• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96 tharpanam.

kgopalan

Active member
21/10/2020 No Broadcaste*
*22/10/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களில் ஒரே நாளில் 2 அல்லது 3 புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை முதலில் செய்வது எப்படி செய்வது என்பதை பற்றி மேலும் தொடர்கிறார்.*

*அதிலே சமான தந்திரம் என்ற விஷயத்தை பார்த்தோம். அதாவது ஒரே நாளில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் அந்த புண்ணிய காலங்களில் பெயர்களை சொல்லலாமே தவிர சிராத்தங்களை சொல்லக்கூடாது தர்ம சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை என்பதை பார்த்தோம்.*

*மேலும் அம்மாவாசை உடன் புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால் எதை எதை செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தோம்.*

*இப்பொழுது அமாவாசை இல்லாமல் புண்ணிய காலங்களுடன் வேறு என்ன சேர்ந்து வரும் வந்தால் அது எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.*

*முதலில் இரண்டு புண்ணிய காலங்கள் வந்தால் ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்பதை பார்ப்போம். இதில் வய்தீபாத புண்ணிய காலமும் மன்வாதி புண்ணிய காலம் சேர்ந்து வரும். இப்பொழுது நாம் பார்க்கக்கூடியது எல்லாம் அனேகமாக சேர்ந்து வரக்கூடியவைகள்.*

*இவைகள் இல்லாமல் எப்பவாவது ஒரு முறை அதிகப்படியான புண்ணிய காலங்கள் சேர்ந்து வரும். அந்தந்த சமயங்களில் நமக்கு செய்து வைக்கக்கூடிய வாத்தியார் இடத்திலோ அல்லது தர்மசாஸ்திரம் படித்து தெரிந்தவர்கள் இடத்திலோ நாம் கேட்டு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.*
*வய்தீயபாதமும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்பொழுது வய்தீபாத புண்ணிய காலம் செய்தால் போதும். மன்வாதி புண்ணிய காலம் தனியாக செய்ய வேண்டியதில்லை.*

*வய்தீயபாதமும் அஷ்டகாவும் சேர்ந்து வந்தால், திஸ்ரோஷ்டகாஹா என்று மூன்று நாட்கள் மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரக்கூடிய தான கிருஷ்ண பக்ஷ சப்தமி அஷ்டமி நவமி திதிகளில் வரும். அந்த தினங்களில் வய்தீபாத புண்ணிய காலங்கள் வரலாம்.

அப்படி இவை இரண்டும் சேர்ந்து வந்தால் அஷ்டகா புண்ணிய கால ஒரு தர்ப்பணம் செய்தால் போதும். வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை ஒரு தர்ப்பணம் தான்.*

*வைதிருதியும் மன்வாதியும் சேர்ந்து வரும். அப்படி ஒரு இரண்டும் சேர்ந்து வரும்போது மன்வாதி புண்ய காலம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*

*வைதிருதி புண்ணிய காலமும் மாச பிறப்பும் சேர்ந்து வரும். சங்கரமண புண்ணிய காலம். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்தால் போதும். ஒரு தர்ப்பணம் தான்.*
*இவைகளெல்லாம் ஒரு தர்ப்பணம் செய்யக்கூடிய விஷயங்கள். அதேபோல இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய புண்ணிய காலங்கள் என்று வரும்.*

*மஹாலய பக்ஷத்தில் வய்தீபாத புண்ணிய காலம் வரும். இதை பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள் வய்தீபாத மஹாளயம் என்று. இவை இரண்டும் சேர்ந்து வந்தால், முதலில் வய்தீபாத புண்ணிய கால தர்ப்பணம் செய்து, பின்பு மஹாளய புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.*
*சங்கரமனமும் மன்வாதியும் சேர்ந்து வரும், இவை இரண்டும் சேர்ந்து வரும் பட்சத்தில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும் முதலில், மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்து பின்பு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.*

*மஹாளய பக்ஷத்தில் யுகாதி புண்ணியகாலம் சேர்ந்து வரும் இது எல்லாம் அனேகமாக எப்பவாவது ஒரு முறை வரக்கூடிய புண்ணிய காலங்கள். இவை இரண்டும் சேர்ந்து வரும்போது முதலில் யுகாதி புண்ணியகாலம் செய்ய வேண்டும், பின்பு மகாலய பக்ஷ புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களெல்லாம் இரண்டு புண்ணிய காலங்கள் சேர்ந்து வரக்கூடியவைகள்.*

