Do you know why you should not cut or shave your hair on Tuesdays?

செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.

இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள்.

ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.

இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .

செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள்

இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.

இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் .

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள்.

இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது,
நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது.

இதற்கு ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.

செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார்.

மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார்.

இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது.

எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது.

செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது.

உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும்.

எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்

இந்த ஜோதிட குறிப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபட்டுள்ளனவா என்கிற விபரம் எனக்கு தெரியவில்லை.

இருப்பினும் நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருவதால் நாமும் இதை பின்பற்றலாமே!

நண்பர்களுக்காக செவ்வாய் கிழமை சிறப்பை பற்றிய கூடுதல் தகவல்:

பெயர், புகழ், செல்வம் மேம்பட செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய புனித நூல்கள் கூறும்
எளிய ரகசிய பரிகாரம்

இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது.

இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது.

மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள்.

இதனால் அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.
 
செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.

இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள்.

ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.

இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .

செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள்

இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.

இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் .

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள்.

இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது,
நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது.

இதற்கு ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.

செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார்.

மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார்.

இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது.

எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது.

செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது.

உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும்.

எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்

இந்த ஜோதிட குறிப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபட்டுள்ளனவா என்கிற விபரம் எனக்கு தெரியவில்லை.

இருப்பினும் நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருவதால் நாமும் இதை பின்பற்றலாமே!

நண்பர்களுக்காக செவ்வாய் கிழமை சிறப்பை பற்றிய கூடுதல் தகவல்:

பெயர், புகழ், செல்வம் மேம்பட செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய புனித நூல்கள் கூறும்
எளிய ரகசிய பரிகாரம்

இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது.

இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது.

மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள்.

இதனால் அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.
மிக நல்ல பதிவு. மக்கள் இன்னும் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:
1. நீங்கள் பிறந்த நாள். திங்கள், செவ்வாய், முதலியன அசுப காரியங்களிலிருந்து தவிர்க்கவும் கவனமாகவும் அந்த நாளைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. உங்கள் தற்போதைய கிரஹ சஞ்சாரம். ஒவ்வொரு பிறப்பும் நடைபெறுகிறது, அந்த நேரத்தில் உங்கள் ஜாதகம் நீங்கள் ஒரு கிரஹத்தில் பிறந்தவர் என்பதைக் காட்டுகிறது, மேலும் பல ஆண்டுகளாக மீதமுள்ள கிரகம். உங்கள் வாழ்க்கையை கடந்து செல்லும் அனைத்து கிரகங்களும் 120 ஆண்டுகள் ஆகும். எனவே ஒவ்வொரு கிரஹா காலமும் அந்த கிரகத்தின் வருடங்களின் எண்ணிக்கையைக் கடக்கும் போது, அந்த நாளும் முக்கியமானது. எனவே அதையும் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
3. சனிக்கிழமை: உங்கள் தாடியை ஷேவ் செய்வதை நிறுத்துங்கள் மற்றும் கூர்மையான கருவி மற்றும் கூர்மையான வார்த்தைகளில் கவனமாக இருங்கள். நினைவில் கொள்.
4. நாள் பார்க்க காலை டிவி ஆஸ்ட்ரோவை தவிர்க்கவும். உங்கள் நல்ல விஷயங்கள் மற்றும் உங்கள் கடமை மிகவும் முக்கியமானது.
மார்னிங் ஆஸ்ட்ரோவைப் பின்தொடர்ந்து காரியங்களைச் செய்வது பற்றி தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை எனக்கு நினைவிருக்கிறது.
நமக்கு எல்லா நேரங்களிலும் சுய பாதுகாப்பு தேவை. வார்த்தைகள் முதலில் வரும் எனவே 24/7 உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்துங்கள்.
பொதுவாக உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அதே போல் நாக்கைக் கட்டுப்படுத்தினால் வெளிப்புறப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இயற்கையாகவே எல்லா இடங்களிலும் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது மற்றும் நாம் கோபப்படுகிறோம். எனவே எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை கவனியுங்கள்.
 
Back
Top