P.J.
0
ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
Source: Dinamalar
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
Source: Dinamalar