சிராவண மாதம் பெளர்ணமி திதி யஜுர் வேதிகளுக்கும், சிராவண மாதம் அவிட்டம் நக்ஷத்திரம் ருக் வேதிகளுக்கும் கடை பிடிக்க வேண்டிய வழிபாடு. சந்திரனுக்கு ஒரு தடவை சுற்றி வர 353 நாட்கள் ஆகிறது. சூர்யனுக்கு ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள் தேவை படுகிறது.
அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமை முதல் அடுத்த அம்மாவாசை வரை சாந்திர மான மாதம்.
27 நக்ஷத்திரங்களில் சந்திரன் உலா வரும். இந்த 27 நக்ஷத்திரங்களை ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் வீதம்108 பாதங்கள் ஆக்கி இதை12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்களாக போட்டார்கள்.
இந்த சாந்திர மான மாதங்களின் பெயர்:- சைத்ரம், வைசாகம், ஜ்யேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆசுவினம், கார்த்திகம், மார்க்க சிரம், பெளஷம், மாகம், பால்குணம் என பெயரிட்டார்கள்.
சூரியனுக்கு செளர மான மாதம் என அழைப்பர். சூரியன் ஒரு ராசியிலிருந்து மறு ராசிக்கு செல்வதே மாத பிறப்பு ஆகும். இந்த மாத பிறப்பின் பெயர்கள் :- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ,துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். என்பது.
இதன் தமிழ் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி கார்த்திகை, மார்கழி, தை, மாசி பங்குனி என்பதாகும்.
வளர்பிறை பெளர்ணமி முதல் சதுர்தசி திதி முடையவும், தேய்பிறை அம்மாவாசை முதல் சதுர்தசி முடியவும் 30 திதிகள் வரும்.
27 நக்ஷதிரத்திற்கு 27 யோகங்கள் உண்டு. 15 திதிகளுக்கு 11 சர கரணங்கள், 4 ஸ்திர கரணங்கள் உண்டு.
இந்த சாந்திரமான மாத அடிப்படையில் தான் எல்லா பண்டிகைகள், விரதங்கள் நிச்சயிக்க படுகிறது. இது வியாச ரூபமாக மஹா விஷ்ணு தர்ம சாஸ்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
அந்த காலததில் பெண்களை படிக்கவே விட மாட்டர்கள். அவர்களுக்கு சுலபமாக புரிவதற்காக( தமிழ் மாதம் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும்,) ஆவணி அவிட்டம் என்று ம், வட்டம் கழித்த எட்டாம் நாள் கோகுலாஷ்டமி என்றும் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
தர்ம சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராவண மாதம் பெளர்ணமி திதியும், சிராவண மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும் ஸ்ரீ ஜயந்தி என பார்க்க வேண்டும்.
தற்காலத்தில் பெண்களும் அதிகம் படிப்பதால் வேறுபாடுகளை சுலபமாக புரிந்து கொள்கிறார்கள்.