• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்

ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்

ஸ்ரீப்ரகலாதவரதன் திருவடிகளே சரணம்.........!!!


வம்பவிழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி* நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர்பெரிதும் இளையர்* செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவரிவரது உருவம்சொல்லில்*
அம்பவளத்திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா!


திருமங்கையாழ்வார்
பெரியதிருமொழி 9.2.4


திருத்தோள்களிலே பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது; சக்கரமும் சங்கமும்
திருக்கைகளிலுள்ளன (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு (இந்த) ஸ்வாமி
நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்; பெருமதிப்பராயிரா நின்றார்; மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்;
இவருடைய அதரத்தின் நிறம்
சிவந்த பவளமே; அமாநுஷரான இவருடைய உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில் அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்.


தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார். இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார். திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது. உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்கிறார் திருமங்கையாழ்வார்.
 

Latest ads

Back
Top