40 samskarangal.

kgopalan

Active member
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் முதல் 40 ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்க்க இருக்கிறோம்*
*சம்ஸ்காரங்கள் என்பது மிக மிக அவசியம் நாம் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் கூட முடிந்தால் செய்யலாம் முடியாவிடில் தவறில்லை. ஆனால் சரியான காலத்தில் இந்த சம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் அப்படி செய்தாலே, நாம் அதிகப்படியாக எதுவுமே செய்ய வேண்டி வராது. வேதம் நமக்கு அப்படி அமைத்துக் கொடுக்கிறது.*

*இதன் அடிப்படையிலேதான் மனுஸ்மிருதியில் மனு இதனுடைய தேவையை பல இடங்களில் காண்பிக்கிறார். நீ பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தாய் உன்னுடைய கடைசி காலமும் தனியாகத்தான் போகும் என்று மனு காண்பிக்கிறார். உனக்கு எது கூடவே இருக்கும் என்றால் நீ செய்த தர்மம். அதாவது நீ செய்யக் கூடிய கடமையிலிருந்து அதாவது சம்ஸ்காரங்களில் இருந்து வரக்கூடிய பலன் தான்.*

*மேலும் உன்னுடைய கடைசி காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத்தான் வேதம் இந்த ஸம்ஸ்காரங்களை அமைத்துக் கொடுக்கிறது. அதனால் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். சொந்தங்கள் நிறைந்திருக்கிறது வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் வீடு இருக்கிறது என்றெல்லாம் நீ நினைக்காதே, அவைகள் எல்லாம் உன் கூட வராது தர்மம் தான் உனக்கு துணை புரியும். அதனால் நீ எவ்வளவு தர்மம் செய்து இருக்கிறாயோ அதற்கு தகுந்தார்போல் தான் கடைசியில் அமையும்.*

*ஏதோ வாழ்க்கையில் ஒன்றை பெரியதாக செய்துவிட்டு நான் எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. சிறிது சிறிதாக உன்னுடைய கடமையை நீ செய்திருக்க வேண்டும். சகாயத்திற்கு ஆக கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக உன்னுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரவேண்டும்.*

*தர்மம் என்கின்ற ஒரு சகாயத்தினால் தான் தாண்ட முடியாத நரகங்களை கூட நீ தாண்டி விடலாம். அந்த அளவுக்கு உனக்கு தகுதி இருக்கிறது. அதனால்தான் நீ என் தூக்கத்தை எல்லாம் தாண்டி செல்கிறாய் என்பதை தெரிந்து கொள். தர்மத்தை அனுஷ்டிக்கின்றவனும் தர்மத்தினால் தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்பவனும் எப்போதும் அவனுக்கு மரணம் என்பது தெரியவே தெரியாது அவனுடைய வாழ்க்கையில். அப்படி பிரம்ம ரூபமாக பரமேஸ்வரனை ஆராதிக்கின்றான் இந்த சம்ஸ்காரங்களின் மூலமாக.*

*அதனால் பரமேச்வரனுடைய அனுகிரகத்தாலும் நீ செய்யக்கூடிய இந்த தர்மத்தினாலும் உயர்ந்த ஒரு உலகம் உனக்கு கிடைக்கும் அதனால் சுருதிகள் என்று சொல்லக்கூடிய வேதமும் ஸ்மிருதிகள் என்று சொல்லக்கூடிய தர்ம சாஸ்திரமும் எது உனக்கு உயர்ந்தது என்று காட்டுகிறதோ அதை நீ செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.*

*அவரவர்களுடைய கர்மாக்களின் மூலம்தான் அவரவர்களுக்கு சரீரம் கிடைக்கின்றது அந்த சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த சம்ஸ்காரங்கள் செய்யப்படவேண்டும். அவனுடைய எண்ணம்/சுற்று/நட்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும். அவனுடைய கடைசி காலம் அனாயாசமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து கஷ்டபட்டு துக்கப்பட்டு இல்லாமல், வேண்டுமானால் இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும்.*

