• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96 tharpanam.

kgopalan

Active member
01/11/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் அது செய்யக் கூடிய முறை மேலும் அதற்கான காலங்கள் இவற்றையெல்லாம் நாம் விரிவாக பார்த்து வந்தோம். அந்த தர்ப்பணங்களை நாம் எந்தெந்த பித்ருக்களை உத்தேசித்து செய்கிறோம் என்பதையும், மேலும் அதன் மூலம் வரக்கூடிய பலன்களையும், விரிவாக நாம் தெரிந்து கொண்டோம்.*

*இப்பொழுது சில புண்ணிய கால தர்ப்பணங்கள் சில காரணங்களினால் விட்டுப் போனால், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம்.*

*இந்த சந்தர்ப்பத்தில் பரிகாரம் என்பதை, நிறைய விதமாக நாம் செய்கிறோம். இந்த பரிகாரங்களுக்காண பலன்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரிகாரம் என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால், எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பரிகாரத்தை செய்திருப்போம்.*

*குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து நன்றாக படிப்பு வரவேண்டும், நல்ல இடத்தில் உத்தியோகம் கிடைக்க வேண்டும், கல்யாணம் ஆக வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள், ஐஸ்வர்யம்

நிறைய வேண்டும், கடைசியில் பிதுர் தோஷங்கள் போக வேண்டும் என்பதற்கான பரிகாரங்கள் வரையில், அனைவரும் பலனை உத்தேசித்து ஏதோ ஒரு ஸ்தலங்களில் நாம் செய்திருப்போம். அதனால் பரிகாரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.*
*ஆனால் இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி. இரண்டு விதமான பலன்களை பற்றி பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*

*ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பித்து, இரவு படுத்துக் கொள்ளும் வரையிலும் நாம், செய்யவேண்டிய தான கடமைகள் என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு.*

*அதிலே சிலவற்றை செய்கிறோம் பலவற்றை விட்டுவிடுகிறோம். இந்த பரிகாரங்கள் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், நாம் செய்ய வேண்டிய காரியத்தை முறை தவறி செய்தால் சில பரிகாரங்கள். சில காரியங்களை செய்யாது விட்டு விட்டால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*

*பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் காண்பித்து இருப்பார்கள். இரண்டு விதமான பலன்களை உடையதாக இந்த பிராயச்சித்தங்கள் இருக்கின்றன. ஒரு சில பிராயசித்தங்கள்*
*நாம் செய்த தவறுகளுக்கு சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தக் கஷ்டங்களை ஒரேசமயத்தில் அனுபவிக்காமல், நிறைந்து அனுபவிக்க செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள்.*

*ஒரு சில பரிகாரங்கள் அடுத்து செய்ய வேண்டியது தான காரியத்திற்கு அதிகாரத்தை கொடுக்கக் கூடியவை. இப்படியாக இரண்டு விதமான பரிகாரங்கள் நமக்கு பலன்களை கொடுக்கின்றன.*

*இதற்கு லௌகீகமான உதாரணங்களை பார்த்தோமேயானால், ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம் அந்தக் கடனை சரியான முறையில் நாம் திருப்பி செலுத்தவில்லை. சில சமயங்களில் கட்டியும் சில சமயம் கட்டாமலும் குறைத்தும் கட்டி இருக்கிறோம். இது எல்லாம் முறைதவறி செய்தது. இதற்கு என்ன பரிகாரம் என்றால் வங்கியிலிருந்து நமக்கு தகவல்

தெரிவித்து நம்மை நேரடியாக வரவழைத்து நம்மிடம் ஏன் உன்னால் கட்ட முடியவில்லை என்று கேட்டு, அந்தத் தொகையை நம்மால் கட்ட முடியவில்லை என்றால் அதை நிறந்து கட்டுவதற்கான வழிமுறைகளை காண்பித்து கொடுப்பார்கள்.*

*ஐந்து வருடத்தில் கட்ட முடியவில்லை என்றால் மேலும் இரண்டு மூன்று வருடங்களில் நீட்டித்து தவணை அதிகரித்து தொகையை குறைத்து கொடுப்பார்கள்.*

