ஸ்ரீ அத்திவரதர் உத்ஸவம் 4ம் நாள் அன்று சேவை சாதித்தபடி
ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸ்ரீ தேவராஜமங்களம்
அத்யாபி ஸ்ர்வபூதாநாம் அபீஷ்ட பலதாயிநே
பிரணதார்த்தி ஹரயாஸ்து பிரபவே மம மங்களம்
பிரணதார்த்தி ஹரவரதன்:
சயனத் திருக்கோலம் ஓய்வைக் குறிக்கும். வீற்றிருந்த தசை முயற்சியின்
ஆரம்பத்தைக் குறிக்கும். நின்ற திருக்கோலம் செயலை செய்யத் செய்ய தயாராக
இருப்பதைக் குறிக்கும். தேவப்பெருமாள் நின்ற திருகோலத்தில் எழுந்தருளி
இருக்கிறாரே! தோன்றிய நாள் தொடங்கி நின்றிருக்க வேணுமோ!
அத்திகிரியின்மீது நிற்பதற்கும் காரணம் உண்டே!
திருக்கச்சிநம்பிகள், பகவானின் ஐந்து நிலைகளையும் ஓரே ஸ்லோகத்தால்
கூறுகிறார். "பரநிலை, வியூகநிலை, விபவநிலை, அந்தர்யாமிநிலை,
அர்ச்சாவதாரநிலை" என ஐந்து நிலைகள்.
" ஹஸ்திசைலேச" என்பது அர்ச்சாவதாரத்தை உணர்த்துகிறது. "ஸ்ரீ மந்" என்பது
ஸ்ரீ வைகுண்டத்தில் திருமகளோடு இருக்கும் பர நிலையை அறிவிக்கிறது.
"அம்புஜலோசன!" என்பது சௌந்தர்யத்தின் வடிவாய் அனைவரையும் கண்ணழகைக்
காட்டி ஆட்கொண்டவிபவத்தை கூறுகிறது. "பிரணதார்த்தி ஹர" என்பது
ஆச்ரிதர்களின் ஆர்த்தியைக் கேட்டு உடனே ரக்ஷிப்பதற்காகப் பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும் வியூக நிலையைச் சொல்லுகிறது. "அச்யுத" என்பது
ஓரிடத்தையும் நழுவவிடாமல் எங்கும் நிறைந்திருக்கும் அந்தர்யாமித்வத்தை
விளக்குகிறது. இந்த ஐந்து நிலைகளையும் நம்பிகள் தேவப்பெருமாளிடம்
காட்டினார்:
"நமஸ்தே ஹஸ்திசைலேச ஸ்ரீமந்நம்புஜலோசன
சரணம் த்வாம் பரப்ந்நோஸ்மி பிரணதார்த்தி ஹராச்யுத"
என்று, அச்ரித ரக்ஷண ஊற்றத்தைக் குறிப்பதற்காகவே "பிரணதார்த்தி ஹரன்"
என்று குறிப்பிடுகிறார்.
நான்முகனை மட்டும் ரக்ஷித்தது போதாது என்று, இன்னும் ரக்ஷிக்க
வேண்டியவர்கள் இன்னும் இருப்பதால் அவர்கள் நம்மை நாடிவருவார்களா! என்று
எதிர்பார்த்து நிற்கிறான்! அவர்களுக்கு அநிஷ்டத்தை நீக்கி இஷ்டத்தைக்
கொடுத்துக் கொண்டு இன்றும் நிற்கிறான் என்பதை,
அத்யாபி ஸ்ர்வபூதாநாம் அபீஷ்ட பலதாயிநே
பிரணதார்த்தி ஹரயாஸ்து பிரபவே மம மங்களம்
என்று நம் மணவாளமாமுனிகள் அருளிச்செய்யும் பாங்கு மறக்கவொண்ணாதிறே!
ரக்ஷ்யாபேக்ஷாம் பிரதிக்ஷதே என்பதற்கேற்ப ஆச்ரித ரக்ஷணத்தையே
எதிர்பார்க்கிறான் என்ற கருத்தை உணர்த்த திருக்கச்சிநம்பிகள் அருளிய
"பிரணதார்த்தி ஹரன்" என்ற வார்த்தையை மணவாளமாமுனிகள் அருளியிருப்பது
சுவைக்கப் பாலது.
