Visalakshi Ramani
Well-known member
#140. தச அவதாரம்.
மனிதர்களும் எடுக்கின்றார்கள்,
மண்ணுலகில் தச அவதாரங்கள்!
தந்தைக்கு நல்ல ஒரு மகனாகவும்,
மகனுக்குத் நல்ல தந்தையாகவும்;
தாத்தாவுக்குச் செல்லப் பேரனாகவும்,
பேரனுக்குப் பிடித்த தாத்தாவாகவும்;
அண்ணனுக்குத் தக்க தம்பியாகவும்,
தம்பிக்கு ஏற்ற அண்ணனாகவும்;
ஆசிரியருக்குச் சிறந்த மாணவனாகவும்,
மாணவனுக்கு உகந்த ஆசிரியராகவும்;
மாமனாருக்குப் பிரிய மருமகனாகவும்,
மருமகனுக்கு, உயர்ந்த மாமனாராகவும்!
கண்ணன் எடுத்த அவதாரங்களைக்
கண்கள் குளிரக் காண்போமா, நாம்?
மனிதர்களுக்கு அவன் ஒரு மாணிக்கம்;
மனம் கவர்ந்த மன்மதன், மாதர்களுக்கு!
கோபர்களுக்கு, நெருங்கிய நண்பன் அவன்;
கோபியருக்கோ, உள்ளம் கவர்ந்த காதலன்.
தேவகி வசுதேவருக்கு, நோற்றுப் பெற்ற புதல்வன்;
பாவிகளுக்குத் தண்டனை அளிக்கும் தர்மதேவன்.
பொல்லாத கம்சனுக்கு, அச்சம் தரும் காலதேவன்;
பொது ஜனங்களுக்கு, அவன் ஒரு சிறு குழந்தை.
யோகியருக்கு, எல்லாம் வல்ல பரமாத்மா;
ஞானியருக்கு, அவன் ஞானம் தந்த பரமன்.
கண்டவர் மனங்களில், கம்சன் அரண்மனையில்,
கண்ணன் நிலை பெற்று விளங்கியது, இவ்வண்ணமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

மனிதர்களும் எடுக்கின்றார்கள்,
மண்ணுலகில் தச அவதாரங்கள்!
தந்தைக்கு நல்ல ஒரு மகனாகவும்,
மகனுக்குத் நல்ல தந்தையாகவும்;
தாத்தாவுக்குச் செல்லப் பேரனாகவும்,
பேரனுக்குப் பிடித்த தாத்தாவாகவும்;
அண்ணனுக்குத் தக்க தம்பியாகவும்,
தம்பிக்கு ஏற்ற அண்ணனாகவும்;
ஆசிரியருக்குச் சிறந்த மாணவனாகவும்,
மாணவனுக்கு உகந்த ஆசிரியராகவும்;
மாமனாருக்குப் பிரிய மருமகனாகவும்,
மருமகனுக்கு, உயர்ந்த மாமனாராகவும்!
கண்ணன் எடுத்த அவதாரங்களைக்
கண்கள் குளிரக் காண்போமா, நாம்?
மனிதர்களுக்கு அவன் ஒரு மாணிக்கம்;
மனம் கவர்ந்த மன்மதன், மாதர்களுக்கு!
கோபர்களுக்கு, நெருங்கிய நண்பன் அவன்;
கோபியருக்கோ, உள்ளம் கவர்ந்த காதலன்.
தேவகி வசுதேவருக்கு, நோற்றுப் பெற்ற புதல்வன்;
பாவிகளுக்குத் தண்டனை அளிக்கும் தர்மதேவன்.
பொல்லாத கம்சனுக்கு, அச்சம் தரும் காலதேவன்;
பொது ஜனங்களுக்கு, அவன் ஒரு சிறு குழந்தை.
யோகியருக்கு, எல்லாம் வல்ல பரமாத்மா;
ஞானியருக்கு, அவன் ஞானம் தந்த பரமன்.
கண்டவர் மனங்களில், கம்சன் அரண்மனையில்,
கண்ணன் நிலை பெற்று விளங்கியது, இவ்வண்ணமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.