*இன்னுமொரு வழி கடன் வாங்கியிருக்கிறார் ஆனால் கட்டவே இல்லை. இங்கு அவருக்கு பரிகாரங்கள் வேறு மாதிரி. இந்த சமயத்தில் அவனுடைய சொத்துக்களை முடக்குவது அவனுடைய வங்கி கணக்கை முடக்குவது இதுபோன்று செய்வார்கள். இப்படி இரண்டு விதமான நடவடிக்கைகள் லோகத்தில் இருக்கின்றது நாம் பார்க்கிறோம்.*

*இதை நாம் மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் தான் நம்முடைய கர்மாக்களில் நித்திய கர்மாக்கள் என்று இருக்கின்றன. தினமும் நாம் செய்ய வேண்டியது தான கர்மாக்கள்.*

*இந்த நித்திய கர்மாக்களை முறையாக நாம் செய்யாவிடில் அதற்கான பிராயச்சித்தம். செய்யவே இல்லை என்றால் அதற்கான சில பரிகாரங்கள். இப்படி இரண்டு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.*

*பரிகாரங்களுக்கு ஆன பலன்கள் என்று பார்த்தால், நாம் விட்டுவிட்டோம் என்று அது எவ்வாறு வெளிப்படும், மகரிஷிகள் இதைச் சொல்லும் பொழுது ஜென்மாந்திரமாக நாம் செய்த தவறுகள் அதாவது போன போன பிறவிகளில் செய்த தவறுகள், அதாவது செய்யவேண்டிய தான கர்மாக்களை முறையாக செய்யாமலும், நல்லது செய்யவே இல்லை என்றாலோ, விட்டதின்னுடைய பாபங்கள் எல்லாம் நம்மிடத்தில் எவ்வாறு வெளிப்படும் என்றால், வியாதி ரூபமாக வந்து சேரும். ஒரு நோயின் மூலமாக நமக்கு அதை காண்பிக்கும்.*

*நீ செய்ய வேண்டிய கர்மாக்களை சரியாக செய்யவில்லை என்பதை அந்த நோய் மூலம் நமக்கு உணர்த்தும் அதை நாம் பார்த்து விழித்துக்கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நமக்கு எதனால் வந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழியைக் கூட புராணங்கள் மூலமாக மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*

*அதற்கு கர்ம விபாக அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறது. அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கிறது. இந்த கர்ம விபாகத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லக்கூடிய புராணம் கருட புராணம். இதில் தனியாகவே ஒரு அத்தியாயம் சொல்லப்பட்டு இருக்கிறது மற்ற புராணங்களிலும் ஆங்காங்கே காண்பிக்கப்படுகின்றன.*

*இந்த கர்ம விபாகம் என்றால் என்ன அர்த்தம்? நாம் செய்யவேண்டிய கர்மாக்களை விட்டதினால் அல்லது செய்யாமலேயே இருந்ததினால் அல்லது தவறாக செய்ததினால், வந்த தான பலன்களை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பதை காண்பிப்பது தான் கர்ம விபாக அத்தியாயம்.*

*கருட புராணத்தில் ஒருவன், அவன் இருக்கக்கூடிய தான நிலைக்கும், அவர் இருக்கக்கூடிய தான வசதிக்கும் சம்மந்தம் இல்லாமலேயே இருக்கிறது. இதை உலகத்திலே நாம் பார்க்கிறோம். பணம் காசு ஐஸ்வர்யம் எல்லாம் நிறைய இருக்கின்றது ஆனால் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றார். நேர்மாறாக புத்திசாலியாக இருக்கிறான் ஆனால் பணம்

காசுகள் ஐஸ்வர்யம் எதுவுமில்லை. பணம் காசு ஐஸ்வர்யம் மனைவி குழந்தைகள் வீடு வாசல் எல்லாம் சௌகரியமாக இருக்கிறது ஆனால் வியாதி படுத்துகிறது. ஒரு வசதியும் இல்லை ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வேறுபாடுகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் ஊகிக்க முடியாது.*

*இதை நாம் சரிவர புரிந்து கொள்ளாத அதனால்தான் நாம் செய்யக்கூடிய கர்மாவுக்கும் அதனால் அனுபவிக்கக்கூடிய பலன்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பார்க்கிறோம். ஆனால் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி தான் இந்த கர்ம விபாகா அத்தியாயம் காண்பிக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top