எழுத்து ஸ்ரீ Ramanujan Pillailokam swamy
ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸ்ரீ தேவராஜமங்களம்
அத்யாபி ஸ்ர்வபூதாநாம் அபீஷ்ட பலதாயிநே
பிரணதார்த்தி ஹரயாஸ்து பிரபவே மம மங்களம்
பிரணதார்த்தி ஹரவரதன்:
சயனத் திருக்கோலம் ஓய்வைக் குறிக்கும். வீற்றிருந்த தசை முயற்சியின்
ஆரம்பத்தைக் குறிக்கும். நின்ற திருக்கோலம் செயலை செய்யத் செய்ய தயாராக
இருப்பதைக் குறிக்கும். தேவப்பெருமாள் நின்ற திருகோலத்தில் எழுந்தருளி
இருக்கிறாரே! தோன்றிய நாள் தொடங்கி நின்றிருக்க வேணுமோ!
அத்திகிரியின்மீது நிற்பதற்கும் காரணம் உண்டே!
திருக்கச்சிநம்பிகள், பகவானின் ஐந்து நிலைகளையும் ஓரே ஸ்லோகத்தால்
கூறுகிறார். "பரநிலை, வியூகநிலை, விபவநிலை, அந்தர்யாமிநிலை,
அர்ச்சாவதாரநிலை" என ஐந்து நிலைகள்.
" ஹஸ்திசைலேச" என்பது அர்ச்சாவதாரத்தை உணர்த்துகிறது. "ஸ்ரீ மந்" என்பது
ஸ்ரீ வைகுண்டத்தில் திருமகளோடு இருக்கும் பர நிலையை அறிவிக்கிறது.
"அம்புஜலோசன!" என்பது சௌந்தர்யத்தின் வடிவாய் அனைவரையும் கண்ணழகைக்
காட்டி ஆட்கொண்டவிபவத்தை கூறுகிறது. "பிரணதார்த்தி ஹர" என்பது
ஆச்ரிதர்களின் ஆர்த்தியைக் கேட்டு உடனே ரக்ஷிப்பதற்காகப் பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும் வியூக நிலையைச் சொல்லுகிறது. "அச்யுத" என்பது
ஓரிடத்தையும் நழுவவிடாமல் எங்கும் நிறைந்திருக்கும் அந்தர்யாமித்வத்தை
விளக்குகிறது. இந்த ஐந்து நிலைகளையும் நம்பிகள் தேவப்பெருமாளிடம்
காட்டினார்:
"நமஸ்தே ஹஸ்திசைலேச ஸ்ரீமந்நம்புஜலோசன
சரணம் த்வாம் பரப்ந்நோஸ்மி பிரணதார்த்தி ஹராச்யுத"
என்று, அச்ரித ரக்ஷண ஊற்றத்தைக் குறிப்பதற்காகவே "பிரணதார்த்தி ஹரன்"
என்று குறிப்பிடுகிறார்.
நான்முகனை மட்டும் ரக்ஷித்தது போதாது என்று, இன்னும் ரக்ஷிக்க
வேண்டியவர்கள் இன்னும் இருப்பதால் அவர்கள் நம்மை நாடிவருவார்களா! என்று
எதிர்பார்த்து நிற்கிறான்! அவர்களுக்கு அநிஷ்டத்தை நீக்கி இஷ்டத்தைக்
கொடுத்துக் கொண்டு இன்றும் நிற்கிறான் என்பதை,
அத்யாபி ஸ்ர்வபூதாநாம் அபீஷ்ட பலதாயிநே
பிரணதார்த்தி ஹரயாஸ்து பிரபவே மம மங்களம்
என்று நம் மணவாளமாமுனிகள் அருளிச்செய்யும் பாங்கு மறக்கவொண்ணாதிறே!
ரக்ஷ்யாபேக்ஷாம் பிரதிக்ஷதே என்பதற்கேற்ப ஆச்ரித ரக்ஷணத்தையே
எதிர்பார்க்கிறான் என்ற கருத்தை உணர்த்த திருக்கச்சிநம்பிகள் அருளிய
"பிரணதார்த்தி ஹரன்" என்ற வார்த்தையை மணவாளமாமுனிகள் அருளியிருப்பது
சுவைக்கப் பாலது.
எழுத்து ஸ்ரீ Ramanujan Pillailokam swamy