*மேலும் மறுபிறவியும் ஆரோக்கியமாக கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்ய வேண்டும். இப்படி இந்த அளவுக்கு மனு முக்கியத்துவத்தை காண்பிக்கிறார். அப்படி இல்லை என்றால் நீ மிருகங்களைப் போல் அதாவது பிராணிகளைப் போல் உன் ஜென்மா ஆகிவிடும். இவைகளுக்கெல்லாம் உதாரணங்கள் புராணங்களில் நிறைய சொல்லப் படுகிறது. இது விஷயமாக கருடபுராணத்தில் தர்ம விபாஹா அத்தியாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.*

*இது அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கின்றது. ஒரே இடத்திலேயே சொல்லாமல் பதினெட்டு புராணங்களிலும் விரிவாக விளக்கி சொல்லியிருக்கிறார் வியாசர். கொஞ்சம் கொஞ்சமாக நாம் படித்தால் தான் நம்முடைய மனதில் பதியும் என்பதினால் அனைத்து புராணங்களிலும் இதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.*

*அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரையும் அந்த புராணமே காண்பிக்கிறது. ஒருவன் சம்ஸ்காரம் எதுவும் செய்து கொள்ளவில்லை அல்லது முடிந்ததை செய்கிறான் என்றால் அவனுக்கு கடஹா என்று பெயர் இதை கருடபுராணம் சொல்கிறது. கடஹா என்றால் அதற்கு உதாரணம் கருடபுராணம் காண்பிக்கிறது.*

*நண்டு இருக்கிறது அதனுடைய ஜீவிதம் அதாவது வாழ்க்கையை பார்த்தால் அது தனக்காகவே வாழும் அனைவரோடும் சேர்ந்து வாழாது, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழாது. இஷ்டப்பட்ட இடத்திற்கு செல்லும் கடைசியில் தானாகவே வினையை தேடிக் கொண்டு மாண்டு போகும். அதாவது ஆடி மாதத்தில் வரப்பில் தண்ணி ஓடும், அதனால் வரப்பின் இரண்டு ஓரமும் ஈரமாக இருக்கும் அப்போது இந்த நண்டு குட்டியாக இருக்கும் போதே தாயாரை விட்டு பிரிந்து வந்துவிடும்.

பின்பு அது மிருதுவாக உள்ள அந்த ஈர மண்ணிலே ஒரு துளை போடும் பின் அதன் உள்ளே சென்றுவிடும். பின்பு அந்த துளையின் உள்ளே ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாசலை சின்னதாக அடைத்துவிடும். ஏனென்றால் வேறு ஒரு நண்டு உள்ளே வரக்கூடாது என்பதற்காக. சின்ன குட்டியாக இருக்கும்போது ஒரு இன்ச் அளவுதான் இருக்கும் அந்த அளவுக்கு வைத்துவிடும். அந்த துளையின் வழியாக தண்ணீரானது வந்து போய்க்கொண்டு சுத்தமாகவே இருக்கும்.*

*அந்தத் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய புழுக்கள் பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டே வரும், இப்படி ஒரு ஆறு மாத காலம் அந்த கூட்டின் உள்ளே வாழும். அறுவடை காலம்

வரும்பொழுது அந்த வரப்பு எல்லாவற்றையும் அடைத்து விடுவார்கள். அப்போது அந்த மண் எல்லாம் நன்றாக காய்ந்து விடும். அப்பொழுதும் அந்த துறையின் உள்ளே தண்ணீர் இருக்கும் அதை வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டு வரும்.*
*கோடை காலம் வந்தவுடன் நன்றாக காய்ந்து போய்விடும் அந்த வாசலும் அடைந்துவிடும். பிறகு அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யும் பொழுது அதனுடைய உடலளவு பெருத்து விடும்.

