16 வார்த்தை ராமாயணம்

"பிறந்தார், #வளர்ந்தார், #கற்றார், பெற்றார், மணந்தார், #சிறந்தார், #துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், #அலைந்தார், அழித்தார்,செழித்தார், #துறந்தார், #துவண்டார், ஆண்டார், #மீண்டார்

விளக்கம்:

1. பிறந்தார்:

1 ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2. வளர்ந்தார்:

தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3. கற்றார்:

#வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4. பெற்றார்:

வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5. மணந்தார்:

ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து #மண்ணின் மகளாம் சீதையை #மணந்தது.

6. சிறந்தார்:

அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும், தன் உயரிய #குணங்களால் இடம் #பிடித்து சிறந்து விளங்கியது.

7. துறந்தார்:

கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட #ராஜ்ஜியத்தை துறந்து #வனவாழ்வை #ஏற்றது.

8. நெகிழ்ந்தார்:

அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.

குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய #அன்பினையும், தன்னலமற்ற #குணத்தையும், தியாகத்தையும், #விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.

அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் #அன்பிலே நெகிழ்ந்தது.

சுக்ரீவர் படையினரின் சேவையில் #நெகிழ்ந்தது.

விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக #ஆஞ்சநேயரின் சேவையைக் #கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் #எதுவுமில்லை. #என்னால் முடிந்தது #என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை #அணைத்துக்கொண்டது.

9. இழந்தார்:

மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை #தொலைத்தது.

10. அலைந்தார்:

அன்னை சீதையை தேடி அலைந்தது.

11. அழித்தார்:

இலங்கையை அழித்தது.

12. செழித்தார்:*

சீதையை மீண்டும் பெற்று, #அகமும்_முகமும் செழித்தது.

ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று, செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் #திரும்பியது.

13. துறந்தார்:

அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை #சீதையைத்_துறந்தது.

14. துவண்டார்:

அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில்
துவள செய்தது.

15. ஆண்டார்:

என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.*

16. மீண்டார்:

பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".*
 
Back
Top