ஸ்ரீ தயா சதகம்
அநுகுண தசார்ப்பிதேந
ஸ்ரீ தர கருணே ஸமாஹித ஸ்நேஹா
சமயஸி தம : ப்ரஜாநாம்
சாஸ்த்ர மயேந ஸ்த்திர ப்ரதீபேந (18)
- ஸ்ரீமதே நிகமாந்தமஹா தேசிகன் அருளிய ஸ்ரீ தயா சதகம்.
பொருள்: ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே ! உலகில் இருளில் வழிதடுமாறாதிருப்பதற்காக எண்ணெய் வார்த்துத் திரியிட்டு விளக்கை ஏற்றி வைப்பர். அவ்வொளியால் மக்கள் தவறான வழியிற் சென்று தடுமாறாமல் நேர்வழியிற் செல்லலாகும். நீ உலகுக்கெல்லாம் தாயாயுள்ளாய் , எல்லா மக்களும் உன் குழந்தைகள் . அவர்கள் பால் நீ கொண்டுள்ள அன்புதான் நீ கொடுக்கும் விளக்குக்கு எண்ணெய்யாகும். அவர்களுக்கு ஸமயத்தில் தலையெடுக்கும் நற்குணமே திரியாகும். நீ வெளியிடும் வேதங்கள் முதலிய சாஸ்த்ரங்களே அவர்களுக்குக் கொடுக்கும் சாசுவதமான விளக்காகும். அவர்களின் அஞ்ஞானமே விளக்கால் ஒழியும் இருளாகும்.
மக்களுக்கு நற்குணம் வாய்க்கும் ஸமயம் பார்த்து மிக்க அன்புடன் வெளியிடும் சாஸ்த்ரங்களின் கருத்தை அவர்கள் உணர்ந்து தங்கள் அஞ்ஞானம் ஒழிந்து நல்ல தெளிவு பெற்றுத் தவறான செயல்களை விலக்கி நேரிய வழியில் நடந்து நல்வாழ்வு பெறச் செய்கின்றாய்.
அநுகுண தசார்ப்பிதேந
ஸ்ரீ தர கருணே ஸமாஹித ஸ்நேஹா
சமயஸி தம : ப்ரஜாநாம்
சாஸ்த்ர மயேந ஸ்த்திர ப்ரதீபேந (18)
- ஸ்ரீமதே நிகமாந்தமஹா தேசிகன் அருளிய ஸ்ரீ தயா சதகம்.
பொருள்: ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே ! உலகில் இருளில் வழிதடுமாறாதிருப்பதற்காக எண்ணெய் வார்த்துத் திரியிட்டு விளக்கை ஏற்றி வைப்பர். அவ்வொளியால் மக்கள் தவறான வழியிற் சென்று தடுமாறாமல் நேர்வழியிற் செல்லலாகும். நீ உலகுக்கெல்லாம் தாயாயுள்ளாய் , எல்லா மக்களும் உன் குழந்தைகள் . அவர்கள் பால் நீ கொண்டுள்ள அன்புதான் நீ கொடுக்கும் விளக்குக்கு எண்ணெய்யாகும். அவர்களுக்கு ஸமயத்தில் தலையெடுக்கும் நற்குணமே திரியாகும். நீ வெளியிடும் வேதங்கள் முதலிய சாஸ்த்ரங்களே அவர்களுக்குக் கொடுக்கும் சாசுவதமான விளக்காகும். அவர்களின் அஞ்ஞானமே விளக்கால் ஒழியும் இருளாகும்.
மக்களுக்கு நற்குணம் வாய்க்கும் ஸமயம் பார்த்து மிக்க அன்புடன் வெளியிடும் சாஸ்த்ரங்களின் கருத்தை அவர்கள் உணர்ந்து தங்கள் அஞ்ஞானம் ஒழிந்து நல்ல தெளிவு பெற்றுத் தவறான செயல்களை விலக்கி நேரிய வழியில் நடந்து நல்வாழ்வு பெறச் செய்கின்றாய்.