அப்பொழுது அந்த வாசலை இடிக்க முயற்சி செய்யும் ஆனால் முடியாது ஏனென்றால் ஆரம்பத்திலேயே நன்றாக கட்டி விடும். அதனால் அதனுள்ளேயே பசி தாகத்தினால் இருந்து இறந்து போய்விடும். அப்படி யார் ஒருவன் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரிவர செய்து கொள்ளாமல் தன் இஷ்டப்படி வாழ்கின்றானோ அவனுக்கு கடஹா என்று பெயர் சூட்டுகிறது கருடபுராணம்.*

*ஏன் இப்படி சொல்லி இருக்கிறது என்றால் நாம் இந்த அளவுக்கு வாழக் கூடாது என்பதற்காகத்தான், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*இந்த சம்ஸ்காரங்கள் மூலமாகத்தான் ஒவ்வொரு ஜீவனும் புதுப்பிக்கப்படுகின்றனர் அதாவது சுத்தமாக்கிறான் என்பதினால்தான் சம்ஸ்காரஹா என்று சொல்லப்பட்டிருக்கிறது.*

*கர்ப்பத்தில் உற்பத்தி ஆனதிலிருந்து ஆரம்பித்து, நாம் செய்து கொண்டு வரக்கூடிய இந்த சம்ஸ்காரங்களினால், ஒவ்வொரு ஜீவனும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்பதோடு மட்டுமல்லாமல், பிறவிப்பயனை அடைகின்ற வரையிலும் இவைகள் நமக்கு துணை புரிகின்றன.*

*பிறவிப்பயன் என்பது மோக்ஷம். இந்த சம்ஸ்காரங்கள் எல்லாம் ஆகாமல் நாம் ஞானத்திற்கு முயற்சி செய்யலாமே தவிர, அது சபலமாக ஆகாது. இந்த சம்ஸ்காரங்கள் மிகவும் துணை புரிகின்றது நாம் ஞானத்தை அடைவதற்கு.*

*அதாவது மீண்டும் இந்த உலகில் நாம் பிறக்காமல் இருப்பதற்கும், அல்லது மீண்டும் இந்த உயர்ந்த மனிதப்பிறவி கிடைப்பதற்கும், உறுதுணையாக இருப்பது தான் இந்த கர்மாக்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கர்ப்பாதானம் முதல் அனைத்து சம்ஸ் காரங்களும்.*
*இதில் முதல் சம்ஸ்காரம் கர்ப்பாதானம் அப்படி என்றால் என்ன? ஆதானம் அதாவது புதியதாக எடுத்துக் கொள்வது. அக்கினியாதானம் என்று ஒன்று உண்டு. முறையாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்து எடுத்துக் கொள்வதற்குப் பெயர். அதாவது அக்னியை எடுத்துக் கொள்வது என்று அர்த்தம்.*

*அதேபோல்தான் கர்ப்பாதானம் என்றால், ஒரு பெண்ணை விவாகம் செய்துகொண்டு, உன்னுடைய ஆயுட் காலம் முடிய நான் பார்த்துக்கொள்கிறேன், உனக்கு வாழ்க்கையில் என்னென்ன தேவையோ அனைத்தையும் நான் கொடுக்கிறேன், என்று அக்னியையும், பல மகான்களையும், தேவதைகளையும், சாட்சியாகக் கொண்டு ஒரு பெண்ணை நாம் எடுத்துக் கொள்வதுதான் விவாகம் என்று பெயர். அந்த விவாகம் என்பது எதற்காக என்று சொல்கின்ற பொழுது, நல்ல சந்ததிகளை அடைவதற்காக என்று சொல்லப்பட்டிருக்கிறது.*

*அதுமட்டுமல்ல தர்மம் செய்வதற்கு நல்ல சந்ததிகளை அடைவதற்கு மோட்சத்தை அடைவதற்கு இந்த மூன்று பலன்களுக்கு தான் நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம் சங்கல்பம் செய்து கொள்கிறோம்.*

*தர்மம் என்றால் என்ன இந்த 40 சம்ஸ்காரங்கள் தான் தர்மம் என்று பெயர். இவைகளை செய்து கொள்வதற்கும் செய்து வைப்பதற்கும் நல்ல சந்ததிகளை அடைவதற்காகவும் மோக்ஷத்தை அடைவதற்காகவும் இந்த விவாகம் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணினுடைய கர்ப்பத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் ஒரு நல்ல சந்ததியை அடைவதற்காக. ஆகையினாலே தான் அதற்கு கர்ப்பாதானம் என்று சொல்கிறோம்.*