*மூன்று / நான்கு புண்ணிய காலங்கள் கூட சேர்ந்து வரும். இப்பொழுது உதாரணத்திற்கு வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்களும் சேர்ந்து வரும் ஒரே தினத்தில். இந்த நேரங்களில் இரண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். முதலில் சங்கரமன புண்ணிய கால தர்ப்பணம். பிறகு மன்வாதி புண்ய கால தர்ப்பணம்.*

*இதோடு கூட கிரகண புண்ணிய காலம் சேரும். அனேகமாக சந்திரகிரகணம் சேர்ந்து வரும். இப்பொழுது அஸ்தமனத்திற்கு பிறகு இராத்தரி சந்திர கிரகணம் வரும். அப்போது இரவு கிரகண புண்ணிய காலம் செய்ய வேண்டும்.*

*இப்படி வைதிருதி சங்கரமனம் மன்வாதி இந்த மூன்று புண்ணிய காலங்கள் கூட ஒரே நாளில் சேர்ந்து வரும். இவைகள் அனேகமாக இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வரலாம். அந்த சமயம் இந்த முறையில் அதை செய்ய வேண்டும்.*

*இவைகள் இல்லாமல் விசேஷமாக சில புண்ணிய காலங்கள் வரும். அவைகளை அவ்வப்போது நாம் கேட்டு தீர்மானித்து செய்து கொள்ள வேண்டும். பொதுவாக இது எல்லாம் லிஸ்ட் ஆகவே போட்டு நமக்கு கொடுத்து விடுவார்கள்.*

*அதை நாம் வாங்கி வைத்துக்கொண்டு செய்யவேண்டும் தமிழிலேயே செய்வதைத் திருந்தச் செய் என்று சொல்வது உண்டு. எந்த காரியத்தை செய்தாலும் உருப்படியான முறையில் செய்ய வேண்டும். ஏதோ செய்கிறோம் என்று செய்யக்கூடாது.

நன்றாக தெரிந்து கொண்டு அதை புரிந்துகொண்டு நாம் செய்தால் தான், அப்போதுதான் நமக்கு மனதிற்கும் திருப்தியாகவும் அதனுடைய பலன்கள் முழுவதும் ஆகவும் ரிஷிகளின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும்.*

*இப்போது இதுவரை நாம் பார்த்த புண்ணிய காலங்கள் சேர்ந்து வந்தால், இந்த முறையில் தெரிந்து வைத்துக்கொண்டு நாம் அதை செய்ய வேண்டும். ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.*
*ஏனென்றால் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களில் ஏதாவது 1 அல்லது 2 விட்டுப் போகும் என்றால் அதற்கான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.*

*ஏனென்றால் இவர்கள் எல்லாம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கின்றன. எப்படி நாம் சாப்பிடுவதும் சந்தியாவந்தனம் செய்வதும் நித்தியமோ அதேபோல்தான், தர்ப்பணங்கள் செய்வது.*
*பொதுவாக ஒரு நித்திய கர்மாவை விட்டுவிட்டால் பிரத்தியவாயம் வரும். அதாவது

விட்டதினால் வரக்கூடிய பாபங்கள். அதோடு கூட இல்லாமல் இந்த பிதுர் கர்மாக்களை நாம் விட்டுவிட்டால், பிரத்தியவாயம் வருகிறது என்பது ஒரு பக்கம், அது இல்லாமல் சாபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். அந்த சாபங்களில் இருந்து நாம் எப்படி விடுபடுவது என்றால், அதற்கான பரிகாரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*

*அதாவது சில மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போய்விட்டால் அதற்கான மந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த பரிகார மந்திரங்களை நாம் ஜெபம் செய்வதினால், விட்டுப் போனதினால் வரக்கூடிய தோஷங்கள் போக்கும் மேலும் பிதுருக்களுடைய சாபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம்.*

*அம்மாவாசை முதற்கொண்டு ஒவ்வொரு புண்ணிய காலங்களும் காரணங்கள் இல்லாமல் விட்டு போனால், அதற்கான மந்திரங்களை தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது. அவைகள் என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top