அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே - பாசமுடன்
பரிவு தரும் பாபாவும் நீயே .......அம்மாவும் நீயே
உற்றாரும் சுற்றாரும் உதறிய போதும்
பற்றுடனே பாதுகாக்கும் பர்த்திவாசனே
துன்பமும் துயரமும் துரத்திய போதும்
அன்புகொண்டு ஓடிவந்து ரக்ஷித்தாயே.....அம்மாவும் நீயே
பாவம்பல எனை விரட்டியபோதும்
பாபா என அழைத்ததுமே மன்னித்தாயே
சத்ய தர்ம ப்ரேமை காட்டும் சாயிதேவா
நித்யமுன் பாத சரணம் தந்தருள்வாயே..... அம்மாவும் நீயே
கீதை தத்வ அர்த்தமதை போதித்தாயே
பாதை பணியில் வழிகாட்டி ஒளி தந்தாயே
சாய்ராம் போற்றிதினம் சேவை செய்வோமே
பாபாபதம் வண்ங்கிநாளும் மகிழ்ந்திடுவோமே.....அம்மாவும் நீயே
மனித தர்மம் சொன்னஸ்ரீ ராம பிரானே
புனித மகா விஷ்ணுரூப மோகன கிருஷ்ணா
பக்த மீரா ப்ரேமை கொண்ட கோகுல பாலா
பாஞ்சாலி மானம் காத்த பரமதயாளா.....அம்மாவும் நீயே
சாயி அருள்வேண்டி தினம் தோத்திரம் செய்வோம்
பாபா பதம் போற்றி நாளும் பஜனையும் செய்வோம்
எந்நாளும் எமைக்காக்கும் எங்கள் பாபா
அந்நாளில் எமையுங்கள் திருவடி சேர்ப்பாய்
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே - பாசமுடன்
பரிவு தரும் பாபாவும் நீயே .......அம்மாவும் நீயே......V Ramaswamy
பரிவு தரும் பாபாவும் நீயே .......அம்மாவும் நீயே
உற்றாரும் சுற்றாரும் உதறிய போதும்
பற்றுடனே பாதுகாக்கும் பர்த்திவாசனே
துன்பமும் துயரமும் துரத்திய போதும்
அன்புகொண்டு ஓடிவந்து ரக்ஷித்தாயே.....அம்மாவும் நீயே
பாவம்பல எனை விரட்டியபோதும்
பாபா என அழைத்ததுமே மன்னித்தாயே
சத்ய தர்ம ப்ரேமை காட்டும் சாயிதேவா
நித்யமுன் பாத சரணம் தந்தருள்வாயே..... அம்மாவும் நீயே
கீதை தத்வ அர்த்தமதை போதித்தாயே
பாதை பணியில் வழிகாட்டி ஒளி தந்தாயே
சாய்ராம் போற்றிதினம் சேவை செய்வோமே
பாபாபதம் வண்ங்கிநாளும் மகிழ்ந்திடுவோமே.....அம்மாவும் நீயே
மனித தர்மம் சொன்னஸ்ரீ ராம பிரானே
புனித மகா விஷ்ணுரூப மோகன கிருஷ்ணா
பக்த மீரா ப்ரேமை கொண்ட கோகுல பாலா
பாஞ்சாலி மானம் காத்த பரமதயாளா.....அம்மாவும் நீயே
சாயி அருள்வேண்டி தினம் தோத்திரம் செய்வோம்
பாபா பதம் போற்றி நாளும் பஜனையும் செய்வோம்
எந்நாளும் எமைக்காக்கும் எங்கள் பாபா
அந்நாளில் எமையுங்கள் திருவடி சேர்ப்பாய்
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே - பாசமுடன்
பரிவு தரும் பாபாவும் நீயே .......அம்மாவும் நீயே......V Ramaswamy