*_நம்முடைய ஒரு ஆசைக்காக அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் ஒரு சிசுவை உற்பத்தி செய்து நாம் எடுத்துக் கொள்கிறோம். அதன் மூலம் நம்முடைய சந்ததிகளை நாம் அடைகிறோம். இதற்கு கர்ப்பாதானம் என்று பெயர். இது யாருக்கு என்று சொல்கின்ற பொழுது, புத்திரன் என்று யாருக்கு பிறக்க வேண்டுமோ, நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும் ராம் கடனைத் தீர்த்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை யாருக்கு இருக்கிறதோ அவனுக்கு இந்த கர்ப்பாதானம் சொல்லப்பட்டிருக்கிறது._*

*_ஆசைக்காக என்று நினைக்கக் கூடாது. அதற்காக கர்ப்பாதானம் இல்லை ஒரு பெண்ணினுடைய சேர்க்கை என்பது ஆசைக்காக வா இல்லை. மிக உயர்ந்த ஒரு சம்ஸ்காரம் ஆகா சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் விளையாட்டாக போய்விட்டது இந்த நாட்களில். அப்படி கூடாது. வேதம் சொல்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் பிறக்கின்ற போதே மூன்று கடன்கள் உடன் தான் பிறக்கிறோம் தேவ கடன், ரிஷி கடன், பிதுர் கடன் என்று மூன்று கடன்கள்._*

*ஒரு ஜீவன் உற்பத்தியாகின்ற பொழுது இந்த மூன்று பேருடைய துணைகளால் தான் நாம் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறோம். இந்த உடல் நல்ல எண்ணங்கள் நல்ல குடும்பம் இவர்கள் எல்லாம் இந்த மூன்று பேருடைய அனுக்கிரகத்தினால் தான் கிடைக்கிறது. அந்தக் கடனை நாம் தீர்க்க வேண்டும்.*

*எப்படி தீர்ப்பது என்றால், ஒழுக்கத்தோடு இந்த உலகத்தில் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய தான படிப்பை அடைந்து, நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்வதன்மூலம், ரிஷிகளின் உடைய கடன் தீர்கிறது. யஞ்யங்கள் செய்வதானாலும், செய்து வைப்பதினாலும் தேவதைகளின் உடைய கடன்கள் தீர்கிறது. யஞ்யங்கள் நிறைய இருக்கின்றன அவைகள் என்னென்ன என்பதை பின்னால் பார்க்கலாம். நல்ல சந்ததிகளை நாம் அடைவது நாலே, பித்ருக்கள் கடன் தீர்கிறது. சந்ததிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரஜாஹா சந்ததிகள் என்று அர்த்தம்.*

*அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, எந்த குழந்தையாக இருந்தாலும் சந்ததிகள் என்று பெயர். இந்த மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கவேண்டும். அதாவது ஒழுக்கமாக வாழவேண்டும் நல்ல படிப்பை படிக்க வேண்டும். நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய வேண்டும். யாகங்கள் செய்ய வேண்டும். நல்ல சந்ததிகளை அடைய வேண்டும். வேதம் இதை நமக்கு காண்பிக்கிறது.*

*இது விஷயமாக தர்மசாஸ்திரம் நிறைய தகவல்களை நமக்குச் சொல்கிறது. வசிஷ்டர் சொல்கின்ற பொழுது, ஒருவனுக்கு சுத்தமாக கடன்கள் தீர வேண்டுமென்றால், அதில் முக்கியமாக செய்ய வேண்டியது சந்ததிகள் ஏற்பட வேண்டும். குழந்தை என்று பிறந்து அதனுடைய முகத்தை நாம் பார்ப்பதினாலேயே கடன் தீர்வது மட்டுமல்ல தேவதைகள் மிகவும் சந்தோஷப் படுகிறார்கள்.*
*_தேவதைகளின் அனு கிரகத்திற்கு நாம் பாத்திரம் ஆகிறோம் என்று வசிஷ்டர் சொல்கிறார்.

அப்படி அந்த அளவுக்கு முக்கியம் சந்ததிகளை நாம் அடைவது. அப்படி இந்த நல்ல சந்ததிகளை அடைவதற்கு ஆரம்பம் தான் இந்த கர்ப்பாதானம் என்கின்ற சம்ஸ்காரம். மேற்கொண்டு அடுத்த உபநிஷத்தில் பார்ப்போம்._*
 
Back
Top