திருமாலின் முழுமையான வடிவம் என்பதால், ஆதிவராஹர் என்றும், பூமியைக் காத்ததால் பூவராஹர் என்றும் இவர் போற்றப்படுகிறார்.
ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். பூமி இல்லாததால் புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவால் இயலவில்லை.
பிரம்மா விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக வெளிவந்த நாராயணன், பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழியவும் அவதரித்தார்.
பகவான் வராக வடிவெடுத்து கர்ஜனை செய்தார். வராக மூர்த்தியின் கர்ஜனையால் அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன.
நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், ஸ்மிருதிகளும் புராணங்களும் செவிகளாகவும், சூரிய - சந்திரர் இரு கண்களாகவும், நாகராஜன் வாலாகவும், யாகங்கள் கோரைப் பற்களாகவும், அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, கட்டை விரல் அளவுள்ள வராக வடிவெடுத்து, சில நொடிகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியுற்று சமுத்திரத்தினுள் மூழ்கினார். அரக்கனுடன் போரிட்டு அவனை சம்ஹரித்து பூமிதேவியைக் காத்து ரட்சித்தார். அதனால் சுவாமி பூவராக மூர்த்தி எனப்பட்டார்.
வராஹ வடிவம்கொண்டு திருமால் பூமிக்கு வந்த நாளே, வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம், திருக்கூடலூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும் : --
காயத்ரி மந்திரம் : --
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் ... !!!
ஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். பூமி இல்லாததால் புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவால் இயலவில்லை.
பிரம்மா விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக வெளிவந்த நாராயணன், பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழியவும் அவதரித்தார்.
பகவான் வராக வடிவெடுத்து கர்ஜனை செய்தார். வராக மூர்த்தியின் கர்ஜனையால் அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன.
நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், ஸ்மிருதிகளும் புராணங்களும் செவிகளாகவும், சூரிய - சந்திரர் இரு கண்களாகவும், நாகராஜன் வாலாகவும், யாகங்கள் கோரைப் பற்களாகவும், அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, கட்டை விரல் அளவுள்ள வராக வடிவெடுத்து, சில நொடிகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியுற்று சமுத்திரத்தினுள் மூழ்கினார். அரக்கனுடன் போரிட்டு அவனை சம்ஹரித்து பூமிதேவியைக் காத்து ரட்சித்தார். அதனால் சுவாமி பூவராக மூர்த்தி எனப்பட்டார்.
வராஹ வடிவம்கொண்டு திருமால் பூமிக்கு வந்த நாளே, வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம், திருக்கூடலூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும் : --
காயத்ரி மந்திரம் : --
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் ... !!!