• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் குஷ்பு, நெப

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் குஷ்பு, நெப


ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் குஷ்பு, நெப்போலியன்?

Nepoliyan%201.jpg



திருச்சி:
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவும், பாஜக சார்பில் நடிகர் நெப்போலியனும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால், அவர் எம்.எல்.ஏ பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்ததை அடுத்து, ஸ்ரீரங்கமும் வி.ஐ.பி தொகுதி என்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வி.ஐ.பி அந்தஸ்து கிடைக்கப்போவது உறுதி என்று உற்சாகமாக சொல்லி வருகின்றனர் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸார்.

எப்படி என்று விசாரிக்கப் புகுந்தால், அவர்கள் சொல்லும் விளக்கம் அட இப்படியும் நடக்கலாமோ என்று வியக்க வைக்கிறது.

மேலும் படிக்க: ?????????????? ???? ???????? ??????, ????????????
 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டி பலமா– பலவீனமா?: குழப்பத்தில் தொண்டர்கள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. இத்தேர்தலை முக்கியமான தேர்தலாக கருதுகிறது. அதேபோன்று தி.மு.க.வும் 2016–ல் வரப்போகின்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நினைக்கிறது. எனவே 2 கட்சிகளும் தங்களது முழுபலத்தை காட்டும் வகையில் களத்தில் இறங்கி உள்ளன.

அ.தி.மு.க. சார்பில் 29 அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என தேர்தல் பொறுப்பாளர்கள் 50 பேர் தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 64 பொறுப்பாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜனதா தங்களது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி வரும் பொதுத் தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் தேர்தலாக இடைத்தேர்தலை பயன்படுத்த நினைக்கிறது. இதற்காக தங்கள் கூட்டணி சார்பில் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

பா.ஜனதா போட்டியிட்டால் வேட்பாளராக நெப்போலியன், மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் பார்த்திபன், லலிதா குமாரமங்கலம் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க பரிசீலனை செய்து வருகிறது.


மேலும் படிக்க ?????????? ?????????????? ????? ?????? ??????? ?????? ????? ????????: ???????????? ?????????? || srirangam by election nda participates gain or loss
 
பினாமி ஆட்சிக்கு பாடமாக அமையும் திமுகவின் ஸ்ரீரங்கம் வெற்றி: ஸ்டாலின்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியே அதிமுக ஆட்சிக்குப் பாடமாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்துப் பேசினார்.

''பன்னீர்செல்வம் முதல்வராகும்போது யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். பதவி பறிப்பால் முதல்வர் தொகுதியிலேயே இடைத்தேர்தல் நடப்பது இதுதான் முதல் முறை. இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியே பினாமி ஆட்சிக்குப் பாடமாக இருக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்


Source: http://tamil.thehindu.com/tamilnadu/பினாமி-ஆட்சிக்கு-பாடமாக-அமையும்-திமுகவின்-ஸ்ரீரங்கம்-வெற்றி-ஸ்டாலின்/article6811648.ece
 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளராக சுப்ரமணியம் போட்டி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக சுப்ரமணியம் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் தமிழக பாஜக துணைத் தலைவராக தற்போது பதவி வகிக்கிறார்.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சுப்ரமணியம் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க : BJP announce subramaniam for Srirangam bypoll | ?????????? ????????????: ???? ?????????? ??????????? ?????? - Tamil Oneindia
 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் எந்த கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திருச்சியை சேர்ந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

Read more at: DMDK supports BJP in Srirangam by poll | ?????????? ????????????: ?????? ???? ????????????? ??.??.??.?. ????? - Tamil Oneindia
 
Status
Not open for further replies.
Back
Top