிரோன் குலத்துக்கு
ஓர் விளக்காய்க்,
கௌசலை தன் குல மதலையாய்த்,
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்,
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்விகாக்க,
நடந்து, வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி,
வல்லரக்கர் உயிர்உண்டு,
கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண் சிலைஇறுத்து,
மைதிலியை மணம் புணர்ந்து ,
இருபத்தொருகால் அரசு களைகட்ட,
மழுவாளேந்தி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு ,
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன் நெடுமணிமாட அயோத்தி எய்தி,அரியணை மேல்,
மன்னன் ஆவான், நிற்க !!!
அயோத்தியா காண்டம்
கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட,
கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு,
மலக்கிய மாமனத்தினனாய், மன்னவனும் மறாது ஒழிய,
குலக்குமரா ! காடுறையப் போ !என்று விடை கொடுப்ப,
இருநிலத்தை வேண்டாது,
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்
ஆங்கொழிந்து,
மைவாய களிறொழிந்து, மா ஒழிந்து, தேர் ஒழிந்து,-
கலன் அணியாதே காமர் எழில்விழல் உடுத்து,
அங்கங்கள் அழகுமாறி,
மான் அமரும் மெல் நோக்கி வைதேகி இன்துணையா,
இளங்கோவும், வாளும், வில்லும் கொண்டு பின் செல்லக்,
கலையும் கரியும் பரிமாவும்,
திரியும் கானம் நடந்து போய்ப்,
பக்தியுடைக் குகன் கடத்தக்,
கங்கை தன்னைக் கடந்து,
வனம் போய்ப் புக்கு , காயோடு நீடுகனி உண்டு.
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று,
சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என் பெற்றாய் கைகேசீ !
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன், என்று வான் ஏறத்
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரக்கூடத்து,
ஆனை புரவி தேரோடு காலாள்
அணிகொண்ட சேனை, சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணையம் வைத்துக் குவலயமும்,
துங்கக் கரியும்,பரியும், இராச்சியமும்,
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்
திருவுடை திசைக்கருமம் திருந்தப் போய்த் தண்டகாரண்யம் புகுந்து!!
ஆரண்ய காண்டம்
தயங்கு மறைமுனிவர்க்கு
'அஞ்சேன்மின் !'என்று அருள் கொடுத்திட்டு,
வெங்கண் விறல்விராதன் உகவில் குனித்து,
வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி,
புலர்ந்து எழுந்த காமத்தால்,
சுடுசினத்துச் சூர்ப்பணகா,
பொன்னிறம் கொண்ட
சீதைக்கு நேராவன் என்றுவரக்,
கொடிமூக்கும்,காது இரண்டும்--
கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்,
கரனொடு தூடணன் தன்உயிரை வாங்க,)
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து,
மலை இலங்கை ஓடிப்புக,
கொடுமையில் கடுவீசை அரக்கன்
அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்,
ஓர் உருவு ஆய மானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து,
இலைக் குரம்பையில், தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து,
நீள்கடல்சூழ் இலங்கையில்,
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோந்து
வம்புலாம கடிகாவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும் பகலும் கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
கிஷ்கிந்தா காண்டம்
வனமருவு கவிஅரசன் தன்னோடு, காதல் கொண்டு,
மராமரங்கள் ஏழும் எய்து,
உருத்து ஏழு வாலி மார்பில்,
ஒரு கணை உருவ ஓட்டி,
கருத்துடைத் தம்பிக்கு,
இன்பக் கதிர்முடி அரசு அளித்து
வானரக் கோன் உடன் இருந்து, வைதேகி தனைத் தேட,
விடுத்த திசைக் கருமம் திருத்தித்,
திறல் விளங்கு மாருதியும்,
மாயோன் தூது உரைத்தல் செய்ய !!
சுந்தர காண்டம்
சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி,
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்,
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு,
"நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் !
அயோத்தி தன்னில் ஓர்,
இட வகையில் எல்லி அம்போது இனிது இருக்க,
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கிய மாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மாமனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்
'குலக்குமரா! காடு உறையப்போ' என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்,
கங்கை தன்னில்,கூர் அணிந்த வேல்வலவன் குகனோடு,
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி
'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் !' என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்;
பொன் ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின்வழி நின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்"
'அயோத்தியர் கோன்உரைத்த அடையாளம்;
'ஈது அவன் கைமோதிரமே'என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு,
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்,
இலங்கையர் கோன்மாக் கடிகாவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர்புரையும் அடிஇணை பணிய !!
யுத்த காண்டம்
காண எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று,
அலையார் கடற்கரை வீற்றிருந்து,
செல்வ வீடணற்கு நல்லவனாய்,
விரிநீர் இலங்கை அருளிச்,
சரண் புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய,
மலையதனால் அணைகட்டி,மறுகரையை ஏறி,
இலங்கை பொடி பொடியாகச்,
சிலைமலி நெஞ்சரங்கள் செலஉய்த்துக்
கும்பனோடு நிகும்பனும் பட
இந்திரசித் அழியக், கும்பகர்ணன் பட,
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர் போலக் குழமணிதூரம்
ஆட,
இலங்கை மன்னன்முடி, ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிரச்,
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து,
வென்றி கொண்ட செருக்களத்துக்,
கடிக்கமல நான்முகனும், கண் மூன்றத்தானும்,
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து,
மணிமுடி பணிதர,அடியினை வணங்கக்
கோலத், திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேர் ஏறிச்
சீரணிந்த குகனோடு கூடி,
அங்கண் நெடு மதிள்புடை சூழ் அயோத்தி எய்தி,
நன்னீராடிப், பொங்கிள ஆடை அரையில்சாத்தித்,
திருச்செய்ய, முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து,
சூட்டு நன்மாலைகள் அணிந்து,
பரதனும், தம்பி சத்துருக்கனனும்,
இலக்குமனனோடு, இரவும் நண்பகலும்
வடிவினை இல்லாச்
சங்கு தங்கு முன்கை நங்கை,
மலர்க்குழலாள் சீதையும் தானும்,
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகம் தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார் !!
ஸ்ரீராமாயணப் பெருக்கர்,
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் !!